தமிழ்ப் பழமொழிகள் 2/3

விக்கிமூலம் இலிருந்து

கக்கரிக்குப் பந்தல், கத்தரிக்குக் கொத்து.

(கொத்துதல்.)

கக்கித் தின்னும் குக்கல்.

(குக்கல்-தாய்.)

கக்கின பிள்ளை தக்கும். 6300


கங்கணம் கட்டிக் கொள்ளுதல். கங்கா ஸ்நானம், துங்கா பானம்.

(துங்கா-துங்கபத்திரை.)

கங்கை ஆடப் போன கடாவைக் கட்டி உழுதானாம்.

கங்கை ஆடப் போனவன் கடாவைக் கட்டி அழுதானாம்.

கங்கை ஆடி மங்கை பார். 6305

(மங்கை-திருக்கண்ண மங்கை.)


கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் போவேனாக.

கங்கைக்கு நிகரான நதியும் இல்லை; காசிக்கு நிகரான பதியும் இல்லை.

கங்கைக்குப் போன கடாவைப் போல.

கங்கைக்குப் போனாலும் கர்மம் தொலையாது.

கங்கையில் ஆடினாலும் கணமும் விடாமல் செய்த பாவம் தீராது. 6310

கங்கையில் ஆடினாலும் கர்மம் தொலையாது.

(முழுகினாலும் செய்த கர்மம்.)

கங்கையில் ஆடினாலும் பாவம் தீராது.

கங்கையில் நீராடுபவன் குட்டையில் முழுக வேணுமோ?

கங்கையில் படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.

(படிந்தாலும் ஆகிவிடுமா?)

கங்கையில் பிறந்த நத்தை சாளக்கிராமம் ஆகாது. 6315

கங்கையில் முழுகினாலும் கடன்காரன் விடான்.

கங்கையில் முழுகினாலும் பாவம் போகாது.

கங்கையில் முளைத்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது.

கங்கையில் மூழ்கினாலும் கறுப்புக் காக்கை வெள்ளை ஆகுமா?

கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமா? 6320


கச்ச நிலமானாலும் கை சேர்க்கை.

கச்சல் கருவாடு மோட்சத்துக்குப் போனாலும் பிச்சைக்காரன் மோட்சத்துக்குப் போக மாட்டான்.

கச்சான் பெண்களுக்கு மச்சான்.

(மட்டக்களப்பு வழக்கு) :(கச்சான். ஆனி ஆடி ஆவணியில் வீசும் வறண்ட காற்று.)

கச்சினம் குளப்பாடு கண்டவர்க்கெல்லாம் சாப்பாடு.

(கச்சினம்-திருக்கைச்சினம் என்ற தலம், குளப்பாடு-அதன் அருகில் உள்ள ஊர்.)

கச்சேரிக்கு முன்னே போகாதே; கழுதைக்குப் பின்னே போகாதே. 6325


கசக்கி மோந்து பார்க்கலாமா?

கசடருக்கு இல்லை கற்றோர் உறவு.

கசடருக்கு யோகம் வந்தால் கண்ணும் மண்ணும் தெரியாது; காதும் கேளாது.

கசடான கல்வியிலும் கல்வியீனம் நலம்.

கசடு அறக் கல்லார்க்கு இசை உறல் இல்லை. 6330


கசந்தாலும் பாகற்காய்; காறினாலும் கருணைக் கிழங்கு. கசந்து வந்தவன் கண்ணைத் துடை.

(கசிந்து வந்தவன்.)

கசாப்புக் கடைக்காரன் தர்ம சாஸ்திரம் பேசுவது போல,

கசாப்புக் கடைக்காரனைக் கண்ட நாய் போல.

கசாப்புக் கடையில் ஈ மொய்த்தது போல. 6335


கசாப்புக் கடையை நாய் காத்த மாதிரி.

கஞ்சனுக்குக் காசு பெரிது கம்மாளனுக்கு மானம் பெரிது.

(கஞ்சன்-உலோபி.)

கஞ்சனுக்குக் கொள்ளை பஞ்சம் இல்லை.

கஞ்சி ஊற்ற ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் உண்டு.

கஞ்சிக் கவலை, கடன்காரர் தொல்லை சொல்லத் தொலையுமோ? 6340


கஞ்சிக்குக் காணம் கொண்டாட்டம்.

(காணம் - கொள்ளுத் துவையல்.)

கஞ்சிக்குப் பயறு போட்டாற் போல,

(கலந்தாற்போல. கொஞ்சமாகப் போடுவார்.)

கஞ்சிக்கு லாட்டரி, கைக்குப் பாட்டரியா?

கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.

கஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி. 6345


கஞ்சி குடித்தது கழுக்காணி, கூழ் குடித்தது குந்தாணி.

கஞ்சி குடித்த மலையாளி சோற்றைக் கண்டால் விடுவானா?

(நாஞ்சில் நாட்டு வழக்கு.)

கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் குடிக்க வேணும்.

கஞ்சித் தண்ணீருக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.

கஞ்சியைக் காலில் கொட்டிக் கொள்ளும் அவசரம். 6350


கஞ்சி வரதப்பா என்றால் எங்கே வரதப்பா என்றானாம்.

கஞ்சி வார்க்க ஆள் இல்லாமல் போனாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.

கட்கத்தில் நிமிண்டுகிற கை நமன் கை.

(அல்லவா?)

கட்கத்தில் வைப்பார்; கருத்தில் வையார்.

கட்டக் கருகுமணி இல்லாமற் போனாலும் பேர் என்னவோ பொன்னம்மாள். 6355

(கரி மணி, பொன்னம்பலம், முத்து மாலை.)


கட்டச் சங்கிலி வாங்கியாகிவிட்டது; ஆனைதான் பாக்கி.

கட்டத் துணி இல்லை; கூத்தியார் இரண்டு பேர்.

கட்டத் துணியும் இல்லை; நக்கத் தவிடும் இல்லை.



கட்டப்பாரை பறக்கச்சே எச்சிற்கலை எனக்கு என்னகதி என்கிறதாம்.

கட்டப்பாறையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிப்பதா? 6360


கட்டப்பாலை முற்றப் பழுக்குமோ?

கட்டாணித் தனமாய்க் கல்யாணம் செய்தான்.

கட்டாந்தரை அட்டை போல.

கட்டாந்தரை அட்டை போலக் கட்டிக்கொண்டு புரளுகிறதா?

(இராம நாடகம்.) .

கட்டாந்தரையில் தேள் கொட்டக் குட்டிச்சுவரில் நெறி கட்டினதாம். 6365


கட்டாந்தரையில் முக்குளிக்கிறது.

கட்டி அடித்தால் என்ன? விட்டு அடித்தால் என்ன?

கட்டி அழுகிற போது கையும் துழாவுகிறதே!

(துழாவுமாம்.)

கட்டி அழுகையிலே. என்மகளே, உனக்குப் பெட்டியிலே கை என்ன?

கட்டி இடமானால் வெட்டி அரசாளலாம். - 6370


கட்டிக் கறக்கிற மாட்டைக் கட்டிக் கறக்க வேண்டும்; கொட்டிக்கறக்கிற மாட்டைக் கொட்டிக் கறக்க வேண்டும்.

கட்டிக் கிடந்தால்தான் உள் காய்ச்சல் தெரியும்.

கட்டிக் கொடுத்த சோறும் கற்றுக் கொடுத்த வார்த்தையும் எவ்வளவு நாளைக்கு?

(சொல்லிக் கொடுத்த. நாளைக்குச் செல்லும்.)

கட்டிடம் கட்டச் சங்கீதம் பாடு,

கட்டிடம் கட்டியவன் முட்டாள்; வாழுகிறவன் சமர்த்தன். 6375


கட்டித் தங்கம் ஆனால் கலீர் என்று ஒலிக்குமா?

(கல என்று.)

கட்டிப்படுத்தால் அல்லவோ உட்காய்ச்சல் தெரியும்?

கட்டிப் பீ எல்லாம் கூழ்ப் பீயாய்க் கரைந்தது.

கட்டிப் பீ எல்லாம் தண்ணீர்ப்பீ ஆச்சுது.



கட்டிமகள் பேச்சு, கல்லுக்குக்கல் அண்டை கொடுத்தது போல். 6380


கட்டிய கட்டிலிருந்து கின்னரி வாசிக்கிறது போல.

கட்டில் உள்ள இடத்தில் பிள்ளை பெற்று சுக்குக் கண்ட இடத்தில் காயம் தின்பாள்.

(கஷாயம் குடிப்பாள்.)

கட்டிலின்மேல் ஏறியும் முறைபார்க்கிறது உண்டா?

(முறையா?) .

கட்டிலைத் திருப்பிப் போட்டால் தலைவலி போகுமா?

(போகும்.)

கட்டி வழி விட்டால் வெட்டி அரசாளலாம். 6385


கட்டி விதை, வெட்டி விதை. கட்டி வைத்த பணத்தைத் தட்டிப் பறித்தாற் போல,

கட்டி வைத்த பூனையை அவிழ்த்துவிட்டு, வாபூஸ் வாபூஸ் என்றால் வருமா?

கட்டிவைத்த முதல் அழியக் கச்சவடம் பண்ணாதே.

(கச்சவடம்-வியாபாரம். குமரி வழக்கு.)

கட்டின கோவணத்தைக் காற்றில் விட்டவன். 6390


கட்டின பசுப் போல்.

கட்டின பெண்சாதி இருக்கக் காத்தாயியைக் கண் அடித்தானாம்.

கட்டின பெண்டாட்டி பட்டி மாடு மாதிரி.

கட்டின பெண்டாட்டியையும் உடுத்தின துணியையும் நம்பாதவன்.

கட்டின மாட்டை அவிழ்ப்பாரும் இல்லை; மேய்த்த கூலியைக் கொடுப்பாரும் இல்லை. 6395


கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஆயிரம் வீடு.

(பல வீடு.)

கட்டினவனுக்கு ஒரு வீடு; கட்டாதவனுக்கு ஊரெல்லாம் வீடு.

கட்டின விதை வெட்டின விதை.

கட்டின வீட்டுக்கு எட்டு வக்கணை.



கட்டின வீட்டுக்குக் கருத்துக் கருத்துச் சொல்லுவார். 6400

(வாய்க்குச் சுளுவு.)


கட்டின வீட்டுக்குப் பணிக்கை சொல்லாதவர் இல்லை.

கட்டின வீட்டுக்குப் பழுது சொல்வது எளிது.

(வக்கணை சொல்வார் பலர்.)

கட்டினான் தாலி; காட்டினாள் கோலம்.

கட்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த கப்பரையும் அல்ல.

கட்டுக் கட்டு விளக்குமாறு கப்பலிலே வருகிறது என்றால் ஒரு காசு விளக்குமாறு இரண்டு காசு. 6405


கட்டுக் கலம் காணும்; கதிர் உழக்கு நெல் காணும்.

(முக்கலம்.)

கட்டுக் காடை இடமானால் குட்டிச் சுவரும் பொன் ஆகும்.

கட்டுக்கு அடங்காக் காளை போல.

கட்டுக்கு அடங்காப் பிடாரியைப் போல,

கட்டுக்குக் கட்டு மாற்றிக் கட்ட வேண்டும். 6410


கட்டுக் குலைந்தால் கனம் குலையும்.

கட்டுச் சோற்று மூட்டையில் எலியை வைத்துக் கட்டினது போல.

(கட்டுச் சாதத்தில்.)

கட்டுச் சோற்று மூட்டையில் பெருச்சாளியை வைத்துக் கட்டின மாதிரி.

கட்டுச் சோற்று மூட்டையையும் கைக்குழந்தையையும் எடுக்கல் ஆகாது.

(கைப் பிள்ளையையும்.)

கட்டுச் சோறு எத்தனை நாளைக்கு? 6415


கட்டுத் தறியை விட்டு மேய்ச்சற் காட்டில் பிடிப்பது.

கட்டுத் துறை சரியாக இருந்தால் கன்றுக்குட்டி துள்ளி விளையாடும்.

கட்டுப் பட்டாலும் கவரிமான் மயிரால் கட்டுப்பட வேண்டும்; குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்.

கட்டுப் படாத பெண் சொட்டுக் கொண்டு போயிற்று.

(கொட்டு.)

கட்டுப் பானை ஊற்று எட்டு நாளைக்கே. 6420

(பனை.)


கட்டு மரத்தைச் சென்னாக்குனி அரிக்கிறது போல.

(சென்னக் குன்னி.)

கட்டுருட்டிக் காளை போல.

கட்டெறும்பு இட்டலியைத் தூக்கினது போல.

கட்டை இருக்கிற மட்டும் கஷ்டம் உண்டு.

(கவலை உண்டு.)

கட்டைக் கலப்பையும் மொட்டைக் காளையும் காணிக்கு உதவாது. 6425


கட்டைக்குப் போகும் போது காலாழி பீலாழியா?

கட்டைக் கோணல் அடுப்பில் நிமிர்ந்தது.

கட்டை கிடக்கிற கிடையைப் பார்;கழுதை குதிக்கிற குதியைப் பார்.

கட்டை போனால் அடுப்போடு.

கட்டை போனால் வெட்டை. 6430


கட்டையிலே வைக்க.

(கட்டையிலே போவான்.)

கட்டையைச் சுட்டால் கரி ஆகுமா? மயிரைச் சுட்டால் கரி ஆகுமா?

கட்டை விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சலம் கட்டினாற் போல.

(பட்டுக் கச்சு, )

கட்டோடே போனால் கனத்தோடே வரலாம்.

கடகச் சந்திர மழை கல்லையும் துளைக்கும். 6435


கடந்த நாள் கருதினால் வருமா?

கடந்தவர்க்குச் சாதி இல்லை.

(சாதி ஏது?)

கடந்து போன காலம் கதறினாலும் வராது.

கடந்து போனது கரணம் போட்டாலும் வராது.

(வருமா?)

கடப்பாரையை விழுங்கிவிட்டுச் சுக்குக் கஷாயம் குடிக்கலாமா? 6440


கடல் உப்பும் மலை நாரத்தங்காயும் போலே.

கடல் உப்பையும் மலை நெல்லையும் கலந்தாற் போல.

கடல் கொதித்தால் விளாவ நீர் எங்கே?

(நீர் ஏது?)

கடல் தண்ணீர் வற்றினாலும் பள்ளிச்சி தாலி வற்றாது.

கடல் தாண்ட மனம் உண்டு; கால்வாய் தாண்டக் கால் இல்லை. 6445

(ஆசை இல்லை, மனம் இல்லை.)


