கெடிலக் கரை நாகரிகம்/கெடில நாட்டுக் கல்வெட்டுகள்

விக்கிமூலம் இலிருந்து
15. கெடில நாட்டுக் கல்வெட்டுகள்

தமிழ் நாட்டில் ஆயிரக் கணக்கான ஊர்களில் பதினாயிரக் கணக்கான கல்வெட்டுகள் இருப்பதைக் கண்டு பிடித்துப் படியெடுத்துச் சிலவற்றை வரிசை எண்களுடன் அரசினர் வெளியிட்டுள்ளனர். கண்டுபிடிக்கப்பட முடியாமல் அழிந்து சிதைந்துபோன கல்வெட்டுகள் பல அழியாமல் சிதையாமல் இருப்பனவற்றுள்ளும் இன்னும் கண்டுபிடிக்கப்படாதவை பல; கண்டுபிடிக்கப்பட்டிருப்பனவற்றுள்ளும் இன்னும் படி எடுக்கப்படாதவை பல படி எடுத்திருப்பனவற்றுள்ளும் இன்னும் அச்சிடப்படாதவை பல படி எடுத்தவற்றுள்ளும் இன்னும் அச்சிடப்படாதவை பத்தோ இருபதோ அல்லது நூறோ இரு நூறோ அல்ல; ஆயிரக் கணக்கானவை இன்னும் அச்சிடப்படவில்லை. எல்லாம் வெளிவந்த்ால் இன்னும் எவ்வளவோ செய்திகள் தெரிந்து கொள்ள முடியுமே!

கல்வெட்டுத்துறையில் தமிழகத்தில் கெடில நாடாகிய நடுநாட்டின் பங்குக்கும் குறைவில்லை. தென்னார்க்காடு மாவட்டத்தில் ஏறக்குறைய முந்நூறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் படி எடுக்கப் பட்டிருக்கின்றன. இம் மாவட்டத்தின் எட்டு வட்டங்களுள், தொண்டை நாட்டைச் சேர்ந்த செஞ்சி வட்டம், சோழ நாட்டைச் சேர்ந்த சிதம்பரம் வட்டம் ஆகியவை நீங்கலாக மற்ற ஆறு வட்டங்களிலும் கல்வெட்டு படி எடுக்கப்பட்ட ஊர்களும் அவற்றிற்கு நேராகக் கல்வெட்டுகளின் எண்களும் வட்ட வாரியாக முறையே வருமாறு:

(110 - 119 என்று எண் கொடுக்கப்பட்டிருந்தால் 110 ஆம் எண்ணுள்ள கல்வெட்டிலிருந்து 119 ஆம் எண்ணுள்ள கல்வெட்டு வரை என்று பொருள் கொள்க.)

கள்ளக்குறிச்சி வட்டம்

கள்ளக்குறிச்சி 280.

ரிஷிவந்தியம் 110 முதல் 119 வரை.

உலகநல்லூர் 166 - 180.

திருவரங்கம் 66; 125 - 134.

கூகையூர் 93 - 124. முடியனுர் 267 - 270; 387 - 389. வரஞ்சரம் 181 - 191.

திருக்கோவலூர் வட்டம்

திருக்கோவலூர் - மேலுர் 1-2; 116 - 131, 243 - 266, 307 - 357.
திருக்கோவலூர் - கீழுர் 3 - 25, 200 - 201; 230 - 306.
அரகண்ட நல்லூர் - 26; 111 - 199; 386 - 391.
மணம் பூண்டி 232 - 233.
அங்கனூர் 379.
அரசங்குப்பம் 74 - 77.
அரியூர் 232 - 236.
அருங்குறுக்கை 259 - 260.
அத்திப் பாக்கம் 381.
ஆதிச்சனூர் 60.
ஆமூர் 307.
ஆர்க்காடு 49.
ஆலூர் 226 - 227.
ஆவியூர் 238 - 239.
இடைக்கல் 293.
இடையாறு 276 - 296., 395,
இல்லனுர் 285 - 286
இறையூர் 192.
உடையா நந்தல் 270.
எயுளத்துரர் 193.
எலவானாசூர் 128 - 179; 471 - 506.
எல்லப்ப நாய்க்கன் பாளையம் 356 - 357.
ஏமப் பேரூர் 513 - 533.
ஒடுவங் குப்பம் 55 - 56.
ஒரத்துர் 281.
கண்டாச்சிபுரம் 57 - 59; 236 - 237.
கரடி 218 - 222.
கழுமலம் 385 - 386.
களமருதுர் 297 - 298.
காங்கியனூர் 455 - 461.
காடகனூர் 69 - 72.
காடியார் 237.
காட்டு இடையாறு 202 - 205.
காட்டுப்பையூர் 256 - 258.
காந்தல வாடி 272. கிங்கிலிவாடி 67 கிருட்ணாபுரம் 223 - 227.
கீரனூர் 217.
கீழப் பாளையம் 507.
குஞ்சரம் 360 - 363.
குண்ணத்துர் 321.
குமாரமங்கலம் 294.
குலதீபமங்கலம் 383.
குளப்பாரை 243.

