கெடிலக் கரை நாகரிகம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

கெடிலக்கரை நாகரிகம்
 

பேராசிரியர்

புலவர் சுந்தர சண்முகனார்

 

மெய்யப்பன்
தமிழாய்வகம்

53, புதுத்தெரு, சிதம்பரம் - 608001

முதல் பதிப்பு : டிசம்பர், 2001
திருவள்ளுவர் ஆண்டு: 2032
உரிமை : ஆசிரியர்க்கு
விலை : ரூ. 135.00
மெய்யப்பன் தமிழாய்வக வெளியீட்டு எண்: 52

பதிப்பாசிரியர்

முனைவர் ச. மெய்யப்பன்

டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.
தமிழகப் புலவர்குழுவின் துணைத் தலைவர். பல்கலைக்கழகங்களின் பதிப்புக்குழு உறுப்பினர்.
பல பல்கலைக்கழகங்களில் அறக்கட்டளைகள் நிறுவியுள்ளார்.
தமிழக அரசின் தமிழ்ச்சங்கப் பலகை - குறள் பீடத்தின் பொதுக்குழு உறுப்பினர்.
'வள்ளுவம்' இதழின் சிறப்பாசிரியர்.
பத்து நூல்களின் ஆசிரியர்.
இவர் எழுதிய தாகூர் நூல் தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
குன்றக்குடி அடிகளார் தமிழவேள் என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
பதிப்புச்செம்மல் என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.


கிடைக்குமிடம் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608 001.
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.
9, சிவப்பிரகாசம் தெரு, தி.நகர், சென்னை - 600 017.
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001.
15, ராஜ வீதி, கோயமுத்துர் - 641 001.
28, நந்தி கோயில் தெரு, திருச்சி - 620 002.
தொலைபேசி :
சிதம்பரம் : 30069
சென்னை : 5361039
தி. நகர் : 4357832
மதுரை : 622853
கோயமுத்தூர் : 397155
திருச்சி : 706450



அச்சிட்டோர் சக்தி பிராசஸ், சென்னை - 81. 5956006, 5950331



சுந்தர சண்முகனார்

1922 – 1997

கெடில நதி நாகரிகம்

பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன்

நிறுவனர் : மெய்யப்பன் தமிழாய்வகம்


உலகின் சிறந்த நாகரிகங்கள் ஆற்றோரங்களிலே தோன்றியுள்ளன. ஆற்றின் வெள்ளப்பெருக்கு நிலத்தை வளப்படுத்துவதோடு மனிதகுல நாகரிகத்தையும் வளப்படுத்தியுள்ளது. ஆற்றோரம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியும் மருதநிலமாகும். மருத நிலத்து மக்கள் நிலம் திருத்தி, பயிர் வளர்ப்பதோடு பண்பாட்டையும் வளர்த்துள்ளனர் என்பது வரலாறு கூறும் உண்மை.

அறிஞர் அண்ணா அவர்கள் 'ஆற்றோரம்' எனும் தலைப்பில் நாகரிக வளர்ச்சி பற்றி ஒரு பொழிவு நிகழ்த்தியுள்ளார்.

சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா. பி. சேதுப்பிள்ளை 'ஆற்றங்கரையில்' எனும் நூலில் தமிழ் நாகரிகம் வளர்ந்து செழித்த கதையை வரைந்துள்ளார்.

நைல் நதி நாகரிகம், தேம்ஸ் நதி நாகரிகம் என அயல் நாடுகளில் நாகரிகம் ஆற்றோடு இணைத்துப் பேசப்படுகின்றது. இந்தியாவின் வடபகுதி நாகரிகம் சிந்துவெளி நாகரிகம், கங்கைச் சமவெளி நாகரிகம் என ஆற்றின் பேரால் அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் பொருநை ஆற்றங்கரையில் திருநெல்வேலியும், வைகைக் கரையில் மதுரையும், காவிரிக் கரையில் உறையூர், திருச்சி, திருவரங்கம் ஆகியனவும் பாலாற்றங்கரையில் காஞ்சியும் ஆறுகள் வளர்த்த பண்ணைகளாகச் செழித்துள்ளன. இந்நகரங்களின் தோற்றமும், எழுச்சியும், வளர்ச்சியும் ஆறுகளின் கொடையே. கெடில நதி வளர்த்த நாகரிகத்தைப் பற்றி இந்நூல் விரிவாகப் பேசுகிறது. ஆற்றின் தொடக்கம் முதல் அது கடலில் கலக்கும் வரை, பாய்ந்து வந்த பகுதிகளில் உள்ள ஊரும், நகரும், நாடும் பற்றிய செய்திகள் நுட்பமாக விளக்கப்பட்டுள்ளன. பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் நிலயியலும், மக்கள் இயல்பும், வரலாற்றுச் செய்திகளும் வகுத்தும் தொகுத்தும் வரையப்பட்டுள்ளன. இன்றைய விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கெடில ஆறு வளர்த்த நதி நாகரிகம் பற்றி, மிகச் சிறந்ததொரு ஆவணமாக இவ்வாய்வு நூல் திகழ்கிறது.