கடல் திடல் ஆகும்; திடல் கடல் ஆகும்.

கடல் நீர் நிறைந்து ஆவதென்ன? காஞ்சிரை பழுத்து ஆவதென்ன?

கடல் பாதி, கடம்பாக்குளம் பாதி.

(கடம்பாக்குளம் - திருநெல்வேலி மாவட்டத்தில் சச்சனாவிளைக்கு அருகில் உள்ளதோர் ஊர்.)

கடல் பெருகினால் கரை ஏது?

கடல் பெருகினால் கரையும் பெருகுமா? 6450


கடல் போயும் ஒன்று இரண்டாம் வாணிகம் இல்.

(பழமொழி நானூறு.)

கடல் மடை திறந்தது போல.

கடல் மணலை எண்ணக் கூடுமா?

கடல் மீனுக்கு நீச்சம் பழக்க வேணுமா?

கடல் மீனுக்கு நுளையன் இட்டதே பேர். 6455

(சட்டம்.)


கடல் முழுவதும் கவிழ்ந்து குடிக்கலாமா?

கடல் வற்றினால் கருவாடு தின்னலாம் என்று உடல் வற்றிச் செத்ததாம் கொக்கு.

கடலில் அகப்பட்ட மரத்துண்டு போல.

கடலில் அலையும் துரும்பு போல.

கடலில் இருக்கும் கள்ளியைக் கொள். 6460


கடலில் ஏற்றம் போட்ட கதை.

கடலில் கரைத்த புளி போல.

கடலில் கரைத்த பெருங்காயம் போல.

(இட்ட பெருங்காயம் மணக்குமா?)



கடலில் கிடக்கும் துரும்புகளை அலைகளோடு தூக்கித் தரையில் தள்ளுகிறது போல.

கடலில் கையைக் கழுவி விடுகிறதா? 6465


கடலில் துரும்பு கிடந்தாலும் கிடக்கும்; மனசிலே ஒரு சொல் கிடவாது.

கடலில் பிறக்கும் உப்புக்கும் மலையில் விளையும் நாரத்தங்காய்க்கும் தொந்தம்.

(உறவுண்டு.)

கடலில் பெருங்காயம் கரைத்தது போல.

(உரசிய காயம் போல.)

கடலில் போட்டு விட்டுச் சாக்கடையில் தேடுகிறதா?

கடலில் மூழ்கிப் போனாலும் கடனில் மூழ்கிப் போகாதே 6470


கடலிலும் பாதி கடம்பாக்குளம்.

கடலின் ஆழத்தை அளந்தாலும் மனசின் ஆழத்தை அளக்க முடியாது.

கடலினுள் நா வற்றினது போல.

(திருவாசகம்.)

கடலுக்குக் கரை போடுவார் உண்டா?

(போட்டவர்கள்.)

கடலை அடைக்கக் கரை போடலாமா? 6475


கடலைக்காய்ப் பானையிலே கையை விட்டாற்போல.

கடலைத் தாண்ட ஆசை உண்டு; கால்வாயைத் தாண்டக் கால் இல்லை.

(கடலைத் தாண்டக் கால் உண்டு.)

கடலைத் தாண்டினவனுக்கு வாய்க்கால் தாண்டுகிறது அரிதா?

கடலைத் தூர்த்தாலும் காரியம் முடியாது.

கடலைத் தூர்த்தும் காரியத்தை முடிக்க வேண்டும். 6480


கடலை விதைத்தால் கடுத்த உரம்.

கடலை விதைப்பது கரிசல் நிலத்தில்.

(கரிசல் காட்டில்.)

கடவுள் இருக்கிறார்.

கடவுள் சித்தத்துக்கு அளவேது?

கடவுளுக்குத்தான் வெளிச்சம். 6485


கடவுளை நம்பினோர் கைவிடப் படார்.

கடற்கரைத் தாழங்காய் கீழே தொங்கி என்ன? மேலே தொங்கி என்ன?

கடற்கரையில் தாழங்காய் அக்கரையில் கிடந்தால் என்ன? இக்கரையில் கிடந்தால் என்ன?

கடன் ஆச்சு; உடன் ஆச்சு; வீட்டு மேலே சீட்டு ஆச்சு; அடித்து விடடா தேவடியாள் தெருவிலே பல்லக்கை.

கடன் இல்லாத கஞ்சி கால் வயிறு போதும். 6490


கடன் இல்லாத சோறு கால் வயிறு போதும்.

கடன் இல்லாவிட்டால் காற்றுப் போல.

கடன் இழவுக்கு அழுகிறாய்.

கடன்காரனுக்குக் கடனும் உடன்பிறந்தானுக்குப் பங்கும் கொடுக்க வேண்டும்.

கடன்காரனுக்குக் கடனும் பழிகாரனுக்குப் பழியும் கொடுத்துத் தீர வேணும். 6495  :(கொடுக்க வேண்டும்.)


கடன்காரனுக்கு மயிரும் எமனுக்கு உயிரும்.

கடன்காரனை வைத்த கழு உண்டா?

(வதைத்த.)

கடன், காலச் சனியன்.

கடன் கேட்காமல் கெட்டது; வழி நடக்காமல் கெட்டது,

கடன் கொடுத்துப் பொல்லாப்பு அடைவதைவிடக் கடன் கொடுக்காமல் பொல்லாப்பு அடையலாம். 6500


கடன் கொண்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்.(தனிப்பாடல்.)

கடன் கொண்டும் செய்வன செய்.

கடன் கொண்டும் செய்வார் கடன்.

(பழமொழி நானூறு.)

கடன் சிறிது ஆனாலும் கடமை பெரிது.

கடன் நெஞ்சைக் கலக்கும். 6505


கடன் பட்ட சோறு கால் வயிறு நிரம்பாது.

கடன் பட்டவன் சோறு காற் சோறு.

கடன் பட்டார் நெஞ்சம் போல.

கடன் பட்டாயோ, கடை கெட்டாயோ?

(பட்டையோ, கடைபட்டையோ?)

கடன் பட்டு உடன் பட்டு அம்மை கும்பிட, நீயார் கூத்தி கும்பிட. 6510

(கடன் வாங்கி.)


கடன் பட்டு உடன் பட்டு உடம்பைத் தேற்று மகனே கடன்காரன் வந்தால் தடியைத் தூக்கு மகனே!

கடன் பட்டும் பட்டினியா?

(கடன் கொண்டும் பட்டினி கிடப்பதா?)

கடன் படுகிறவன் எப்போதும் சஞ்சலப் படுகிறவனே.

கடன் வாங்கி உடன் வாங்கிச் சாமி கும்பிட, நீயாரடா கூத்திமகன் விழுந்து கும்பிட?

கடன் வாங்கிக் கடன் கொடாதவனும் கெட்டான்; வட்டியிலே சாப்பிடாதவனும் கெட்டான். 6515


கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்; மரம் ஏறிக் கை விட்டவனும் கெட்டான்.

கடன் வாங்கிச் செலவு செய்தவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் சரி.

கடன் வாங்கித் தின்றவன் கடைத்தேற மாட்டான்.

கடன் வாங்கிப் பயிர் இட்டவனும் மரம் ஏறிக் கைவிட்டவனும் ஒன்று.

கடன் வாங்கியும் கல்யாணம் செய். 6520


கடன் வாங்கியும் பட்டினி; கல்யாணம் ஆகியும் பிரமசாரி.

(சந்நியாசி.)

கடன் வாங்கினவன் மடியில் கல நெருப்பு.

கடன் வாங்குகிறபோது இனிப்பு; கடன் கொடுக்கிறதென்றால் கசப்பு.

கடன் வாங்குகிறவன் கடைத்தேற மாட்டான்.

கடனாகக் கிடைக்கிறதானாலும் ஆனையை வாங்கிக் கட்டிக் கொள்வதா? 6525


கடனா உடனா வாங்கிக் காரியத்தை முடி.

கடனோடு கடன் ஆகிறது; அண்டை வீட்டில் மேல் சீட்டு ஆகிறது; பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணு.

கடனோடு கடன் கந்தப் பொடி காற்பணம்.

(கதம்பப் பொடி.)

கடனோடே கடன்; உடனோடே உடன்.

கடன் ஆனாலும் உழக்குப் பால் கறக்காதா என்கிறான். 6530


கடா இடுக்கில் புல் தின்கிறது போல.

கடா கடா என்றால் கால் ஆழாக்குப் பீச்சு என்கிறாயே!

கடா கடா என்றால் உழக்குப் பால் என்று கேட்கிறாயே!

கடா கடா என்றால் கன்றுக்கு உழக்குப் பாலா என்கிறான்.

கடா கடா என்றால் மருந்துக்கு ஒரு பீர் என்கிறான். 6535


கடா கன்று போட்டது; கொட்டகையிலே பிடித்துக் கட்டு.

கடாச் சண்டையில் உண்ணி நசுங்கின கதை.

கடா பின் வாங்குவது எல்லாம் பாய்ச்சலுக்கு இடம்,

(அடையாளம்.)

கடா பொலிகிறது வண்டி பால் குடிக்கவா?

கடா மிடுக்கிலே புல்லுத் தின்கிறதா? 6540


கடா மேய்க்கிறவன் அறிவானோ, கொழுப் போன இடம்?

கடாரங் கொண்டான் கிணற்றில் கல்லைப் போட்டது போல.

(கடாரங் கொண்டான், செம்பொன்னார் கோயிலுக்கு அருகில் கிழக்கே உள்ள ஊர்.)

கடாவின் சந்தில் புல்லைத் தின்னுகிறது போல.

கடாவும் கடாவும் சண்டை போடுகிறபோது உண்ணி நசுங்கினாற்போல.

கடிக்க ஓர் எலும்பும் இல்லை. 6545 .


கடிக்க மாட்டாத பாக்கு உத்தம தானம்.

கடிக்க வந்த நாய்க்குத் தேங்காய்க் கீற்றுப் போட்டாற் போல.

கடிக்கிற நாகம் கலந்து உறவாகுமா?

(கடித்த நாகம்.)

கடிக்கிற நாய்க்குக் கழுத்திற் குறுங்கயிறு.

கடிக்கிற பாம்பை நல்ல பாம்பு என்ற கதை. 6550


கடிகோலிலே கட்டின நாய்.

கடித்த நாய்க்குக் காடியைக் கொடு.

கடித்த நாயைக் கொன்றாலும் பயன் உண்டாகாது.

கடித்த நாயை வெறி நாய் என்பது போல.

கடித்த நாயைப் பைத்தியம் கொண்டது என்பார்கள். 6555


கடித்த பாக்குக் கொடாத சிற்றன்னை கடற்கரை மட்டும் வழியனுப்பினாளாம்.

கடித்த பாக்கும் கொடாத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழி விட்டானாம்.

(காத வழி வந்தானாம்.)

கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் அது விஷத்தைத்தான் தரும்.

(கக்கும்.)

கடித்த பாம்புக்குப் பால் வார்த்தால் கடித்தே தீரும்.

கடித்த மூட்டை, கடியாத மூட்டை, எல்லா மூட்டையும் சரிதான். 6560


கடித்த மூட்டையும் சரி, கடியாத மூட்டையும் சரி.

கடித்த வாய் துடைத்தாற் போல.

(வாய் துடித்தாற் போல.)

கடித்தால் நாய்; மிதிபட்டால் வாய் இல்லா ஜந்து.

கடித்தாலும் கடிக்கட்டும்; நீ சொல்லாதிரு.

(சும்மாயிரு.)

கடித்த பாக்குக் கொடுக்காத சிற்றப்பன் கடைத்தெரு வரையில் வழித்துக் கொண்டு வழிவிடுவான். 6565

(சிற்றன்னை; வழிவிடுவாள்.)

கடிதான சொல் அடியிலும் வலிது.

(பெரிது.)

கடிதான பிள்ளை பெற்றோருக்கு உதவுமா?

கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே நன்மை.

கடி நாய் எலும்புக்குப் பறந்தாற் போல.

கடிப்பதற்கு ஓர் எலும்பும் இல்லை; காதில் மினுக்க ஓலையும் இல்லை. 6570


கடிய மாட்டுக்குக் கம்பு உடையும், கொடிய மாட்டுக்குக் கொம்பு உடையும்.

கடியாத மூட்டை என்று விட்டு விடுவார்களா?

கடியும் சுருக்குத்தான்; அடியும் சுருக்குத்தான்.

கடிவாளம் இல்லாத குதிரை போல.

கடுக்கன் இட்ட நேற்றுக்குள் காது அறுந்த சுருக்கு. 6575


கடுக்கன் ஜோடியும் காளைமாட்டு ஜோடியும் அமைவது கடினம்.

கடுக்காய்க்கு அகணி நஞ்சு: சுக்கிற்குப் புறணி நஞ்சு.

கடுகிலும் கால் திட்டம் கரண்டி; அதிலும் கால் முட்டை எண்ணெய் கடன் வாங்கி என் தலை சீவிக் கட்டி, மகள் தலை வாரிக் கட்டி, மருமகன் தலை கோதிக் கட்டி, குறை எண்ணெய் வைத்த இடத்தில் அயல் வீட்டுக்காரி வந்து இடறி விட்டாள் ; அது ஏரி பெருகினாற் போலப் போயிற்று.

(என்றாள்.)

கடுகிற்று, முடுகிற்று, வடுகச்சி கல்யாணம்.

கடுகு அத்தனை நெருப்பு ஆனாலும் போரைக் கொளுத்தி விடும். 6580


கடுகு அளவும் களவுதான்; கர்ப்பூரக் களவும் களவுதான்.

(கடுகு அளவு எடுத்தாலும், கற்பூரம் எடுத்தாலும்.)

கடுகு சிந்தினால் கலகம் வரும்.

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

(போகுமா?)

கடுகு செத்தாலும் கறுப்புப் போகாது.

கடுகு செத்தும் காரம் போகாது. 6585

(செங்கற்பட்டு வழக்கு.)


கடுகு போகிற இடத்தில் தடி எடுத்துக் கொண்டு திரிவான்; பூசணிக்காய் போவது தெரியாது.

கடுகு மலை ஆச்சு; மலை கடுகு ஆச்சு.

கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டினது போல.

(திருவள்ளுவ மாலை.)

கடுஞ் சிநேகிதம் கண்ணுக்குப் பொல்லாதது.

(கடும் நட்பு, பகை.)

கடு நட்பும் பகை விளைப்பு. 6590


கடும் காற்று மழை காட்டும்; கடு நட்புப் பகை காட்டும்.

(கடும் சிநேகம்.)