கூத்தனூர் 323.
கூவனூர் 393 - 394 கொடுக்குப்பட்டு 382.
கொல்லூர் 202 - 207.
கோட்டை மருதுரர் 221 - 222.
சந்தப்பேட்டை 225.
சம்பை 67 - 127; 429 - 445, சாங்கியம் 428.

சிக்காடு 206, சித்த பட்டணம் 462 - 463.
சித்தலிங்க மடம் 261 - 265, 367 - 431.
சித்தாமூர் 68.

சிறுப்பாக்கம் 380.
சிறுவத்துரர் 291.
சுந்தரவாண்டி 371.
செங்கணாங் கொல்லை 231.
சேந்தமங்கலம் 68 - 81, 274 - 279.
சொரயப்பட்டு 384.
சோழ வாண்டிபுரம் 251 - 253, தாயனூர் 234 - 235.
திம்மிச்சூர் 244 - 250 திருநறுங் கொன்றை 299; 381 - 385.
திருநாவலூர் 225 - 273, 325 - 380.
திருப்பயர் 290.
தென்குணம் 327.
தேவடியாள் குப்பம் 450 - 451.
தேவி அகரம் 254, தேவியாநந்தல் 390 - 392.
தொட்டி 223 - 224.
நகர் 303 - 306.
நத்தாமூர் 322.
நரியந்தல் 427 நாயனூர் 73.
நெடுமுடையான் 242.
நெமலி 240 - 241.
நெல்வெண்ணெய் 370 - 381.
நெற்குணம் 208 - 220.
நொணையவாடி 368.
பரமங்கலம் 336.
பரனுர் 61 - 66.
பரிக்கல் 275 - 276.
பரிந்தல் 364 - 365.
பழங் குணம் 369 - 370.
பழங்கூர் 210 - 213.
பள்ளிச்சந்தல் 446 - 449.
பனப்பாடி 400.
பாச்சப் பாளயம் 296.
பாதுர் 278 - 282.
பாலப் பந்தல் 27 - 29; 152 - 165; 401 - 426.
பிள்ளையார் பாளையம் 470.
புகைப்பட்டி 358 - 359.
புத்தமங்கலம் 292.
புல்லூர் 287 - 288.
பூமாலையனூர் 367.
பூவனூர் 324.
பெரும்பாக்கம் 283.
பேரங்கியூர் 199 - 220. 271.
பொய்கை அரசூர் 273.
மணக்குப்பம் 269.
மணலூர் பேட்டை 464 - 469.
மழவராயனூர் 284.
மாரங்கியூர் 78 - 104.
முகையூர் 235.
முண்டீச்சுரம் (கிராமம்) 180 - 198; 735 - 745.
முருக்கம்பாடி 452 - 454.
மெய்யூர் 396 - 399.
மேட்டத்துர் 274.
மேமாளுர் 228 - 230.
மேல பாளையம் 508.
மேல்தாயனூர் 215 - 216.
மேல்வாலை 52 - 53.
மோகலார் 214.
வடகுறும்பூர் 325 - 326.
விளந்தை 239.
வீரங்கிபுரம் 54.
வீரசோழபுரம் 50 - 51.
வீரணாம்பட்டு 255.
வீரப்பாண்டி 40 - 42.
திருவெண்ணெய் நல்லூர் 309 - 324; 420 - 512.
வேங்கூர் 209.
வேளாக்குளம் 228 - 231.
வேளுர் 295.

விருத்தாசலம் வட்டம்

விருத்தாசலம் 39 - 92; 94 - 102; 132 - 140.
பெண்ணாகடம் (திருத்துங்கானை மாடம்) 234 - 273.
நெல்வாயில் அரத்துறை 210 - 233.
எருக்கத்தம் புலியூர் (இராசேந்திர பட்டணம்)138-141; 377-383.
திட்டக்குடி 5 - 27.

நல்லூர்.
142 - 165.

அரியாரவி 274.

ஆதனூர் 125 - 130.

சாத்துக்குடல் 137.

கூத்தக்குடி 315 - 317.

கோபுராபுரம் 275.

திருவட்டத்துறை 198.

தொழுதுரர் 399 - 402.

விழுப்புரம் வட்டம்

விழுப்புரம் 116 - 118.
திருவாமாத்துர் 1 - 71; 402 - 435.
பனையபுரம் 317 - 329; 436 - 438.
விக்கிரவாண்டி 283 - 290.
மாம்பழப்பட்டு 274 - 275.
அகரம் 368 - 390.
அன்னியூர் 620 - 624.
ஆனாங்கூர் 371 - 376.
எண்ணாயிரம் 330 - 351.
ஐயன்கோயில் பட்டு 32 - 35.