ஆசிரியர் சுந்தர சண்முகனார் ஆற்றோரத்தில் பயணம் செய்து அரிய செய்திகளைத் திரட்டித் தந்துள்ளார். ஆசிரியர், வரலாற்று அறிஞர், சமூகவியல் ஆய்வாளர் ஆதலால் தமிழ்ச் சமூகத்தின் நாகரிக, பண்பாட்டுக் கூறுகளைத் திட்ப நுட்பத்துடன் விளக்குகிறார். நுண்ணறிவும், நூலறிவும் மிக்க ஆசிரியர் தாம் நேரில் சென்று பார்த்த செய்திகளையும் வழிவழியாக வழங்கிவரும் செவிவழிச் செய்திகளையும் பதிவு செய்துள்ளார். ஊர்களின் பேர்களை மட்டுமே கூறாமல், அந்த ஊர்கள் வளர்ந்த கதைகளையும் கதைகதையாய்ச் சொல்லுகிறார். நகரங்களின் பெயர்ப் பட்டியலாக இல்லாமல் நகரங்கள் வளர்த்த நாகரிகங்களையும் அடையாளம் காட்டுகிறார்.

நூலாசிரியர் பன்னூல் பயிற்சி மிக்கவர். பழந்தமிழ் இலக்கியங்களில் ஆழங்கால்பட்டவர். அரிய ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை எழுதிப் பேரும் புகழும், பரிசும் பெற்றவர்.

மிகச் செவ்விய திட்டத்துடன் ஆற்றோரத்தில் நீண்ட நெடிய பயணம் செய்து, பல ஆண்டுகள் உழைத்து, கெடில நதி நாகரிகத்தின் தனிச்சிறப்புக்களைத் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

ஆசிரியர் படைத்த ஒவ்வொரு நூலும் வளர்தமிழுக்கு வளம் சேர்க்கும் அரிய ஆய்வு நூலாக அமைந்துள்ளதை அறிஞர் உலகம் தொடர்ந்து போற்றி வருகிறது.

ஆசிரியர் சுந்தர சண்முகனார் 'தமிழ்ப் புதுவை'க்குப் புகழ் சேர்க்கும் புலவர்; அறிஞர் போற்றும் அறிஞர். தமது நூல்களால் காலத்தை வென்று வாழும் பேராசிரியர். ஆராய்ச்சி மதுகையால் இறவாப்புகழ் பெற்ற ஏந்தல்.

இது ஒரு ஆற்றின் கதையல்ல. ஒரு சமூகத்தின் கதை, ஒரு இனத்தின் கதை, ஒரு நாகரிகத்தின் கதை. ஆற்றங்கரை நாகரிகத்தை அறிவோம், ஆராய்வோம். வளர்வோம்.

முன்னுரை

கெடிலக்கரையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து பழகிய யான், கெடிலக்கரை நாடு பற்றிப் பல்லாண்டுகள் நேரில் பார்த்துப் பட்டறிந்த செய்திகளையும் நூல்களில் படித்தறிந்த செய்திகளையும் தக்கார்வாய்க் கேட்டறிந்த செய்திகளையும் திரட்டி, தேவையான இடங்களில் எனக்குத் தோன்றிய சில ஆராய்ச்சி முடிபுகளையும் இணைத்து, ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் பெயரில் ஒரு பெரிய, புதிய ஆராய்ச்சித் தொகுப்பு நூல் வடிவில் தருகிறேன். உலகில் எகிப்திய நாகரிகம், மெசபட்டோமிய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் முதலியனவாக எத்தனையோ வகை நாகரிகங்கள் பேசப்படுகின்றன. அவையெல்லாம் பழங்காலத்தில் இருந்து மறைந்துபோனவை. அவற்றினும் வேறுபட்டது கெடிலக்கரை நாகரிகம்.

கெடிலக்கரை நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை நாகரிகம் படிப்படியாய் வளர்ந்து முதிர்ந்து நின்று நிலைத்து நிறைவு பெற்றுள்ளநிலை இந்நூலில் பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது. ‘கெடிலக்கரை நாகரிகம்’ இன்னது என்னும் செய்தி இந்நூலின் இறுதிப் பகுதியில் முடிவுரையாய்த் தரப்பட்டிருப்பினும், இந்நூல் முழுவதிலும் உள்ள செய்திகள் கெடிலக்கரை நாகரிகத்தின் விளக்கங்களேயாம். கெடிலக்கரை பற்றிய விவரங்கள் அனைத்தும் அறிந்து கொண்டாலே, ‘கெடிலக்கரை நாகரிகம் இத்தகையது’ என்ற முடிவு தானே கிடைத்து விடுமன்றோ?