கடும் கோபம் கண்ணைக் கெடுக்கும். கடும் சிநேகம் கண்ணைக் கெடுக்கும்.

(நட்பு. கண்ணுக்குப் பகை. கண்ணுக்கு-பொல்லாப்பு.)

கடும் செட்டுக் கண்ணைக் கெடுக்கும்.

(கடும் தேட்டு.)

கடும் செட்டுக் காரியக் கேடாம். 6595


கடும் செட்டுத் தயவைக் கெடுக்கும்.

கடும் சொல் கேட்டால் காதுக்குக் கொப்புளம்.

கடும் பசி கல்மதில் உடைத்தும் களவு செய்யச் சொல்லும்.

(உடைத்தாவது.)

கடும் போரில் கைவிடலாமா?

கடு முடுக்கடா சேவகா, கம்பரிசியடா சம்பளம். 6600


கடுவெளியைக் கானல் ஜலமாய்க் கண்டது போல.

கடை அரிசி கஞ்சிக்கு உதவுமா?

கடை ஓடித் தாவும் நிலத்துக்குக் கரையடி மேட்டு நிலம் எளிது.

கடைக்குக் கடை ஆதாயம்.

கடைக்குக் கடை ஆள் இருப்பார்கள். 6505


கடைக்குக் கடை ஆள் தாவியென.

(ஆள்தான்.)

கடைக்குட்டி கட்டி மாம்பழம்.

கடைக்குப் போகக் கண்ணிக்குப் போக.

கடை காத்தவனும் காடு காத்தவனும் பலன் அடைவார்.

கடை கெட்ட நாய் கல்யாணத்துக்குப் போனதாம்; எச்சில் இலை கிடைக்காமல் எட்டி எட்டிப் பார்த்ததாம். 6610



கடை கெட்ட மூளிக்குக் கோபம் கொண்டாட்டம்.

கடை கெட்ட மூளி சூல் ஆனாலும் காற்பணத்துக் காசு செல்லும்.

கடை கெட்ட வாழ்வு, தலை கட்ட நேரம் இல்லை.

கடைச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டுக்கு அணையும்.

கடைசிச் சோற்றுக்கு மோரும் கால் மாட்டிற்குப் பாயும் வேண்டும். 6615


கடைசிப் பிடி கட்டி மாம்பழம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தானாம்.

கடைத் தேங்காயை எடுத்து விநாயக பூஜை செய்த கதை.

கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுப்பாள்.

(எடுக்கிறது.)

கடைந்து எடுத்த பேர் வழி. 6620


கடைப் பிறப்பு கழுதைப் பிறப்பு.

கடையச்சே வாராத வெண்ணெய் குடையச்சே வரப் போகிறதா?

கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அண்டை வீட்டுக்காரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?

கடையில் அரிசி கஞ்சிக்கு உதவுமா? அவிசாரி புருஷன் ஆபத்துக்கு உதவுவானா?

கடையில் இருக்கும் கன்னியைக் கொள். 6625


கடையில் வந்ததும் அரிசியோ? நடையில் வெந்ததும் சாதமோ?

கடையிலே கட்டித் தூக்கினாலும் அழுகற் பூசணிக்காய் அழுகலே.

கடையிலே கொண்டு மனையிலே வைக்கிறான்.

கடையிலே தேளைக் கண்டு கை அசக்கினால் நிற்குமா?

கடையும் போது வராத வெண்ணெய் குடையும் போது திரண்டு விடுமா? 6630


கடைவாயில் ஆனை ஒதுக்கினாற் போல.

கடைவாயில் ஓட்டின பீயைப் போல.

கண் அளக்காததைக் கை அளந்து விடுமா?

கண் அறிந்தும் அயல் மனையில் இருக்கிறதா?

கண் இமை, கை நொடி அளவே மாத்திரை. 6635


கண் இமை போலக் காக்கிறான் கடவுள்.

கண் இமை போலே கரிசனமாய்க் காக்கிறது.



கண் இமையா முன்னே பறந்து போனான்.

கண் இரண்டும் இல்லாதவன் வீட்டுக்கு வைத்த விளக்கு.

கண் இருக்கிற போதே காக்கை பிடுங்குகிறது போல. 6640


கண் இருந்தும் கண்டமங்கலத்தில் பெண் கொடுப்பார்களா?

கண் இருந்தும் கிணற்றில் விழுந்ததுபோல.

கண் இருந்தும் குழியில் விழலாமா?

கண் இல்லாக் குருடனுக்கு மூக்குக் கண்ணாடி ஏன்?

கண் உள்ள போதே காட்சி; கரும்புள்ள போதே ஆலை. 6645


கண் ஊனன் கைப் பொருள் இழப்பான்.

கண் ஒளி பெரிதா? கதிர் ஒளி பெரிதா?

கண் கட்டி மந்திரமா காட்ட வந்தாய்?

கண் கட்டி வித்தை காட்ட வந்தாயோ?

கண் கட்டின புழுவைப் போல. 6650


கண் கண்ட தெய்வம்.

கண் கண்டது கை செய்யும்.

கண் கண்டு வழி நட.

கண் காணாமல் கடும் பழி சொல்கிறதா?

கண்குத்திப் பாம்பு போல் இருந்தாலும் கண்ணில் மண்ணைப்போடுகிறான். 6655

(பாம்பு போல் கண்ணில் கண் மூடிப் பார்த்திருந்தேன்.)

கண் குருட்டுக்கு மருந்து இட்டால் தெரியுமா?

கண் குருடு ஆனாலும் நித்திரையிலே குறைவில்லை.

(குறையா?)

கண் குற்றம் கண்ணுக்குத் தெரியுமா?

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா?

கண் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது. 6660

(சுந்தர மூர்த்தி நாயனார் வரலாறு.)


கண் கொண்டு அல்லவோ வழி நடக்க வேண்டும்?

கண்ட இடத்தில் கத்தரி போடுவான்.

கண்ட இடத்தில் திருடன் கண் போகிறது.



கண்ட இடம் கைலாசம்.

கண்ட கண்ட கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிட்டேன்.

காணாத கோயிலுக்குச் காணிக்கை நேர்ந்து வைத்தேன். 6665


கண்ட தண்ணீருக்கு நிறை வேளாண்மை, கண்டது எல்லாம் ஓடித் தின்னும் ஆடு; நின்று நின்று மேய்ந்து போகும் மாடு,

கண்டதில் பாதி சவுசிகம்; சீமையில் பாதி ஶ்ரீவத்ஸம்; பாதியில் பாதி பாரத்துவாஜம்.

(இவை அந்தணர்களினுடைய கோத்திரங்கள்.)

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்.

(கேட்கப் பண்டிதன் ஆவான்.) கண்டது காட்சி; பெற்றது பேறு.

6670


கண்டது கை அளவு காணாதது உலகளவு.

(கைம் மண் அளவு )

கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.

(மூள்வது புகை.)

கண்டது பாம்பு கடித்தது கருக்குமட்டை.

கண்டது பாம்பு. கடித்தது சோளத்தட்டை

கண்டது பாம்பு கடித்தது மாங்கொட்டை. 6675


கண்டதும் மருதாணியைக் காலில் இட்டுக் கொண்டால் கொண்டவனுக்கு முன்னால் குதித்தோடிப் போகலாம்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.

(கொண்டதே கொள்கை, உண்டதே மிச்சம்.)

கண்டதைக் காலை வாரி அடிக்கிறதா?

(கண்டதைக் கொண்டு.)

கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே: காட்டு மரத்திலே நில்லாதே.

கண்டதைக் கேளா விட்டால் கொண்டவன் அடிப்பான். 6680


கண்டதைக் கொண்டு கரை ஏற வேண்டும்,

கண்ட பாவனையா கொண்டை முடிக்கிறது?

கண்டம் இல்லாத எருமை தண்டம்.

கண்டம் ஒருத்தன் கழுத்து ஒருத்தன், துண்டம் ஒருத்தன்; துடை ஒருத்தன்.

கண்ட மங்கலத்து அஞ்சு பெண்களும் ஒருத்தர் போன வழி ஒருத்தர் போகார். 6685


கண்ட மாப்பிள்ளையை நம்பிக் கொண்ட மாப்பிள்ளையைக் கைவிட்டாற் போல.

கண்டர மாணிக்கத்துக் கட்டுத் தறியும் வேதம் சொல்லும்.

கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர்.

கண்டவன் எடுக்கானா?

கண்டவன் எடுத்தால் கொடுப்பானா? 6690


கண்டவன் கொள்ளையும் கணியாகுளப் போரும்.

(கணியாகுளம் குமரிமாவட்டம்; 1635 நாயக்கர் படைதங்கிப் போரிட்டது.)

கண்டவன் விலை சொன்னால் கொண்டவன் கோடி உடான்.

(யாழ்ப்பாண வழக்கு.)

கண்டார் கண்டபடி பேசுகிறது.

(பேசுகிறார்கள்.)

கண்டாரைக் கேட்டாரைச் சொல்லாதே. கண்டால் அல்லவோ பேசுவார் தொண்டைமான்? 6695


கண்டால் ஆயம்; காணா விட்டால் மாயம்.

(ஆயம்-வரி.)

கண்டால் ஒரு பேச்சு; காணா விட்டால் ஒரு பேச்சு.

கண்டால் ஒன்று; கானா விட்டால் ஒன்று.

கண்டால் கரிச்சிருக்கும்; காணா விட்டால் இனித்திருக்கும்.

கண்டால் காமாட்சி நாயக்கர்; காணா விட்டால் காமாட்டி நாயக்கன். 6700

(கவரை வடுகன். காணா விட்டால் மீனாச்சி நாயக்கன்.)


கண்டால் காயம்; காணாவிடில் மாயம்.

கண்டால் சரக்கறியேன்; காணாமல் குருக்கறியேன்.

கண்டால் கீச்சுக் கீச்சு; காணா விட்டால் பேச்சுப் பேச்சு.

(கிளி.)



கண்டால் தண்டம்; வந்தால் பிண்டம்.

(சந்நியாசிகளுக்கு.)

கண்டால் துணை; காணா விட்டால் மலை. 6705


கண்டால் தெரியாதா, கம்பளி ஆட்டு மயிரை?

கண்டால் முறை சொல்கிறது; காணா விட்டால் பெயர் சொல்கிறது.

கண்டால் ரங்கசாமி, காணா விட்டால் வடுகப்பயல்.

கண்டால் வத்தி; காணா விட்டால் கொள்ளி.

கண்டி ஆயிரம், கப்பல் ஆயிரம், சிறு கம்பை ஆயிரம். 6710

(சிறு கம்பை-தேவகோட்டையிலிருந்து கிழக்கே 12 மைல்; கப்பலூர், சிறு கம்பையூருக்கு அருகில் உள்ளது. கண்டியூர் நிலம் மாவில் ஆயிரம் கலம் விளையும். பிற ஊர் நிலப்பரப்பு அதிகம்.)


கண்டிப்பு இருந்தால் காரியம்.

கண்டியிலே ஆனைகுட்டி போட்டால் உனக்காச்சா? எனக்காச்சா?

கண்டிருந்தும் மலத்தைக் கவிழ்ந்திருந்து தின்பார்களா?

கண்டு அறிந்த நாயும் அல்ல; கனம் அறிந்த பேயும் அல்ல.

கண்டு அறிய வேண்டும் கரும்பின் சுகம்; உண்டு அறிய வேண்டும் 6715


கண்டு அறியாதவன் பெண்டு படைத்தால் காடு மேடு எல்லாம் இழுத்துத் திரிவானாம்.

(கட்டி இழுப்பானாம்; விட்டடிப்பான். காடு மேடெல்லாம் தவிடு பொடி.)

கண்டு எடுத்தவன் கொடுப்பானா?

(கொடான்.)

கண்டு எடுத்தானாம், ஒரு சுண்டு முத்தை.

கண்டு கழித்ததைக் கொண்டு குலாவினான்.

கண்டு செத்த பிணமானால் சுடுகாட்டுக்கு வழி தெரியும். 6720

(சுடுகாட்டில் எரியும்.)


கண்டு நூல் சிடுக்கெடுத்தாச்சு: வண்டி நூல் இருக்கிறது.

கண்டு பேசக் காரியம் இருக்கிறது; முகத்தில் விழிக்க வெட்கமாய் இருக்கிறது.

கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்.

கண்டும் காணாதது போல் விட்டுவிட வேண்டும். கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் இருக்க வேண்டும். 6725


கண்டும் காணவில்லை, கேட்டும் கேட்கவில்லை என்று இருக்க வேண்டும்.

கண்டும் காணாததுபோல் விட்டுவிட வேண்டும்.

கண்டு முட்டு; கேட்டு முட்டு.

(முட்டு-தீட்டு.)

கண்டேன் சீதையை என்றாற் போல.

கண்ணாடி, பித்தன், கருங்குரங்கு, காட்டானை, மண்ணாளும் வேந்தனோடு ஐந்தும் பித்து. 6730


கண்ணாடியில் கண்ட பணம் கடன் தீர்க்க உதவுமா?

(கண்ணாடி நிழலில்.)

கண்ணாரக் கண்டதற்கு ஏன் அகப்பைக் குறி?

கண்ணாரக் காணாதது மூன்றில் ஒரு பங்கு.

(மூன்று பங்கு.)

கண்ணால் கண்டதற்குச் சாட்சியா?

(சாட்சி ஏன்?)

கண்ணால் கண்டது பொய்; அகப்பைக்குறி மெய். 6735

(கண்ணாரக் கண்டது. அகப்பைக்கூறு பார்த்தது.)


கண்ணாலே கண்டது பொய்; கருதி விசாரித்தது மெய்.

கண்ணாலே கண்டது பொய்; காதாலே கேட்டது மெய்.

கண்ணாலே கண்டதும் பொய்; காதாலே கேட்டதும் பொய்; ஆராய்ந்து பார்ப்பது மெய்.

(தீர விசாரித்தது மெய்.)

கண்ணாலே கண்டதை எள்ளுக்காய் பிளந்ததுபோல் சொல்ல வேண்டும்.

கண்ணாலே கண்டதைக் கையாலே செய்வான். 6740


கண்ணாலே கண்டாலும் மண்ணாலே மறைக்க வேண்டும்.

கண்ணாலே சீவன் கடகடவென்று போனாலும் வண்ணானுக்கு மழை நஞ்சு.

கண்ணாலேயும் கண்டதில்லை. காதாலேயும் கேட்டதில்லை. கண்ணான பேர்களை மண் ஆக்குகிறான். கண்ணான பேரை எல்லாம் புண் ஆக்கிக் கொண்டு, கரும்பான

   பேரை எல்லாம் வேம்பாக்கிக் கொண்டான். 