கோலியனுர் 110 - 115.

கண்டமங்கலம் 352 - 358.

பாணாமலை 616 - 619.

பூந்தோட்டம் 36 - 38.

மண்டகப்பட்டு 56.

திண்டிவனம் வட்டம்

திண்டிவனம் 30 - 35; 141 - 145; 204 - 218.

கிடங்கில் 222 - 229.

திருவக்கரை 166 - 208.

இரும்பை 277.

ஒழுந்தியாப்பட்டு (அரசிலி) 194 - 198.

ஆலத்துர் 49.

உலகாபுரம் 125 - 145.

பிரமதேசம் 158 - 195.

பெருமுக்கல் 36 - 47.

மரக்கானம் 23 - 43.

கோட்டைக் குப்பம் 175.

நொச்சிகுளம் 48.

கூனிமேடு 241 - 242.

கிளியனூர் 146 - 169.

தாதாபுரம் 822.

ரெட்டணி 389 - 392.

இடையாலம் 31 314

ஒலக்கூர் 351 - 357.

கந்தாடு 44 - 47.
சாத்தாம் பாடி 236 - 237.
வடசிறுவளுர் 382 - 383.
வெள்ளிமேடு பேட்டை 387 - 388.
தேவனுர் 238 - 249.
நாகாபுரம் 384 - 385.
புலியனுர் 386.
பெரமந்துர் 219 - 221.
முன்னூர் 50 - 99.
வேளுர் 100 - 124.
கைராபுரம் 253 - 258.

கடலூர் வட்டம்

கடலூர் 17 - 19; 273 - 282.
திருப்பாதிரிப் புலியூர் 115 - 135; 296 - 302.
மஞ்சக்குப்பம் 199 - 200.

செயின்ட் டேவிட் கோட்டை 84.

எய்தனூர் 141 - 147.

திருச்சோபுரம் 109 - 114.

திருத்தினைநகர் 115 - 127.

வழுதலம் பட்டு 223 - 224.

வேங்கடாம் பேட்டை 140; 366 - 370.

திருவயிந்திரபுரம் 85 - 109; 136 - 137, 243 - 257,

திருக்கண்டேசுரம் 128 - 151.

திருமாணிகுழி 148 - 170

திருவதிகை 28 - 60; 358 - 419

திருத்துறையூர் 207; 421 - 436

திருவாரூர் 131 - 139.

இவ்வூர்களிலேயன்றி, நடு நாட்டைச் சேர்ந்ததும் முன்பு தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்திருந்ததும் இப்போது வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்திருப்பதுமாகிய திருவண்ணாமலையிலும் திருவண்ணாமலை வட்டத்தைச் சேர்ந்த பல ஊர்களிலும் பல கல்வெட்டுகள் உள்ளன. கடலூருக்கு அண்மையிலுள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடலூர் எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கின்ற பாகூர் முதலிய ஊர்களிலும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இதுகாறுங் கூறிவந்த எல்லாக் கல்வெட்டுகளும் நடுநாட்டைச் சேர்ந்த செல்வங்களே, நடுநாட்டுக் கல்வெட்டு இலக்கியங்களின் மாதிரிக்காக உரைநடைக் கல்வெட்டு ஒன்றும் செய்யுள் நடைக் கல்வெட்டு ஒன்றும் காண்போம்:

உரைநடை

(கெடில வடகரை - திருவதிகை வீரட்டானேசுரர் கோயிலில் உள்ளது.)

