கலைக்களஞ்சியம்/இந்திர விழா

விக்கிமூலம் இலிருந்து

இந்திர விழா: இந்திரனுக்குச் செய்யும் விழா; அகத்தியர் கட்டளைப்படி முசுகுந்தனால் தொடங்கப் பெற்றுச் சோழமன்னர்கள் செய்துவந்தது. காவிரிப்பூம்பட்டினத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்டுவந்தபோது, இதனைச் செய்யாமல் விட்டால் நகரம் கடலாற் கொள்ளப்படும் என்று ஆணையிருந்ததென்றும், நெடுமுடிக் கிள்ளியின் காலத்திற் செய்யாமல் விட்டதால் காவிரிப்பூம் பட்டினம் கடலாற் கொள்ளப்பட்டது என்றும் கூறுவர் (மணிமேகலை).