6745


கண்ணான மனசைப் புண் ஆக்குகிறான். கண்ணுக்கு ஆனால் புண்ணுக்கு ஆகாது. கண்ணுக்கு இமை காதமா?

(புருவம் காதமா?)

கண்ணுக்கு இமை; பெண்ணுக்கு நாணம். கண்ணுக்கு என்ன கரிப்பு? 6750


கண்ணுக்குக் கண் அருகே காணலாம். கண்ணுக்குக் கண்ணாய் இருந்தும் கடைப் பெண்ணுக்கு வழி பார்க்கிறதா?

(பார்க்கிறான்.)

கண்ணுக்குக் கலம் தண்ணீர் விடுகிறது. கண்ணுக்குப் புண்ணும் அல்ல; காண்பார்க்கு நோவும் அல்ல.

(நோயும்.)

கண்ணுக்கு மூக்குக் காத தூரம் இல்லை. 6755

கண்ணுக்கும் மூக்குக்கும் காலம் இப்படி வந்ததே! கண்ணுக்கும் மூக்குக்கும் நேராகப் பார். கண்ணுக்குள் சம்மணம் கொட்டுவான்; கம்பத்தில் ஐந்தானை கட்டுவான். கண்ணும் கருத்தும் உள்ள போது இல்லாமல், கண் பஞ்சு அடைந்த பின் என்ன கிடைக்கும்?

(கிடைக்காத போது.)

கண்ணும் கலத் தண்ணீர் விடும். 6760

கண்ணும் கருத்தும் உள்ள போதே காணோம்; அவை போனபின் என்ன கிடைக்கும்? கண்ணும் நமது; விரலும் நமது: கண்ணைக் குத்துவதா? கண்ணும் புண்ணும் உண்ணத் தீரும்.

கண்ணும் மூக்கும் வைத்தான்; காரமும் கொஞ்சம் சேர்த்தான்.

கண்ணே. கண்ணே என்றால் உச்சி குளிருமா? 6765


கண்ணே, காதே, நமஸ்காரம்; கண்டதைக் கேட்டதைச் சொல்லாதே.

கண்ணை அலம்பி விட்டுப் பார்க்க வேண்டும்.

(கண்ணைக் கழுவி.)

கண்ணை இமை காப்பது போல.

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல.

கண்ணைக் கண்ணைக் காட்டுது, அண்ணி கழுத்துக் கருகுமணி. 6770


கண்ணைக் காட்டினால் வராதவள் கையைப் பிடித்து இழுத்தால் வருவாளா?

(காட்டி அழைத்தால்.)

கண்ணைக் குத்திய விரலைக் களைந்து எறிவார் உண்டோ?

கண்ணைக் கெடுத்த தெய்வம் கோலைக் கொடுத்தது.

(சுந்தரர் வரலாறு.)

கண்ணைக் கெடுத்த தெய்வம் மதியைக் கொடுத்தது.

(கழுத்தைக் கொடுத்தது.)

கண்ணைக் கொசு மொய்க்கக் கடை வாயை ஈ மொய்க்கப் புண்ணைப் புழு அரிக்கப் பெண்ணைப் போக விட்டாள் புங்காத்தை. 6775


கண்ணைக் கொண்டு நடந்தது போல உன்னைக் கண்டு நடந்தேன்.

கண்ணைத் தின்ற குருடனும் நியாயத்தை ஒத்துக் கொள்ள வேணும்.

கண்ணைப் பிடுங்கி முன்னே எறிந்தாலும் கண்கட்டு வித்தை என்பார்கள்.

கண்ணைப் பிதுக்கிக் காட்டியும் வித்தையா?

கண்ணை மூடிக் குட்டுகிறதா? 6780


கண்ணை மூடிக் கொண்டு காட்டில் நடப்பது போல.

கண்ணை விறைச்சுக் கொண்டு எங்கே போனாய்? கவுண்டன் செத்தான்; இழவுக்குப் போனேன்.

கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் உதட்டைச் சுட்டு உறவாடுவேன்.

கண்ணோடே பிறந்த காவேரி ஆனாலும் நம் எண்ணம் சரி ஆகுமா?

கண்ணோ, புண்ணோ? 6785


கண்ணோ புண்ணோ என்று கலங்கி மனம் திடுக்கிடுகிறது.

கண் தெரிந்து நடப்பவர்கள் பள்ளத்தில் விழ மாட்டார்கள்.

கண் தெரிந்து வழி நடக்கும்படி நினை.

கண் தெரியாமல் வழி நடக்கிறது போல.

கண் படைத்தும் குழியில் விழலாமா? 6790

(கண் படைத்தும் குழியில் விழக் கணக்கும் உண்டோ?-திருவருட்பா.)


கண் பறிகொடுத்துக் கலங்கினாற் போல.

கண் பார்த்தால் கை செய்யும்

(பார்த்ததை.)

கண் பார்த்துக் கையால் எழுதாதவன் கசடனாவான்.

கண் புண்ணிலே கோல் இட்டது போல.

கண் பெருவிரலைப் பார்க்கும் போதே கடைக்கண் உலகமெல்லாம் சுற்றும். 6795


கண் மூடர் கைப் பொருளை அழிப்பர்.

கண் மூடித் துரைத்தனம் ஆச்சே?

கண் மூடிப் பழக்கம் மண் மூடிப் போகும்.

(போக வேணும்.)

கணக்கதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி.

கணக்கப் பிள்ளை எல்லாம் எழுத்துப் பிள்ளையா? 6800

(எழுத்துப் பிள்ளை அல்ல.)


கணக்கப் பிள்ளை கொடுக்கைத் தூக்கி, கண்டவளெல்லாம் செருப்பைத் தூக்கி,

கணக்கப் பிள்ளை பெண்சாதி கடுக்கன் போட்டுக் கொண்டாள் என்று காரியக்காரன் பெண்சாதி காதை அறுத்துக் கொண்டாளாம்.

(மனைவி கம்மல் போட்டுக் கொண்டாள்.)

கணக்கப் பிள்ளை பெண்டாட்டி குணுக்கைப் போட்டு ஆடினாளாம்.

கணக்கன் கண் வைத்தால் கால் காணி பொட்டை.

கணக்கன் கணக்கு அறிவான்; தன் கணக்கைத் தான் அறியான். 6805

கணக்கன் கணக்கைத் தின்னா விட்டாலும் கணக்கனைக் கணக்குத் தின்று விடும்.

கணக்கன் கெட்டால் பள்ளிக்கூடம்.

கணக்கன் கணக்கைத் தூக்கி; கண்டவனெல்லாம் செருப்பைத்தூக்கி.

கணக்கன் மனைவி கடுக்கன் அணிந்தாளென்று காரியக்காரன் மனைவி காதை அறுத்துக் கொண்டாளாம்.

கணக்கன் வீட்டுக் கல்யாணம் விளக்கெண்ணெய்க்குக் கேடு. 6810


கணக்கனுக்குக் கைக் கூலி கட்டிக் குடியிருக்கக் கடன் என்றாராம்.

கணக்கனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.

கணக்கனுக்கு மோட்சம் இல்லை; ஒட்டனுக்கு நரகம் இல்லை.

கணக்கனைக் கண்ட இடத்தில் கண்ணைக் குத்து.

கணக்கனைப் பகைத்தாயோ? காணியை இழந்தாயோ? 6815


கணக்கனோ, குணக்கனோ?

கணக்கிலே கயிறு கோத்திருக்கிறது.

கணக்கு அதிகாரத்தைப் பிளக்கும் கோடாலி.

கணக்கு அரைக்கால், முக்காலே அரைக்கால், கணக்கன்

பெண்டாட்டி தாலி அறுத்தாள்.

(கணக்கன் முக்காலே அரைக்கால்.)

கணக்கு அறிந்த பிள்ளை வீட்டில் இருந்தால் வழக்கு அறாது. 6820


கணக்கு அறிவான், காலம் அறிவான்.

கணக்குக் குஞ்சையும் காக்கைக் குஞ்சையும் கண்ட இடத்திலே கண்ணைக் குத்து.

கணக்கிலே கயிறா கோத்திருக்கிறது?

கணக்கைப் பார்த்தால் பிணக்கு வரும்.

கணபதி பூஜை கைமேலே பலன். 6825


கணவன் இல்லாத கற்புடைய பெண்ணின் கட்டழகு பயன் படாதது போல.

கணவனுக்கு மிஞ்சித் தெய்வம் இல்லை.



கணவனுக்கு மிஞ்சின கடவுள் இல்லை; கடலுக்கு மிஞ்சின ஆழம் இல்லை.

கணவனைப் பிரிந்து அயல் வீட்டில் இருக்கிறதா?

கணவனை வைத்துக் கொண்டு அல்லவோ கள்ள மாப்பிள்ளையைக் கொள்ள வேண்டும்? 6830


கணிகாலங்காரம் போல.

(கணிகா - தேவடியாள்.)

கணிசத்துக்கு இவள்; காரியத்துக்கு அவள்.

கணுக் கணுவாகக் கரும்பானாலும் ஆனைக்கு என்னவோ கடைவாய்க்குத்தான்.

கணுக்கால் பெருத்தால் கணவனைத் தின்பாள்.

கணை முற்றினால் கட்டையிலே. 6835


கணையாழி கண்டான் ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி.

(கணையாழி கண்டான்-ஓருர்.)

கத்தரிக்காய் என்று சொன்னால் பத்தியம் முறிந்து போகுமா?

கத்தரிக்காய்க்குக் காம்பு ருசி; வெள்ளரிக்காய்க்கு விதை ருசி.

கத்தரிக்காய்க்குக் கால் முளைத்தால் கடைத்தெருவுக்கு வந்தால் தெரிகிறது.

கத்தரிக்காய்க்குக் கையும் காலும் முளைத்தாற் போல். 6840


கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள் மணை குற்றம் என்கிறாள்

(குற்றமா?)

கத்தரிக்காய் நறுக்குகிற கையும் காலும் பார்த்தால் பூசணிக்காய் வழி போகாதே, போகாதே என்கிறதாம்.

கத்தரிக்காய் வாங்கப் பூசணிக்காய் கொசுரா?

கத்தரிக்காய் விதை சுரைக்காயாய் முளைக்காது.

கத்தரிக்காய்க்குக் காலும் தலையும் முளைத்தது போல். 6845


கத்தரிக்காய் விற்ற பெட்டி காசுப் பெட்டி; வெள்ளரிக்காய் விற்ற பெட்டி வெறும் பெட்டி.

கத்தரிக்காயை நறுக்கிக் காலும் கையும் வெட்டிக் கொண்ட பெண்ணே, நீ பூசணிக்காய்ப் பக்கம் போகாதே.

கத்தரிக் கொல்லையிலே கூத்து வேடிக்கை பார்த்தது போல.

கத்தரித் தோட்டக்காரனுக்குக் கண் தெரியாது; வெள்ளரித் தோட்டக்காரனுக்குக் காது கேளாது.

கத்தரித் தோட்டத்துக் களை பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும்; கன்றுக் குட்டிக்குப் புல் பிடுங்கினாற் போலும் இருக்க வேண்டும். 6850


கத்தி இருக்கும் இடத்துக்கு மரை காவுகிறதா?

கத்தி எட்டின மட்டும் வெட்டும்; பணம் எட்டாத மட்டும் வெட்டும்.

(பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்.)

கத்தி கட்டி பெண்சாதி எப்போதும் கைம்பெண்டாட்டி.

கத்தி கூர் மழுங்கத் தீட்டுகையில் அது இரட்டைக் கூர் பட்டது போல.

கத்திப் பிடிக்குப் பிடித்தால் அரிவாள் பிடிக்கு ஆகட்டும். 6855


கத்தியும் கடாவும் போல.

கத்தியும் வெண்ணெயும் காய்ச்சித் துவைத்துக் கடை.

கத்தியைப் பார்க்கிலும் கனகோபம் கொலை செய்யும்.

கத்து, கத்து என்றால் கழுதையும் கத்தாது;

சொல் சொல் என்றால் புலவனும் சொல்லான்.

(பாடு பாடு என்றால் பாடான்.)

கத்துகிற மட்டும் கத்திவிட்டுப் போகச்சே கதவைச் சாத்திக்கொண்டு போ. 6860


கதலீனாம் முதலீனாம் பலகாலே வக்ர கதி.

கதவின் கீழே நின்று கொண்டு காலைக் காலைக் காட்டினாளாம்.

கதவைச் சாத்தினால் நிலை புறம்பு.

கதி இருவர் கன்னித் தமிழுக்கு.

(கதிகம்பரும் திருவள்ளுவரும்.)

கதி கெட்ட மாப்பிள்ளைக்கு எரு முட்டை பணியாரம், 6865

(கணவனுக்கு.)


கதிர் களைந்தும் களை எடு.

கதிர் நூல் குறைந்தாலும் கள்ளச்சி கழுத்து நூல் குறையாது.

கதிர் போல இளைத்துக் குதிர் போல் பெருப்பது

கதிர் முகத்தில் என்ன ராசி முழக்கம் வேணும்?

கதிர்வன் சிலரைக் காயேன் என்னுமோ? 6870

(கபிலர் அகவல். )

கதிரிலே ஒடிக்காதே என்றால் கணுவிலே ஒடித்துப் போடுகிறாயே!

கதிருக்கு முந்நூறு நெல் இருந்தால் முழு வெள்ளாண்மை.

(விளைச்சல்.)

கதிரைக் களைந்தும் களையைப் பிடுங்கு.

கதிரைப் பார்க்கிறதா? குதிரைப் பார்க்கிறதா?

கதை அளக்கிறான். 6875


கதைக்குக் கண் இல்லை; காமத்திற்கு முறை இல்லை.

கதைக்குக் கால் இல்லை; கண்ட புருஷனுக்கு முறை இல்லை.

கதைக்குக் கால் இல்லை; கொழுக்கட்டைக்குத் தலை இல்லை; கூத்தாடிக்கு முறை இல்லை.

கதைக்குக் கால் இல்லை, பேய்க்குப் பாதம் இல்லை.

(பிட்டம் இல்லை.)

கதைக்குக் காலும் இல்லை; கத்தரிக்காய்க்கு வாலும் இல்லை. 6880


கதைக்குக் காலும் இல்லை; தலையும் இல்லை.

கதை கதையாம் காரணமாம்; காரணத்தில் ஒரு தோரணமாம்.

கதை கேட்ட நாயைச் செருப்பால் அடி.

கதை பண்ணுகிறான்.

