கலைக்களஞ்சியம்/இந்திய ரசாயனச் சங்கம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திய ரசாயனச் சங்கம் (Indian Chemical Society) சர் பி. சி. ரே போன்ற பெரிய இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியால் 1924-ல் கல்கத்தாவில் நிறுவப்பெற்றது. சர் பி. சி. ரே முதல் தலைவராயிருந்தார். இதன் நோக்கம் ரசாயன விஞ்ஞானத்தை வளர்ப்பதாகும். இப்போது திங்கள் இதழ் ஒன்றை வெளியிடுகின்றது. அன்றியும் கைத்தொழில் அனுபந்தம் ஒன்று காலாண்டுதோறும் வெளியிடுகின்றது. எல்லா நாடுகளிலிருந்தும் ரசாயன இதழ்களைச் சேகரித்து ஒரு நூல் நிலையம் ஏற்படுத்தியுளது. சர் பி. சி.ரே நினைவு நிதியின் உதவி கொண்டு சொற்பொழிவு நடத்தவும், வெண்கலப் பதக்கப் பரிசு கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளது.