உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இந்திய மாதர் சங்கம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திய மாதர் சங்கம் (Women's Indian Association) 1917-ல் சென்னையில் நிறுவப்பெற்றது. பெண்கள் கல்வி வசதி பெறுவதற்கும், வாக்குரிமை பெறுவதற்கும், ஆடவருடன் சம உரிமை பெறுவதற்கும் பாடுபடுவதே இதன் நோக்கம். அகில இந்திய மாதர் மாநாட்டையும் அகில ஆசிய மாதர் மாநாட்டையும் நடத்தியது. சென்னையிலுள்ள சேவா சதனம், சிசு உதவிச் சங்கம், ஒளவை இல்லம், மான்டிசோரி பள்ளி ஆகியவை இதன் முயற்சியினால் தோன்றியவை. இது நிலைதவறிய பெண்களுக்கு ஒரு பாதுகாப்பு இல்லம் நடத்திவருகிறது.