கதை முடிந்தது; கத்தரிக்காய் காய்த்தது. 6885


கதையை நிறுத்திக் காரியத்தைப் பேசு.

கதையோ பிராமணா, கந்தையோ பொத்துகிறாய்? அல்லடி பேய் முண்டை, சீலைப்பேன் குத்துகிறேன்.

கந்தப்பூர் சிற்றப்பா நமஸ்காரம்; பாதி பொச்சை மூடிக்கொண்டு பாக்கியசாலியாய் இரு.

கந்தப் பொடிக் கடைக்காரனுக்குக் கடுகு வாசனை தெரியுமா?

கந்த புராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை. 6890


கந்த புராணம், நம் சொந்தப் புராணம்.

கந்தர் அந்தாதியைப் பாராதே; கழுக்குன்ற மாலையை நினையாதே.

(கழுக்குன்றம் மலை வழி போகாதே, தொடாதே.)

கந்தலில் கால் இட்டது போல.



கந்தன் களவுக் கல்யாணத்துக்குக் கணபதி சாட்சி.

கந்தனுக்குப் புத்தி கவட்டிலே. 6895

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி

கந்தை உடுத்துக் கடைவீதி போனாலும் கண்ணாடி கண்ணாடியே.

கந்தைக்கு ஏற்ற பொந்தை; கழுவுக்கு ஏற்ற கோமுட்டி:

(தகுந்த )

கந்தைக்குச் சரடு ஏறுகிறது எல்லாம் பலம்.

(சரடு ஒட்டுகிறது.)

கந்தைத் துணி கண்டால் களிப்பாள்; எண்ணெய்த் தலை கண்டால் எரிவாள். 6900

கந்தைத் துணியும் கரி வேஷமும் ஆனான்.

(கரிக் கோலமும்.)

கந்தையை அவிழ்த்தால் குட்டி வெளிச்சம் தெரியும்.

கந்தையை அவிழ்த்தால் சிந்தை கலங்கும்.

கந்தையைக் கட்டி வெளியே வந்தால் கண்ணாட்டி; வெள்ளையைக் கட்டி வெளியே வந்தால் வெள்ளாட்டி.

கப்பரையிலே கல் விழுகிறது. 6905

(இடுவார் உண்டோ?)

கப்பல் அடிப்பாரத்துக்குக் கடற்கரை மண்ணுக்குத் தாவு கெட்டாற் போல.

கப்பல் உடைந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.

(கவிழ்ந்தாலும்.)

கப்பல் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல.

கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றுப் போகுமா?

(ஓடிப்பட்ட.)

கப்பல் ஏறிய காகம் போலக் கலங்குகிறது. 6910

கப்பல் ஏறிவிட்ட காகம் கலங்குமா?

கப்பல் ஒட்டிய வாழ்வு காற்று அடித்தால் போச்சு.

கப்பல் போம்; துறை கிடக்கும்.

(நிற்கும்.)



கப்பலில் ஏற்றிக் கடலில் கவிழ்த்தது போல.

கப்பலில் ஏறிய காகம் போல. 6915


கப்பலில் பாதிப் பாக்கு.

(இட்டது போல, திருமங்கையாழ்வார் வரலாறு.)

கப்பலில் பாதிப் பாக்கைப் போட்டுவிட்டுத் தேடுவது போல.

கப்பலில் பெண் வருகிறது என்றானாம்; அப்படியானால் எனக்கு ஒன்று என்றானாம்.

கப்பலை விற்றுக் கப்பல் விற்றான். கொட்டை வாங்கித் தின்றானாம்.

கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி. 6920


கப்பற்காரன் வாழ்வு காற்றடித்தால் போச்சு.

(கப்பற்காரன் பேச்சு.)

கப்பி என்றால் வாயைத் திறக்கிறது குதிரை; கடிவாளம் என்றால் வாயை மூடிக் கொள்கிறது.

கபடச் சொல்லிலும் கடிய சொல்லே மேல்.

(கபடன் சொல்லிலும்.)

கபடாவும் இல்லை; வெட்டுக் கத்தியும் இல்லை.

கபடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் உருப்படா. 6925


கபடு சூது கடுகாகிலும் தெரியாது.

கபாலக் குத்துக் கண்ணைச் சுழிக்கும்.

கம்பங் கொல்லையில் மாடு புகுந்தது போல.

கம்ப சூத்திரமோ? கம்ப சித்திரமோ?

கம்பத்தில் ஏறி ஆடினாலும் கீழ் வந்துதான் தியாகம் வாங்க வேணும். 6930


கம்பத்தில் கொடுத்த பெண்ணும் வாணியனுக்குக் கொடுத்த பாரும், விளங்கா.

(கம்பத்தில் நெடுந்தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டும்.)

கம்பப் பிச்சையோ? கடைப் பிச்சையோ?

கம்பமே காவேரி, ரங்கனே தெய்வம்.

கம்பர் போன வழி.

கம்பர் போன வழி கண்டு கழித்தது. 6935



கம்பராமாயணம் போல்.

கம்பளி மூட்டை என்று கரடி மூட்டையை அவிழ்த்தானாம்.

(கரடியைப் பிடித்தாற் போல்.)

கம்பளி மேல் பிசின்.

கம்பளியிலே ஒட்டின கூழைப் போல.

கம்பளியிலே ஒட்டின பீ மாதிரி. 6940

(விடாது.)


கம்பளியிலே சோற்றைப் போட்டு மயிர் மயிர் என்கிறதா?

கம்பளி வேஷம்.

கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்.

(அடுப்புக் கட்டியும்.)

கம்பன் வீட்டு வெள்ளாட்டியும் கவி பாடுவாள்.

(வெள்ளாட்டி-வேலைக்காரி.)

கம்பனோ, பம்பனோ? 6945


கம்பி நீட்டினான்.

கம்புக்குக் களை பிடுங்கினாற் போலவும் தம்பிக்குப் பெண் பார்த்தாற் போலவும் ஆகும்.

கம்புக்குக் கால் உழவு.

கம்பு கொண்டு வந்து நாயை அடிப்பதா? கம்பு கிடக்கும் இடத்துக்கு நாயைத் தூக்கிக்கொண்டு போவதா?

கம்பு மாவு கும்பினால் களிக்கு ஆகுமா? 6950

(கூழுக்கு ஆகுமா?)


கம்மரீகமோ, ராஜரீகமோ?

கம்மாளப் பிணம் விறைத்தாற் போல.

கம்மாளன் இருந்த இடமும் கழுதை இருந்த இடமும் சரி.

கம்மாளன் எடுக்காத சிக்கலை வாணியன் எடுப்பான்.

கம்மாளன் குடித்தனம் பண்ணாதே. 6955


கம்மாளன் துணி வாங்கினால் கால்மயிர் தெரிய வாங்குவான்.

அதைச் சலவைக்கும் போடும் போது அடுப்பிலே போட்டாலும் வேகாது.

(சலவைக்குப் போட்டாலும் வேகாது.)

கம்மாளன் நாய் பட்டி ஒலிக்கு அஞ்சுமா?

(தொனிக்கு.)

கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொண்டாலும் உள்ளே செவ்வரக்குப் பாய்ச்சியிருப்பான்.

கம்மாளன் பசுவை காதறுத்துக் கொள்.

கம்மாளன் பசுவைக் காது அறுத்து வாங்கு. 6960

(கொள்வானாம்.)

கம்மாளன் பசுவைக் காது அறுத்துக் கொள்ள வேண்டும்.

கம்மாளன் பணம் கரியும் பொறியுமாய்ப் போய் விட்டது.

கம்மாளன் பல்லக்கு ஏறினால் கண்டவர்க்கு எல்லாம் இறங்க வேண்டும்.

கம்மாளன் பிணத்தைக் காது அறுத்தாலும் ரத்தம் வராது.

கம்மாளன் வீட்டிற் பிள்ளை பிறந்தால் தேவடியாள் வீட்டில் சர்க்கரை வழங்குவாள். 6965

(விலை மகள் தெருவில்.)

கம்மாளன் வீட்டு நாய் சம்மட்டிக்கு அஞ்சுமா?

கம்மாளன் வீட்டுப் பசுவை காதறுத்துப் பார்த்தாலும் அங்கும் செவ்வரக்குப் பாய்ந்திருக்கும்.

கமரில் ஊற்றிய பால்.

கமரில் கவிழ்த்த பால், அமரர்க்கு அளித்த அன்னம். 6970

கயா கயா.

கயிற்றுப் பிள்ளை, கைப்பிள்ளை.

(கயிற்றுப் பிள்ளை-மனைவி.)

கயிற்றைப் பாம்பு என்று எண்ணிக் கலங்குகிறது போல.

கயிறு அறுந்த பட்டம் போல.

கயிறு இல்லாப் பம்பரம் போல. 6975

கயிறு திரிக்கிறான்.

கர்ணன் கொடை பாதி, காவேரி பாதி.

கர்ணனுக்குப் பட்டினி உடன் பிறப்பு.

(கர்ணன்-கணக்கப்பிள்ளை.)

கர்த்தனைக் குருடன் கண்தான் வேண்டுவான்.

கர்த்தா, போக்தா, ஜனார்த்தனா, 6980

கர்த்தாவின் செயல் உள்ளபடி.

 கர்த்தாவைக் குருடன் வேண்டுவது கண் பெறத்தானே?

கர்ப்பத்துக்குச் சுகம் உண்டானால் சிசுவுக்குச் சுகம்.

கர்ப்பிணியின் பேரில் துர்ப்பலம்.

கர்ப்பூர மலையில் ஆக்நேயாஸ்திரம் பிரயோகித்தது போல.

கர்மத்தினாலே வந்தது தர்மத்தினாலே போக வேண்டும். 6985

(தொலைக்க.)

கர்மம் முந்தியா? ஜன்மம் முந்தியா?

கர்விக்கு மானம் இல்லை; கோபிக்குப் பாபம் இல்லை.

கரகத்துத் தண்ணீர் காத வழி.

கரகத்து நீர் காதம் காக்கும்.

(கரகத்துக்கு நீர் காகம் காக்கும்.)

கரட்டுக் காட்டுக்கு முரட்டு மண் வெட்டி, 6990

கரடிக்கு உடம்பெல்லாம் மயிர்.

கரடிக்குப் பயந்து ஆனையிடம் தஞ்சம் புகுந்தாற் போல.

கரடிக்குப் பிடித்த இடம் எல்லாம் மயிர்.

கரடி கையில் அகப்பட்டவனுக்கு கம்பளிக்காரனைக் கண்டாலும் பயம்.

(உதை பட்டவனுக்கு.)

கரடி துரத்தினாலும் கைக்கோளத் தெருவில் போக இடம் இராது. 6995

(வழி இராது, இருக்குமா?)

கரடி பிறையைக் கண்டது போல.

கரடியைக் கைவிட்டாலும் கரடி கையை விடவில்லை.

கரண்டி ஆபீஸ்காரனுக்குக் காதிலே கடுக்கன் என்ன?

கரண்டி பிடித்த கையும் கன்னக்கோல் பிடித்த கையும் சும்மா இருக்குமா?

கரணம் தப்பினால் மரணம். 7000

(கரணம்.திருமணம்.)

கரதலாமலகம் போல் காண்கிறது.

கரம் கொண்டவன் அறம் வழுவலாகாது.

கரம் பற்றிய கன்னியைக் கதற அடிக்கக் கூடாது.

கரம் மாறிக் கட்டினால் கனம் குறையாது.

கரிக்காலி முகத்தில் விழித்தால் கஞ்சியும் கிடையாது. 7005

கரிக்குருவியார் கண்ணுக்குக் காக்கையார் பொன்னொத்துத் தோன்றும்.

(சீவக சிந்தாமணி.)

கரிச்சுக் கொட்டினால் எரிச்சல் வராதா?

கரிசனப்பட்ட மாமியார் மருமகளைப் பார்த்து ஏக்கம் உற்றாளாம்.

கரிசனம் உள்ள கட்டியம்மா, கதவைத் திற பீப்பெய்ய.

கரிசனம் உற்ற சிற்றாத்தே, நீ கம்பங்கொல்லையில் வாடி கட்டி அழ. 7010

கரிசனம் எல்லாம் கண்ணுக்குள்ளே; வஞ்சனை எல்லாம் நெஞ்சுக்குள்ளே.

கரியாய் உமியாய்க் கட்டை விளக்குமாறாய்.

கரியை வழித்து முகத்தில் தடவினாள்.

கரி விற்ற பணம் கறுப்பாய் இருக்குமா?

(விற்ற காசு கரியாய் இருக்குமா? கறுக்குமா?)

கரு இல்லாத முட்டையும் குரு இல்லாத வித்தையும். 7015

(சிஷ்யனும்.)

கருக்கலில் எழுந்தாலும் நறுக்கென்று சமைக்க மாட்டாள்.

கருக்கலில் கயிற்றைப் பாம்பு என்ற கதை.

கருக்கி உருக்கி நெய் வார்த்தாலும் கண்ட நியாயந்தான் சொல்லுவான்.

கருங்கண்ணி பட்டாலும் கரையான் கண்ணாலும் திரும்பிப்பாரான்.

கருங்கல்லில் ஈரம் ஏறாத் தன்மை போல. 7020

கருங்கல்லில் எழுதிய எழுத்தைப் போல.

கருங்கல்லிலே நார் உரிப்பான்.

கருங்காலி உலக்கைக்கு வெள்ளிப் பூண் கட்டினது போல.

கங்காலிக் கட்டைக்கு வாய் நாணாத கோடாலி இளவாழைத்தண்டுக்கு வாய் நாணும்.

(கோணாத கோடாலி, கதலித்தண்டுக்குக் கோணி விடும்.)

கருங்குரங்கு போல மலங்க விழிக்காதே. 7025

கருங்கொல்லன் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை?

கருடன் இடம் போனால் எவன் கையில் பொருளும் தன் கையில் சேரும்.

(பிறன் கைப்பொருள். தன் கைப்பொருள்.)

கருடன் காலில் கெச்சை கட்டினது போல.

(சதங்கை.)

கருடன் பறக்க ஒரு கொசு பறந்தாற் போல.

கருடனுக்கு முன் ஈ ஆகுமா? 7030

கருடன் முன்னே கொசு பறந்த கதை.

கருடனுடன் ஊர்க்குருவி பறந்தது போல.

கருடனைக் கண்ட பாம்பு போல.

(சர்ப்பம்.)

கருடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை.

கருப்பங்கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போச்சுதாம். 7035

கருப்பங்கட்டியிலும் கல் இருக்கும்.

கருப்பங் கொல்லையிலே நெருப்புப் பொறி விழுந்தாற்போல்.