இந் நூலில், கெடிலக்கரை நாகரிகத்தைத் தெரிந்துகொள்ள உதவும் தொல்பொருள்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள். கலைகள், பழக்க வழக்கப் பண்பாடுகள், வரலாற்றுக் குறிப்புகள் முதலிய உறுதுணைகள் போதிய அளவு எடுத்துக்காட்டி விளக்கப் பெற்றுள்ளன. இவற்றின் தொகுப்பே இந்நூல் எனவும் கூறலாம். வரலாற்றுக் காலத்துக்கு முந்திய காலந்தொட்டு இன்றுவரையிலும் நிகழ்ந்த பல்வேறு செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

எகிப்திய நாகரிகம், சிந்துவெளி நாகரிகம் போன்ற நாகரிகங்களைப் பற்றிக் கேட்டும் படித்தும் பழகியவர்கள், கெடிலக்கரை நாகரிகம் என்றதும். ‘இந்த நாகரிகம் எங்கே, எப்போது, யாரால் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பட்டது?’ என வினவக்கூடும். மண்ணுக்குள் புதையுண்டு மறைந்துபோன நாகரிகங்களை யல்லவா அகழ்ந்து காணவேண்டும்?

நாகரிகம் என்ற சொல்லுக்கு ‘மறைந்து போனது’ அல்லது ‘அகழ்ந்து கண்டுபிடிக்க வேண்டியது’ என்பதாக எந்த அகராதியிலும் பொருள் இல்லையே. மேலும், எல்லா நாகரிகங்களுமே மண்ணுக்குள் புதைந்து மறைந்து அகழ்ந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இல்லையே! பழைய நாகரிகங்கள் பல மறையாமல், மேலும் மேலும் வளர்ச்சி பெற்றுள்ளன; அவற்றுள் ஒன்றே கெடிலக்கரை நாகரிகம்.

மண்ணுள் மறைந்துபோன இடங்களின் நாகரிகங்களை வெளிப்படுத்தி உலகிற்கு விளம்பரப்படுத்துவது போலவே, மண்ணுள் மறையாது வளர்ச்சி பெற்றிருந்தும், பல்வேறு சூழ்நிலைகளால் வெளியுலகிற்குத் தெரியாதபடி மறைந்திருக்கும் இடங்களின் நாகரிகங்களையும் உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டுவது இன்றியமையாக் கடனாகும். அவ்வாறு உலகினர்க்கு அறிமுகம் செய்தற்கு உரிய நாகரிகங்களுள் கெடிலக்கரை நாகரிகமும் ஒன்று.

உலகினர் ஒருபுறம் இருக்க, இந்தியர்களும்-குறிப்பாகத் தமிழருள் பலரும் இன்னும் கெடிலக்கரை பற்றி அறியாதவராயுள்ளனர். இந்த நூல், சிறப்பாகக் கெடிலக்கரை நாகரிகத்தைத் தமிழர் அனைவர்க்கும் அறிவிப்பதோடு இதன் வாயிலாக, பொதுவாகத் தமிழர் நாகரிகத்தை இந்தியர்க்கும் உலகினர்க்கும் அறிவிக்க முயல்கிறது. கெடிலக்கரை நாகரிகம் பொதுவாகத் தமிழர் நாகரிகத்திற்கு மையமாய் உள்ளது எனலாம்.

வெளியுலகத்தைப் பற்றி அறிய விரும்பும் தமிழ் மக்கள், தங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்நூலும் துணைபுரியும்.

நாம் பிற நாடுகளைப் பற்றி நம் மொழியில் நூல் எழுதுவது போலவே, பிற நாட்டினரும் நம் நாட்டைப் பற்றித் தம் மொழிகளில் நூல் எழுதுகின்றனர். இத்தகைய நூல்களை ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளில் காணலாம். நம் நாட்டைப்பற்றிப் பிரெஞ்சு மொழியில் எழுதப்பெற்றுள்ள மிகப் பெரிய ஒரு நூலின் மேலட்டையில், ‘இந்நூல் 28 படங்களுடன் கூடியது’ என்னும் அறிவிப்பை அண்மையில் கண்டு வியப்புற்றேன். அதனினும் சிறியதான இந்நூலில் ஐம்பத்தொரு (51) விளக்கப் படங்கள் சேர்த்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலானவற்றைக் கெடிலக்கரைப் பகுதிகட்கு நானே நண்பர்களுடன் நேரிற் சென்று பார்த்து எடுத்து வந்தேன். ஒன்பது படங்கள் மட்டும் புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டு நிறுவனத்தால் அளிக்கப் பெற்றவை: அப்படங்களின் கீழே உதவி குறிப்பிடப்பட்டுள்ளது. உதவிக்காக அந் நிறுவனத்திற்கு நான் மிக்க நன்றி செலுத்துகிறேன்.