பல்லவ பரமேச்வர வர்மன் - 8ஆம் நூற்றாண்டு

ஸ்வஸ்தி பூர் பரமேச்சுரப் போத்தரையர்க்கு யாண்டு மூன்றாவது, அவினூர்த்திரு அகத்தீச்வரத்து மஹாதேவர் அடியான் மணியன் திருப்பணி போவதற்கும் திரு அமிதுக்கும் ஒட்டிப் பொலியூட்டு வைத்த பரிசாவது கொறுத்தலை நாச்சன் மண்டை யாழ்வா. ரேத்தது மகிழரேத்தது மேல் உடைய அஞ்னுாற்றுக் காடியும் ஊருணி அகத்துப் பொற்குன்றச் சடங்கவியாரேத்தது மேலை பிராயசெறு வின்றலை றலை உடைய கலம் நெல்முப்பதின் காடியும் பொன் கழஞ்சும் இச் செறுவினுள் பொற்றத்தனார் கூறாயதும் கொடுஞ் செறுவு தலச்சமாடாக நெல் அஞ்பதின் காடிக்கும் பொலி ஊட்டுண்ண உடையது கொறுத்தலை பொற்க்கத்தியார் மகனிடை ஊருணி அகத்து கையீடொற்றி உடைய கலம் பொன் அறு கழஞ்சும் நெற்பதினாற் காடியும் கையீடொற்றி கொறுத்தலைப் பொற்றாழியார்ரிடை ஊருணி அகத்துக் கொண்டனங்குழி இவருடைய நிலத் தின்றலையும் கருப்பெத்தது இவருடைய மூன்று செறுவின் றலையுமாக உடைய கலம் அறுகழஞ்சும் நெல் அறுபதின் காடியும் மிக்கொண்டணங்குழி நடுவில் இரண்டு குழியின்றலையும் கொண்டணங் கிழவர் போழ நன்தியாரிடை உடைய நாற்பதின் காடி நெல்லும் பிண்டி ஊட்டிப் பட்டித் தேவபூதி அங்கமணி பெற்ற செறுவின்றலை உடைய நெல் நாநாற்பதின் காடியும் கொறுத்தலைப் பொற்கத்தியார் மகநிழுக்கங் காட்டுப்பட்டி நிலத்திலும்.லமான பட்டித்தலை உடைய அஞ்ஞாற்றுக்காடியும் கொறுத்தலைப் பொன்னிலனா ரேதத்துப்பட்டி நிலந் தலைச்சை மாடாக உடைய நெல் அஞ்னுாற்றுக் காடியும் அழிசுப் பொற்றிண்டத் திருவேதியார் தலைப் பாடகத்து ஆறு செறுவின்றலை உடைய கலம் அறு கழஞ்சு பொன்னும் இவரிடயே வடபாலை பள்ளச் செறுவின்றலை முப்பதின் காடி நெல்லும் பொலி ஊட்டு அழிசூர் சிற்றயன் தலைப்பாடகத்து மூன்று செறுவின்றலையும் அறுபதின் காடி நெல்லாலும் பதின் அஞ் காடி நெல்லும் பொலி ஊட்டுவதாகவும், இன் நெல் முதலால் பதின் காடியால் ஒரு காடி நெல் பொலி ஊட்டுவதும் பொன் கழஞ்சின் வாய் அறு கால் நெல் பொலி உண்பதாகவும் சபையும் பன்மாஹேச்வரரும். இத் தர்மம் ரrவித்தார் அடி என் தலை மேலன. கால்கடு தட்டம்.”

செய்யுள்

(கெடிலக் கீழ்கரை - திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ளது. தென்னிந்தியச் சாசனத் தொகுதி ஏழு). அடைய வளைந்தான் வீரர்

அருள்புனை தொண்டையர் கோமா
னடைய வளைந்தபிரான்
பொருபடை மன்னவர் வீர
மொன்றே பொரும்போர் தொலைந்தும்
வருகதிர் முந்து குணதிசை
ஆள்வர் வடக்கிருப்பர்
வெருவெரு தென்திசை கொள்வர்
செல்லாநிற்பர் மேற்றிசைக்கே.”

இச் செய்யுள், தொண்டையர் கோமான் அடைய வளைந்தான் என்னும் வேந்தனுடைய படைமறவரின் பெருமையை அறிவிக்கிறது.

நடுநாட்டு ஊர்களிலுள்ள ஆயிரக்கணக்கான கல் வெட்டுகளைப் படித்துப் பார்த்தால், அந்நாட்டை அவ்வப்போது ஆண்ட மன்னர்கள், அவர்தம் காலம், ஆட்சிமுறை, அறச் செயல்கள், நடுநாட்டு மக்களின் கல்வி - சமயம் - குடும்பம் முதலியன பற்றிய வாழ்க்கை நிலைகள், நாட்டின் உட்பிரிவுகள், ஊர்களின் பழைய பெயர்கள், நாட்டு வளம் முதலிய பல்வேறு செய்திகளை அறிந்து கொள்ளலாம்.

கெடிலநாட்டுக் கல்வெட்டுகள் அனைத்திலும் கெடில நாடு தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தையும் இங்கே எடுத்துக் கூறுவதென்றால் அதற்கு ஒர் எல்லையே யிராது; இந்நூல் ஆயிரக்கணக்கான பக்கங்களுடையதாய் மிக விரிந்துவிடும்.

“பண்டு தமிழில் உரைநடை இல்லை; ஆங்கிலேயர் வந்த பிறகே பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே தமிழில் உரைநடை தோன்றிற்று” என்று குறைகூறுபவர்க்கு, ஆங்கிலமொழி உருவாவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே - இற்றைக்கு 1500 ஆண்டு காலத்திற்கு முன்பே தமிழில் உரைநடை இருந்தது என்ற சூடான பதிலை நம்நாட்டுக் கல்வெட்டுகள் அளிக்கும்.