கருப்பட்டி என்றவுடனே சளப்பட்டி என்று நக்கக் கூடாது.

(என்றவன் வாயைக் கருப்பட்டி என்று.)

கருப்பட்டியிலும் கல் இருக்கும்.

(உண்டு.)

கருப்பட்டியைக் கொடுத்துக் கட்டிக்கொண்டு அழுதாலும் கசக்குது என்று சொல்கிறான். 7040

கருப்பட்டி லாபம் என்று புழுத்துப் போன கதை.

கருப்பிலே பிள்ளை விற்றாற்ப் போல.

(விற்ற கதை. கருப்பு-பஞ்சம்.)

கருப்புக் கட்டி ஆதாயத்தை எறும்பு இழுத்துக் கொண்டு போயிற்றாம்.

கருப்புக் கட்டிக்கு எறும்பு தானே வரும்.

கருப்புக் கட்டியிலும் கல் கிடக்கும். 7045

கருப்புக்கு இருந்து பிழை; கலகத்துக்கு ஒடிப் பிழை.

கருப்பூர் மத்யஸ்தம் போல.

கருப்பூர் வழக்குப் போல.

கரும்பில் எறும்பு இருந்தால் ஆனைக்கு என்ன?

கரும்பிலும் தேன் இருக்கும். 7050


கரும்பிலும் தேன் இருக்கும், கள்ளியிலும் பால் இருக்கும்.

கரும்பு ஆலையில் பட்ட எறும்பு போல.

கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்ந்தாற்போல்.

(தேவாரம்.)

கரும்பு உள்ள போதே ஆலை ஆட்டிக்கொள்,

(ஆலையிடு, ஆட்டவேனும் )

கரும்புக் கட்டாலே கழுதையை அடித்தால் கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி? 7055


கரும்புக் கட்டுக்கு எறும்பு தானே வரும்.

கரும்புக்கு உழுத புழுதி காயச்சின பாலுக்குச் சர்க்கரை ஆகுமா?

கரும்புக்குக் கணு இருந்தாலும் கசக்குமா?

கரும்புக்குப் பழமும் கற்றவருக்குப் பணமும் பொன்னுக்கு மணமும் இல்லை.

கரும்புக் கொல்லையைக் காக்க ஆனையை விட்டது போல. 7060


கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தன்னோடு வரும்.

கரும்பு கசத்தல் வாய்க் குற்றம்.

கரும்பு கசந்தால் வாய்க்குப் பொல்லாப்பு.

கரும்பு கசந்தது காலத்தோடே. வேம்பு தித்தித்தது வேளையோடே.

கரும்பும் எள்ளும் கசக்கினால்தான் பலன். 7065


கரும்பு முறித்துக் கழுதையை அடித்த கதை.

கரும்பும் வேம்பு ஆகும் காதல் போதையிலே.

கரும்பும் வேம்பு ஆச்சே,

கரும்பு ருசி என்று வேரோடு பிடுங்கலாமா?

 கரும்பு லாபம் எறும்பு கொண்டு போகும். 7070


கரும்பு வைப்பது காணி நிலத்தில்.

கரும்பைக் கழுதை முன் போட்டால் அதற்குத் தெரியுமோ கரும்பு ருசி?

கரும்பைக் கையில் பிடித்தவன் எல்லாம் மன்மதன் ஆகிவிடுவானா?

கரும்பை நறுக்கிப் பிழிந்தாற் போல.

கரும்பை முறித்தாற் போல. 7075


கரும்பை முறித்துக் கழுதையை அடித்த கதை.

கரும்பை விரும்ப அது வேம்பு ஆயிற்று.

கரும்பை விரும்ப விரும்ப வேம்பு.

கரும்பை வேம்பு ஆக்கினாற் போல.

கரும ஒழுங்கு பெருமைக்கு அளவு. 7080

(அழகு.)


கருமத்தை முடிக்கிறவன் அருமை பாரான்,

(ஒன்றும் பாரான்.)

கருமத்தை முடிக்கிறவன் கடலை ஆராய்வான்.

கருமம் தொலையாது.

கருமான் இருந்த இடமும் கழுதை புரண்ட களமும் சரி.

கருமான் உலைக்களத்தில் நாய்க்கு என்ன வேலை? 7085


கருமான் வீட்டு நாய் சம்மட்டித் தொனிக்கு அஞ்சுமா? கருவளையும் கையுமாய்.

கருவேல மரத்திற்கு நிழல் இல்லை; கன்னானுக்கு முறை இல்லை.

கருவை உரு அறியான், கண்டாரைப் பேரறியான்.

கரைக்கும் கரைக்கும் சங்கிலி, நடுவிலே இருக்கிறவன் நாய் விட்டை. 7090

கரை காணாத தோனிபோலத் தவிக்கிறது.

(கப்பலைப் போல.)


கரை தட்டின கப்பலைப் போல.

(கப்பற்காரன் போல.)

 கரைப் பக்கம் பாதை இருக்கக் கப்பல் ஏறினவனும், சொல்லாததை

    மனையாளுக்குச் சொன்னவனும் பட்ட பாடுபோல. 

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

    :(கலைப்பார்.)

கல் அடிச் சித்தன் போனவழி காடு வீடெல்லாம் தவிடு பொடி. 7095


கல் அடி பட்டாலும் கண் அடி படக் கூடாது.

கல் ஆனாலும் கணவன்; புல் ஆனாலும் புருஷன்.

கல் ஆனாலும் தடி ஆனாலும் பல் போகிறது ஒன்று.

கல் உள்ளதே கிணறு: கரை உள்ளதே தோட்டம்.

கல் எடுத்தால் நாய் ஓடும்; கம்பு எடுத்தால் பேய் ஓடும். 7100


கல் எல்லாம் மாணிக்கக் கல் ஆமோ?

கல் எறிக்குத் தப்பினாலும் கண் எறிக்குத் தப்பிக்க முடியாது,

(கூடாது.)

கல் என்றாலும் கணவன்; புல் என்றாலும் புருஷன்.

கல் ஒன்று, கணக்கு ஒன்று. குதிரை ஒன்று, கூத்தியாள் ஒன்று.

(கொங்கு நாட்டுக் குருக்களுக்கு உள்ளவை.)

கல் கிணற்றுக்கு ஏற்ற இரும்புத் தோண்டி. 7105


கல் கிள்ளிக் கை உய்ந்தார் இல்.

(பழமொழி நானூறு.)

கல் பிறவாத காடே உழு.

கல்மேல் எழுத்துக் கலைமான்,

கல்மேல் எழுத்துப் போல.

கல்மேல் நெல் விளையும் கல்யாணம் முடி. 7110


கல்யாணச் சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை போல.

கல்யாணத்தில் பஞ்சம் இல்லை.

கல்யாணத்திலும் பஞ்சம் இல்லை; களத்திலும் பஞ்சம் இல்லை.

கல்யாணத்துக்கு உதவாத பூசணிக்காய் பந்தலிலே கட்டி ஆடுகிறது.

கல்யாணத்துக்கு வந்த பெண்டுகளிடத்தில் போனால் போவேன்; இல்லாவிட்டால் கல்லிலே வைத்து நறுக்குவேன். 7115

 கல்யாணத்தை நிறுத்தச் சீப்பை ஒளித்து வைத்தது போல.

கல்யாணப் பஞ்சமும் களப்பஞ்சமும் இல்லை.

(கல்யாணப் பஞ்சம் உண்டு.)

கல்யாணப் பந்தலிலே கட்டின ஆடு போல.

கல்யாணப் பந்தலிலே தாலி கட்ட மறந்தது போல்.

கல்யாணம் ஆகாதவனுக்கு ஒரு கவலை: கல்யாணம் ஆனவனுக்கு ஆயிரம் கவலை. 7120


கல்யாணம் எங்கே? காசுப் பையிலே.

கல்யாணம் என்றால் கிள்ளுக் கீரையா?

கல்யாணம் கழிந்தால் கைச்சிமிழ் கிட்டாது.

கல்யாணம், கார்த்திகை, சீர், செனத்தி.

கல்யாணம் செய்கிறதும் கதவைச் சாத்துகிறதும். 7125


கல்யாணம் செய்தும் சந்நியாசியா?

கல்யாணம் பண்ணவில்லையென்று களிப்பு: ஊர்வலம் வரவில்லையென்று உளப்பு.

(ஒளப்பு.)

கல்யாணம் பண்ணாமல் பைத்தியம் தீராது: பைத்தியம் தீராமல் கல்யாணம் ஆகாது.

கல்யாணம் பண்ணிக்கொள் என்றால், நீயே பெண்டாட்டியாய் இரு என்றது போல.

கல்யாணம் பண்ணியும் சந்நியாசி, கடன் வாங்கியும் பட்டினி. 7180


கல்யாணம் பண்ணின வீட்டில் ஆறு மாசம் கருப்பு:

(கருப்பு:பஞ்சம்.)

கல்யாணம் பண்ணும் வரையில் பிள்ளை; கண்ணை மூடும் வரையில் பெண்.

கல்யாணம் போவதும் கட்டி அழுவதும் வட்டியில்லாக் கடன்.

கல்யாணம் முடிந்த பிறகு பந்தலில் வேலை என்ன?

கல்யாணமும் வேண்டாம்; கல்லெடுப்பும் வேண்டாம். 7135

கல்யான வீட்டில் ஆறு மாதம் கருப்பு.

கல்யாண வீட்டில் கட்டி அழுகிறவள் இழவு வீட்டில் விட்டுக் கொடுப்பாளா?

கல்யாண வீட்டிலே கட்டி அழலாமா?

கல்யாண வீட்டிலே பந்தற்காலைக் கட்டி அழுகிறவன் செத்த வீட்டில் சும்மா இருப்பாளா?

கல்யாண வீட்டிலே பிள்ளை வளர்த்தாற்போல். 7140

கல்யாண வீட்டிற்குப் போய் அறியான்; மேளச்சத்தம் கேட்டு அறியான்.

கல்யாண வீட்டுக் கறி அகப்பை, சாவு வீட்டுச் சோற்று அகப்பை.

கல்யாணி என்கிற பெண்ணுக்குக் கல்யாணமும் வேண்டுமோ?

கல்லடி சித்தன் போன வழி காடு மேடு எல்லாம் தவிடுபொடி.

கல்லன் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு. 7145

கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லுடன் பிறந்த பதராகும்மே

(வெற்றி வேற்கை.)

கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே,

(மல்லாடாதே.)

கல்லாதவரே கண் இல்லாதார்,

கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.

கல்லாமல் குல வித்தை பாதி வரும். 7150

கல்லார் உறவிலும் கற்றார் பகை நலம்.

கல்லார் உறவு அகல்; காமக் கடல் கட.

கல்லாலே கட்டிச் சாந்தாலே பூசியிருக்கிறதா?

கல்லில் நார் உறிப்பவன்.

கல்லில் நெல் முளைத்தாற்போல. 7155

(அருமைப்பாடு, )

கல்லிலும் வன்மை கண்மூடர் நெஞ்சு.

கல்லிலே நார் உரிக்கிறது போல.

கல்லிலே வெட்டி நாட்டினது போல.

கல்லின்மேல் இட்ட அம்புகளைப் போல.

கல்லின்மேல் இட்ட கலம் 7160


கல்லினுள் தேரையையும் முட்டைக்குள் குஞ்சையும் ஊட்டி வளர்ப்பது யார்?

கல்லுக் கிணற்றுக்கு ஏற்ற இருப்புத் தோண்டி.

கல்லுக்கும் முள்ளுக்கும் அசையாது வெள்ளிக்கிழமைப் பிள்ளையார்.

கல்லுக்குள் இருக்கிற தேரையையும் முட்டைக்குள் இருக்கிற குஞ்சையும் ஊட்டி வளர்க்கிறவர் யார்?

கல்லுக்குள் தேரையைக் காப்பாற்றவில்லையா? 7165


கல்லுப் பிள்ளையாரைக் கடித்தால் பல்லுப் போம்.

கல்லும் கரியும் கொல்லன் குசுவுமாய்ப் போச்சு.

கல்லும் கரைய மண்ணும் உருக அழுதாள்.

கல்லும் கரையுமே, கற்றூணும் இற்றுப் போமே!

கல்லும் காவேரியும் உள்ள மட்டும் வாழ்க! 7170


கல்லும் தேங்காயும் சந்தித்தது போலப் பேசுகிறான்.

கல்லுளிச் சித்தன் போன வழி காடு மேடெல்லாம் தவிடுபொடி.

கல்லுளி மங்கா, கதவைத் திற.

கல்லே தலையணை, கானலே பஞ்சு மெத்தை.

கல்லை ஆகிலும் கரைக்கலாம்; கல்மனத்தைக் கரைக்கலாகாது. 7175

(மூர்க்கன் மனத்தை.)


கல்லை இடறினாலும் கணக்கனை இடறாதே.

(கல்லோடு, கணக்கனோடு.)

கல்லை எதிர்த்தாலும் கணக்கனை எதிர்க்காதே.

கல்லைக் கட்டிக் கொண்டு கசத்தில் இறங்குவது போல.

கல்லைக் கட்டி முத்தம் கொடுத்தாற்போல.

கல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம். 7180


கல்லைக் கிள்ளிக் கை இழந்தது போலாம்.

கல்லைக் கிள்ளினால் கை நோகும்.

கல்லைக் குத்துவானேன்? கைநோகுதென்று அழுவானேன்?

கல்லைப் பிளக்கக் காணத்தை விதை.

(பிளந்து.)

கல்லைப்போல் அகமுடையான் இருக்கக் கஞ்சிக்கு அழுவானேன்? 7185


கல்லைப் போலக் கணவன் இருக்க நெற்சோற்றுக்கு அழுவானேன்?

கல்லைப் போலப் பெண்டாட்டி இருக்கக் கடப்பை அரிசிச் சோற்றுக்கு நிற்பானேன்?

கல்லோடு இடறினாலும் கணக்கனோடு இடறாதே.

(முரணினாலும்.)

கல் வருகிற விசையைக் கண்டால் பல்லைச் சிக்கென மூட வேண்டும்.

கல்வி அழகே அழகு. 7190

(நாலடியார்.)


கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு.

(அழகி. கடுகளவும்பிரகாசிக்கா.)

கல்வி உள்ள வாலிபன் கன கிழவனே.

(கற்றவன் கன கிழவன்.)

கல்வி என்ற பயிருக்குக் கண்ணீர் என்ற மழை வேண்டும்.

கல்வி ஒன்றே அழியாச் செல்வம்.