படம் எடுப்பதற்காகக் கெடிலக்கரைப் பகுதிகட்குச் சென்று வந்த நாள்கள் மகிழ்ச்சியான நாள்கள் - மறக்க முடியாத நாள்கள். சேந்தமங்கலம் கோயில்-கோட்டை போன்ற சில இடங்களை விட்டுப் பிரிந்து வர மனமே வரவில்லை. கெடிலக்கரையில் பார்த்தற்குரிய பகுதிகள் பல உள. நேரில் செல்லாதவர்கள் இந்நூல் வாயிலாகவாவது அறிந்து மகிழலாம்.

தமிழ் நூல்கள் பலவற்றை நோக்க இந்நூல் ஓரளவு பெரியதாகவே வளர்ந்துவிட்டது. ஆனால், ஐரோப்பிய மொழி நூல்கள் பலவற்றை நோக்க இந்நூல் சிறியதே. தரத்துடன் அளவாலும் பெரியனவாயுள்ள நூல்களையே மேலைநாட்டினர் மதிப்பர் எனக் கேள்விப்பட்டுள்ளேன். மிகச் சிறியதை ஒரு நூலாக அவர்கள் மதிப்பதில்லையாம். அதற்கேற்பவே, பிரெஞ்சு மொழி நூல்கள் மிகப் பெரியனவாயிருப்பதைக் காண்கிறேன். இந் நிலைமை, மேலைநாட்டினரின் படிக்கும் ஆர்வத்தையும் ஆற்றலையும் அறிவிக்கிறது. நம்மவர் பலர் இவ்வளவு பெரிய நூல்களைக் கண்டதும் வேர்த்து விறுவிறுத்துப் பெருமூச் செறிகின்றனர். இது நம்மவர்க்குப் படிக்கும் ஆர்வமும் ஆற்றலும் மிகவும் குறைவு என்பதை அறிவிக்கிறது. இந்த இரங்கத்தக்க எளியநிலை இனி மாறவேண்டும்.

வழக்குச் சொற்களையும்ம கலந்து ஓரளவு எளிய நடையில் இந்நூலை எழுதியுள்ளேன். குறிப்பிட்ட ஒரு கொள்கையை வற்புறுத்துவதற்காகவும் தெளிவுபடுத்துவதற்காகவும். சில விடங்களில், முன்பு தெரிவித்த கருத்தையே மீண்டும் தெரிவித்திருக்கிறேன். உரிய இடங்களில் தக்க முறையில் படவிளக்கமும் செய்துள்ளேன். இந்நூல் இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பெற்றால், ‘கெடிலக்கரை நாகரிகம் என்னும் சிறப்புப் பெயர் வாயிலாக, பொதுவாகத் ‘தமிழர் நாகரிகம்’ வெளியுலகிற்கு விளக்கமாகும்.

யான் சென்ற விடங்களிலெல்லாம் கருத்துகள் வழங்கிய அன்பர்கட்கும், படங்கள் எடுத்து உருவாக்க உதவிய நண்பர்கட்கும். இதனை நன்முறையில் வெளியிட்டுள்ள மெய்யப்பன் தமிழாய்வகத்திற்கும் நன்றி செலுத்துகிறேன்.

அரிய ஆய்வு நூல்கள் வெளியிடுவதில் மிகுந்த ஈடுபாடு கொண்டு சிறந்த நூல்களை வெளிக்கொணரும் பேராசிரியர் பதிப்புச்செம்மல் ச. மெய்யப்பன் அவர்கள் நம் பாராட்டுக்கு உரியவர்.

சுந்தர சண்முகன்



தென்னார்க்காடு மாவட்டம்

கெடிலக் கரை

உள்ளுறை
 

பக்கம்

 
1. 13
2. 23
3. 31
4. 37
5. 46
6. 73
7. 78
8. 93
9. 100
10. 111
11. 121
12. 138
13. 164
14. 195
15. 228
16. 237
17. 244
18. 247
19. 256
20. 270
21. 277
22. 286
23. 413
24. 486
25. 499
 509

"https://ta.wikisource.org/w/index.php?title=கெடிலக்_கரை_நாகரிகம்&oldid=1519926" இலிருந்து மீள்விக்கப்பட்டது