கல்விக்காரப் பெண்ணாள் களைவெட்டப் போனாள்;களைக்கொட்டு இல்லையென்று மெனக்கெட்டுப் போச்சு. 7195


கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்.

கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர்.

கல்வி கரை இல; கற்பவர் நாட் சில.

(நாலடியார்.)

கல்வி கற்கிறதைவிடக் கருத்தை ஆராய்கிறது நன்மை.

(தன் கருத்தை.)

கல்வி கற்றும் கழுநீர்ப் பானையில் கை இடுகிறது. 7200

(விடுவது போல.)


கல் விதைத்து நெல் அறுத்தவர் யார்?

கல்வியிற் பெரியவன் கம்பன்.

கல்வியும் குலமும் வெல்வது வினவின்.

கல் விழுந்தாலும் விழும்; காய் விழுந்தாலும் விழும். கல் வீட்டில் இருக்கும் கடனும் தெரியாதாம்; கறுப்புப் புடைவையில் இருக்கும் அழுக்கும் தெரியாதாம். 7205


கல்வீட்டுக்காரி போனால் கமுக்கம்; கூரை வீட்டுக்காரி போனால் கூச்சம்.

கல உமி நின்றால் ஓர் அரிசி தட்டாதா?

(ஓர் அவிழ்.)

கல உமி தின்றால் ஓர் அவல் கிடைக்காதா?

கலக்கத்தில் கலக்கம் கடன் கொண்டார் நெஞ்சக் கலக்கம்.

கலக்கந்தை கட்டிக் காணப் போனால் இருகலக் கந்தை கட்டி எதிரே வந்தாள். 7210


கலக்கம் இல்லா நெஞ்சுக்கு இனக்காப்பு என்ன?

கலக்கம்பு தின்றாலும் காடை காட்டிலே.

கலக்கம்பு போட்டு வளர்த்தாலும் காடை காட்டிலே.

கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும்; அடர விதைத்தால் போர் உயரும்.

கலக்கிய தண்ணீரில் கெளிற்று மீன் வாய் திறந்து தவிப்பது போல. 7215


கலக்கினும் தண் கடல் சேறு ஆகாது.

கலத்தில் இட்டாயோ, வயிற்றில் இட்டாயோ?

கலத்தில் சாதம் போட்டதும் காசிக்குப் போனவனும் வருவான்.

கலகத்திலே புளுகாதவன் நரகத்திலே போவானாம்.

(புகாதவன்)

கலகத்திலே புளுகாதவர் இல்லை. 7220


கலகத்திலே போயும் கால்மாடு தலைமாடா?

(போன பிற்பாடு.)

கலகம் கலந்தால் உலகம் கலங்கும்.

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

கலகமே மெய்யானால் புளுகாதவன் பாவம்.

கலத்தில் இட்டுக் கையைப் பிடிக்காதே. 7225

(பிடிக்கிறதா.)

 கலத்தில் சோற்றை இட்டுக் கையைப் பிடித்தாற்போல.

கலத்துக்குத் தெரியுமா, கர்ப்பூர வாசனை?

கலந்த விதைப்புச் சிறந்த பலனைத் தரும்.

கலப் பணத்தைக் காட்டிலும் ஒரு கிழப் பிணம் நல்லது.

கலப் பயறு விதைத்து உழக்குப் பயிர் விளைந்தாலும் புதுப் பயறு புதுப் பயறுதான். 7230


கலப் பால் கறக்கலாம்; துளிப் பால் முலைக்கு ஏற்றலாமா?

(உழக்குப் பால் ஏற்ற முடியுமா?)

கலப் பால் கறந்தாலும் கன்று முதலாகுமா?

கலப் பால் குடித்த பூனை ஆழாக்குப் பால் குடியாதா?

(உழக்குப் பால்)

கலப் பால் குடித்த பூனை ஓர் உழக்காகிலும் கறக்கத் தருமா?

கலப் பால் கூடி ஒரு கன்று ஆகுமா? - 7235


கலப் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற் போல.

கலப் பாலுக்குத் துளி பிரை.

கலப் பாலை ஒருமிக்கக் குடித்த பூனையை உழக்காகிலும் கறக்கச் சொன்னால் கறக்குமா?

கலப் பாலைக் காலால் உதைத்துவிட்டு விலை மோருக்கு வெளியே அலைகிறதா?

(விலை மோருக்கும் கூழுக்கும் வெளியே தவிக்கிறதா?)

கலப்பு ஆனாலும் பூசப் பூசப் பொன் நிறம். 7240


கலப்புல் தின்றாலும் காடை காட்டுக்குள்ளே .

கலப்புழுவை நீக்கின கர்ணன்.

கலம் கந்தை கொண்டு காண வந்தாள்; இருகலக் கந்தை கொண்டு எதிரே வந்தாள்.

கலம் கலந்தால் குலம் கலக்கும்.

கலம் கிடக்கிறது கழுவாமல்;

கல நெல் கிடக்கிறது குத்தாமல். 7245


கலம் குத்தினாலும் பதர் அரிசி ஆகாது.

கலம் குத்துகிறவள் காமாட்டி, கப்பி குத்துகிறவள் சீமாட்டி.

கலம் பதரைக் கத்தினாலும் அரிசி ஆகாது.

 கலம் பாலுக்குத் துளிப் பிரை,

கலம் போனதும் அல்லாமல் கண்ணுக்கும் மூக்குக்கும் வந்ததுபோல. 7250


கலம் மா இடித்தவள் பாவி, கப்பி இடித்தவள் புண்ணியவதியா?

கலவன் கீரை பறிப்பது போலப் பேசுகிறாள்.

(கலவைக்கீரை.)

கலிக்குப் புதுமையான காரியம் இருக்கிறது.

கலிக்கும் கிலிக்கும் கந்தனை எண்ணு.

கலி காம தேனு. 7255


கலி காலத்திலே கண்ணுக்கு முன் காட்டும்.

கலியன் பாற்சோறு கண்டது போல.

கலெக்டரோடு வழக்குக்குப் போனாலும் கணக்கனோடு வம்புக்குப் போகக் கூடாது.

கலை பல கற்றாலும் மலைப்பது போல இருக்கும்.

கலையும் மப்பைக் கண்டு கட்டி இருந்த விதையை வட்டிக்கு விட்டானாம். 7260


கலையும் மப்பைக் கண்டு கரைத்த மாவை வட்டிக்கு விட்டதுபோல.

கவ்வை சொல்லின் எவ்வர்க்கும் பகை.

கவடு இருந்த நெஞ்சும் களை இருந்த பயிரும் கடைத்தேறா.

கவண் எறி நிலை நில்லாது; கண்டவன் தலையை உடைக்கும்.

கவண் எறி நெறியில் நில்லாதே; கண்டவன் தலையை உடைக்கும்? 7265


கவரைச் செட்டி மேலே கழுதை புரண்டு ஏறினாற் போல.

கவலை இல்லாக் கஞ்சி கால் வயிற்றுக்குப் போதும்.

கவலை உடையாருக்குக் கண் உறக்கம் வராது.

(இல்லை.)

கவி அறியாவிடில் ரவியும் அறியான். கவி கண் காட்டும், 7270


கவி கொண்டாருக்குக் கீர்த்தி; அதைச் செவி கொள்ளாருக்கு அபகீர்த்தி.

கவி கொண்டாருக்கும் கீர்த்தி: கலைப்பாருக்கும் கீர்த்தியா?

 கவிதை எழுதின கை கணக்கு எழுதுகிறது.

கவிழ்ந்த பால் கலம் ஏறாது.

கவிந்திரானாம் கஜேந்திராணாம் ராஜாவே நிர்பயோகி. 7275


கவுண்டன் கல்யாணம் ஒன்று இரண்டாய் முடிந்து போச்சு.

கவுண்டன் வீட்டு எச்சில் இலைக்கு கம்பன் வீட்டு நாய்கள் எல்லாம் அடித்துக் கொள்கின்றன.

கவைக்கு உதவாத காரியம்.

கவைக்குக் கழுதையையும் காலைப் பிடி.

கவைக்குத் தகாத காரியம் சீமைக்குத் தகுமா? 7280


கவையை ஓங்கினால் அடி இரண்டு.

கவையைப் பற்றிக் கழுதையின் காலைப் பிடி.

கழனிக்கு அண்டை வெட்டிப் பார்: கண்ணுக்கு மை இட்டுப் பார்.

கழனியில் விழுந்த கழுதைக்கு அதுவே கைலாசம்.

(புரண்ட,)

கழி இருந்தால் கழுதையை மேய்த்துக் கொள்ளலாம். 7285


கழிச்சலும் விக்கலும் சேர்ந்தால் நம்பப் படாது.

கழித்த பாக்குக் கொடுக்காத பெரியாத்தாள் கடற்கரை வரை வந்து வழி விட்டாளாம்.

(செட்டிநாட்டு வழக்கு.)

கழு ஏறத் துணிந்த நீலி கையில் மை இட்டதற்குக் கரிக்கிறது என்றாளாம்.

(கண்ணில் மை கரிக்கிறது என்றாளாம்.)

கழு ஒன்று, களவு ஆயிரம்.

கழுக்கு மொழுக்கு என்று இருக்கிறான். 7290


கழுக்கு மொழுக்கு என்று கட்டுருக் காளை போல.

கழுகாய்ப் பிடுங்குகிறான்.

(கழுகுபோல்.)

கழுகுக்கு மூக்கிலே வேர்த்தாற் போல.

கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம், கையிலே இருக்கிறது கொடிய நகம்.

கழுத்தில் இருக்கிறது ருத்திராட்சம்; மடியில் இருப்பது கன்னக் கோல். 7295

(கட்கத்தில், கையில்.)

கழுத்திலே கரிமணி இல்லை; பெயர் முத்துமாலை.

கழுத்திலே குத்துகிறது கண் கெட்டவனுக்குத் தெரியாதா?

கழுத்திலே தாலி ஏறினால் நாய்மாதிரி வீட்டில் கிடக்க வேண்டியது தானே?

கழுத்துக்குக் கருகு மணி இல்லை; பெயர் முத்தாபரணம்.

கழுத்திலே தாழி வடம்; மனத்திலே கரவடம். 7300

(அவகடம்.)


கழுத்து அறுக்கக் கத்தி கையில் கொடுத்தது போல.

கழுத்துக்குக் கீழே போனால் கஷ்டம்.

கழுத்துக்குமேல் கத்தி வந்திருக்கச்சே செய்ய வேண்டியது என்ன?

கழுத்துக்குமேல் சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?

கழுத்து மாப்பிள்ளைக்குப் பயப்படாவிட்டாலும் வயிற்றுப் பிள்ளைக்குப் பயப்பட வேண்டும். 7305


கழுத்து வெளுத்தாலும் காக்கை கருடன் ஆகுமா?

கழுத்தைக் கொடுத்தாச்சு: கைவிலங்கு போட்டாச்சு; பத்து நாள் சிறையில் பதுங்கிக் கிடக்க வேணும்.

கழுத்தைக் கொடுத்தாலும் எழுத்தைக் கொடாதே.

கழுதை அறியுமா, கந்தப்பொடி வாசனை?

(கர்ப்பூர வாசனை.)

கழுதை உழவுக்கு வராது. 7310


கழுதை உழுகிறவன் குடியானவனா?

கழுதை உழுது கம்பு விளையுமா? கண்டியான் உழுது நெல் விளையுமா?

கழுதை உழுது குறவன் குடி ஆனானா?

கழுதை உழுது வண்ணான் குடி ஆனானா?

கழுதைக் காமம் கத்தினால் தீரும்; நாய்க் காமம் அலைந்தால் தீரும். 7315


கழுதைக்கு உபதேசம் காதில் ஏறுமா?

(உபதேசம் செய்தால்.)

கழுதைக்கு உபதேசம் காதிலே ஓதினாலும் காள் காள் என்ற புத்தியை விடாது.

 கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலன்றி அங்கொன்றும் இல்லை.

(அங்கேதும்.)

கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவயக் குரலே ஒழியச் சவைக்குரல் இல்லையாம்.

(உரைத்தாலும்.)

கழுதைக்கு உபதேசம் பண்ணினால் அபத்தக் குரலைத் தவிர நல்ல குரல் இல்லை. 7320


கழுதைக்கு என் கடிவாளம்?

(ஏன் கன்னம்?)

கழுதைக்குக் காது அறுந்து, நாய்க்கு வால் அறுத்தது போல.

கழுதைக்குச் சேணம் கட்டினால் குதிரை ஆகுமா?

(ஜீனி கட்டினால்.)

கழுதைக்குத் தெரியுமா கரும்பு ருசி?

(கஸ்தூரி வாசனை.)

கழுதைக்குப் பரதேசம் குட் டிச் சுவர். 7325


கழுதைக்குப் பின்னால் போகாதே; எஜமானுக்கு முன்னால் போகாதே.

கழுதைக்கு வரி கட்டினால் குதிரை ஆகுமா?

கழுதைக்கு வாழ்க்கைப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

கழுதை கத்து என்றால் கத்தாதாம்; தானாகக் கத்துமாம்.

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்; நாய் கெட்டால் குப்பைத் தொட்டி. 7330


கழுதை தப்பினால் குட்டிச் சுவர்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல.

கழுதை நினைத்ததாம் கந்தலும் கதக்கலும்.

கழுதை தினைத்ததாம் கெண்டை போட்ட முண்டாசு.

கழுதைப் பாரம் வண்ணானுக்கு என்ன தெரியும்: 7335


கழுதைப் பால் குடித்தவன் போல் இருக்கிறான்.

 கழுதைப் புட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்.

(விட்டை. லத்தி.)

கழுதைப் புண்ணுக்குத் தெருப்புழுதி மருந்து.

கழுதைப் பொதியில் உறை மோசமா?

(மாறாட்டமா?)

கழுதைப் பொதியில் ஐங்கலம் மாறாட்டமா? 7340


கழுதை புரண்ட களம் போல.

கழுதை புரண்டால் காடு கொள்ளாது.

கழுதை புவியில் இருந்தால் என்ன? பாதாளத்தில் இருந்தால் என்ன?

கழுதை மயிர் பிடுங்கித் தேசம் கட்டி ஆள்கிறதா?

கழுதை மூத்திரத்தை நம்பிக் கட்டுச் சோற்றை அவிழ்க்கிறதா? 7345


கழுதைமேல் ஏறி என்ன? இறங்கி என்ன?

கழுதைமேல் ஏறியும் பெருமை இல்லை: இறங்கியும் சிறுமை இல்லை.

கழுதையாகப் போய்க் கட்டெறும்பாய்த் திரும்பி வந்தது.

கழுதையாய்ப் பிறந்தாலும் காஞ்சீபுரத்திலே பிறக்க வேணும்.

கழுதையின் எறியைக் கழுதைதான் தாங்க வேணும். 7350


கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டாற் போல.

(பிட்டத்தில்.)

கழுதையும் குதிரையும் சரி ஆகுமா?

கழுதையும் நாயும் சேர்ந்து கத்தினாற்போல.

கழுதையும் பணமும் சேர்ந்து வந்தால் பணத்தை வாங்கிக் கொண்டு கழுதையைத் துரத்தி விடு.

கழுதையைக் கட்டி ஓமம் வளர்த்தது போல. 7355

(வளர்க்கலாமா?)


கழுதையைக் கொண்டு உழுது குறவன் உழவன் ஆனான்.

கழுதையையும் குதிரையையும் பிணைத்தாற் போல.

கழுதை லத்தி கை நிறைய.

கழுதை வளையற்காரன் கிட்டப் போயும் கெட்டது; வண்ணான் கிட்டப் போயும் கெட்டது.

கழுதை வாலைப் பிடித்துக் கரை ஏறுகிறதா? 7360


கழுதை விட்டை ஆனாலும் கைநிறைய வேண்டும்.

கழுதை விட்டை கை நிரம்பினால் போதும் என்ற கதை.

கழுதை விட்டையிலே மேல் விட்டை வேறே; அடி விட்டை வேறேயா?

(முன் விட்டை, பின் விட்டை.)

கழுதை விட்டையைக் கைநிறையப் பொறுக்கினது போல.

கழுநீர்த் தொட்டி நாய் போல. 7365


கழுநீர்ப் பானையில் விழுந்த பல்லியைப் போல.

கழுநீருக்கு அண்டை வீட்டைப் பார்; கண்ணுக்கு மையிட்டுப் பார்.

கழுவிக் கழுவி ஊற்றினாலும் கவிச்சு நாற்றம் போகாது.

கழுவிக் கழுவிப் பின்னும் சேற்றை மிதிக்கிறதா?

கழுவிக் குளித்தாலும் காக்கை நிறம் மாறாது; உருவிக் குளித்தாலும் ஊத்தை நாற்றம் போகாது. 7370


கழுவிய காலைச் சேற்றில் வைக்கிறதா?

கழுவில் இருந்து கை காட்டுவான்.

கழுவிலே நெய் உருக்குகிற கள்ளி முண்டை.

கழுவுக்கு ஏற்ற கோமுட்டி.

கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன். 7375


கழைக் கூத்து ஆடினாலும் காசுக்குக் கீழேதான் வரவேணும்.

கழைமேல் ஏறி ஆடினாலும் கீழே வந்துதான் பிச்சை கேட்க வேணும்.

(இறங்கித்தான் காசு.)

கள் உண்ட குரங்கு போல.

கள் உண்ட நாய் போல .

கள் கலப்பணத்திலும் கர்ப்பூரம் கால் பணத்திலும். 7380


கள் குடித்தவன் பேச்சு, பொழுது விடிந்தால் போச்சு.

கள் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்.

கள் விற்ற காற்காசிலும் அமிர்தம் விற்ற அரைக் காசு நேர்த்தி.

 கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதை விடக் கர்ப்பூரம் விற்றுக்கால் பணம் சம்பாதிப்பது மேல்.

(ஆயிரம் பணம் சம்பாதிப்பதை விட, கஸ்தூரி விற்று.)

கள்ளத்தனம் எல்லாம் சொல்லத்தானே போகிறேன்? 7385


கள்ள நெஞ்சம் துள்ளிக் குதிக்கும்.

கள்ள நெஞ்சு காடு கொள்ளாது.

கள்ளப் பிள்ளையிலும் செல்லப் பிள்ளை உண்டா?

கள்ளப் பிள்ளையும் செல்லப் பிள்ளையும் ஒன்றா?

கள்ளப் புருஷனை நம்பிக் கணவனைக் கைவிடலாமா? 7390


கள்ளம் பெரிதா? காப்புப் பெரிதா?

கள்ளம் போனால் உள்ளது காணும்.

கள்ள மனம் துள்ளும்.

(துள்ளிப் பாயும்; துள்ளி யடிக்கும்.)

கள்ள மாடு சந்தை ஏறாது.

கள்ள மாடு துள்ளும். 7395


கள்ள மாப்பிள்ளைக்குக் கண்ணீர் முந்தும்.

கள்ள வாசலைக் காப்பானைப் போல.

கள்ள விசுவாசம், கழுத்தெல்லாம் செபமாலை.

கள்ளன் அக்கம் காடு கொள்ளாது.

கள்ளன் ஆனால் கட்டு; வெள்ளன் ஆனால் வெட்டு. 7400


கள்ளன் உறவு உறவு அல்ல; காசா விறகு விறகு அல்ல.

கள்ளன் கொண்ட மாடு எத்துறை போய் என்ன?

கள்ளன் செய்த சகாயம் காதை அறுக்காமல் கடுக்கனைக் கொண்டான்.

கள்ளன் பிள்ளைக்குக் கள்ளப் புத்தி.

(பிள்ளைக்கும்.)

கள்ளன் பின் போனாலும் குள்ளன் பின் போகக் கூடாது. 7405

 கள்ளன் புத்தி கன்னக் கோலிலே,

(புத்தி திருட்டு மேலே.)

கள்ளன் பெண்சாதி கைம்பெண்டாட்டி.

(பெண்.)

கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா?

கள்ளன் போன மூன்றாம் நாள் கதவை இழுத்துச் சாத்தினானாம். 7410


கள்ளன் மறவன் கலந்த அகம்படியான், மெல்ல மெல்ல வந்த வெள்ளாளன்.

(கனத்ததோர் அகம்படியன். வெள்ளாளன் ஆனான்.)

கள்ளன் மனையாளைக் களவுப் பொருளைக் குறி கேட்கலாமா?

கள்ளன் மனைவி கைம்பெண் என்றும்.

கள்ளனுக்கு ஊர் எல்லாம் பகை.

கள்ளனுக்குக் களவிலே சாவு, 7415


கள்ளனுக்குக் காண்பித்தவன் பகை.

கள்ளனுக்குக் கூ என்றவன் பேரிலே பழி.

கள்ளனுக்குத் தெரியும் களவு முறை.

கள்ளனுக்குத் தோன்றும் திருட்டுப் புத்தி.

கள்ளனுக்குப் பாதி, கறிக்குப் பாதி. 7420


கள்ளனுக்கும் பாதி, வெள்ளனுக்கும் பாதி.

கள்ளனுக்குள் குள்ளன் பாய்ந்தது போல.

கள்ளனும் ஆகி விளக்கும் பிடிக்கிறான்.

(கள்ளனாயிருந்து பிடிக்கிறதா?)

கள்ளனும் உண்டு, பயமும் இல்லை என்கிறது போல.

கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியுமட்டும் திருடலாம். 7425

(சேர்ந்தால்.)

கள்ளனும் வெள்ளனும் ஒன்று.

கள்ளனை ஆரும் நள்ளார் என்றும்.

கள்ளனை உள்ளே விட்டுக் கதவைச் சார்த்தினாற் போல.

(உள்ளே வைத்து.)

கள்ளனைக் காட்டிக் கொடுத்தவன் பகை.

கள்ளனைக் காவல் வைத்தது போல. 7430


கள்ளனைக் குள்ளன் கிள்ளியது போல.

கள்ளனைக் குள்ளன் பிடித்தான்.

கள்ளனைக் கொண்டுதான் கள்ளனைப் பிடிக்க வேணும்.

கள்ளனைத் தேடிய கள்ளப் பசுப் போல.

கள்ளனை நம்பினாலும் நம்பலாம்; குள்ளனை நம்பக்கூடாது. 7435


கள்ளனையும் தண்ணீரையும் கட்டி விட வேணும்.

கள்ளனையும் புகையிலையையும் கட்டித் தீர்.

கள்ளனையும் வெள்ளனையும் கட்டி விடு.

கள்ளா வா, புலியைக் குத்து.

கள்ளி என்னடி கல் இழைப்பது? காதில் இருப்பது பித்தளை. 7440


கள்ளிக்கு ஏன் முள் வேலி? கழுதைக்கு ஏன் கடிவாளம்?

கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; கொள்ளிக்கு வாய் முந்தும்.

கள்ளிக்குக் கண்ணீர் முந்தும்; அவள் கணவனுக்குக் கை முந்தும்.

கள்ளிக்குக் கல நீர் கண்ணிலே.

கள்ளிக்குத் தண்ணீர் கண்ணீர்; நீலிக்குத் தண்ணிர் நிமையிலே. 7445


கள்ளிக்கு நாடு எல்லாம் காடு.

கள்ளிக்கும் கற்றாழைக்கும் களை வெட்டுவதா?

கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்?

கள்ளிக்கு வேலி ஏன்? சுள்ளிக்குக் கோடாலி ஏன்?

கள்ளிக் கொம்புக்கு வெள்ளிப்பூண் கட்டினது போல. 7450

(கட்டினானாம்.)

 கள்ளிகள் எல்லாம் வெள்ளிகள் ஆவார்; காசு பணத்தாலே; வெள்ளிகள் எல்லாம் கள்ளிகள் ஆவார், விதியின் வசத்தாலே,

கள்ளிச் செடிக்கு மகாவிருட்சம் என்று பெயர் வைத்தது போல.

கள்ளி நீண்டு வளர்ந்தால் காய் உண்டோ? கனி உண்டோ?

(வளர்ந்தால் என்ன?)

கள்ளிப் பூவைக் கட்டிச் சூட்டினது போல.

கள்ளி பெருத்து என்ன? காய் ஏது? பழம் ஏது? 7455

(காய் உண்டா? நிழல் உண்டா?)


கள்ளியிலும் சோறு: கற்றாழையிலும் சோறு,

கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்.

கள்ளி வேலியே வேலி; கரிசல் நிலமே நிலம்.

கள்ளுக் குடித்தவன் கொள்ளுப் பொறுக்கான்.

கள்ளுக் குடியனுக்கு வாய் என்றும் பிட்டம் என்றும் தெரியாது. 7460


கள்ளுக் கொள்ளா வயிறும் இல்லை; முள்ளுக் கொள்ளா வேலியும் இல்லை.

(யாழ்ப்பான வழக்கு.)

கள்ளும் சூதும் இருக்கும் இடத்தில் விலை மகளும் கள்ளனும் கண்டிப்பாய் இருப்பார்கள்.

கள்ளை ஊற்றி உள்ளதைக் கேள்.

கள்ளைக் காலால் உதைத்தது தவறா?

கள்ளைக் குடித்தவன் உள்ளதைக் கக்குவான். 7465


கள்ளைக் குடித்தவனுக்குக் கள் ஏப்பம்: பாலைக் குடித்தவனுக்குப் பால் ஏப்பம்.

கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்.

கள்ளைக் கொடுத்துக் காரியத்தை அறி.

கள்ளை விட்டுக் காட்டுத் தேனைக் குடித்தது போல.

களக்காடு. 7470

(பைத்தியம்.)

 களக்காடு மடக்ராமம், அன்ன வஸ்த்ரம் ஜலம் நாஸ்தி; நித்யம் கலக மேவச.

களஞ்சியத்தில் பெருச்சாளி சாப்பிடுவது போல.

களம் காக்கிறவனை மிரட்டுவானாம், போர் பிடுங்குகிறவன்.

களர் உழுது கடலை விதை.

களர் கெடப் பிரண்டை இடு. 7475


களர் நிலத்தில் கரும்பு வை.

களர் நிலத்திலே சம்பா விளையுமோ?

களர் முறிக்க வேப்பந் தழை.

களரை ஒழிக்கக் காணம் விதை.

(காணம் - கொள்.)

களரை நம்பிக் கெட்டவனும் இல்லை; மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. 7480


களவாண்டு பிழைப்பதிலும் கச்சட்டம் கழுவிப் பிழைக்கலாம்.

களவு ஆயிரம் ஆனாலும் கழு ஒன்று.

களவுக்கு ஒருவர்; கல்விக்கு இருவர். களவு கற்றாலும் தன்னைக் காக்க வேண்டும். 7485


களவு கொண்டு ஆபரணம் பூண்டாற் போல.

களவும் கற்று மற.

(கத்து மற.)

களி கிளறிக் கல்யாணம் செய்தாலும் காளியண்ணப் புலவனுக்குப் பத்துப் பணம்.

(பூந்துறைப் பகுதி வழக்கு.)

களியப் பேட்டை களக்ராமம்.

(செட்டிபாளையத்துக்கு அக்கரை.)

களிறு பிளறினால் கரும்பைக் கொடு.

களிறு வாயில் அகப்பட்ட கரும்பு மீளுமா? 7490


களை எடாப் பயிர் கால் பயிர்.

களை எடாப் பயிரும் கவடுள்ள நெஞ்சும் கடைத்தேறா.

 களை எடாதவன் விளைவு எடான்.

களை எடுக்காதவன் கபோதி.

களை எடுத்தவன் கைமூடி உள்ளான். 7495


களை கிளைத்தால் போச்சு: பயிர் கிளைத்தால் ஆச்சு.

களைத்தவன் கம்பைத் தின்ன வேண்டும். களைந்த பழம் தானே விழும்.

(கனிந்த பழம்.)

களை பிடுங்காப் பயிர் கால் பயிர்.

களை மூடிக்கொண்டது போல. 7500


களையக் கூடாததைக் கண்டால் அடிபெயர்ந்து அப்புறம் போ.

களையக் கூடாததைக் கண்டியாமல் சகித்துக் கொள்.

களையை முளையிலே கிள்ளு.

கற்க கசடு அறக் கற்க.

கற்க கசடு அற; கற்றபின் அதுவே இனிப்பு. 7505


கற்கண்டால் செய்த எட்டிக் கனியும் கசக்குமா?

கற்கையில் கல்வி கசப்பு: கற்றபின் அதுவே இனிப்பு.

கற்பகத் தருவைச் சார்ந்த காகமும் அமுதம் உண்ணும்.

கற்பகத்தைச் சார்ந்தும் காஞ்சிரங்காய் கேட்கலாமா?

கற்பக விருட்சத்தண்டை போயும் காஞ்சிரங்காய் வாங்கினாற் போல், 7510


கற்பனை கல்லைப் பிளக்கும்.

கற்பாறையில் அடிக்கும் முளைக் கச்சானது அப்பாறையில் இறங்காதது போல.

கற்பித்தவன் கண்ணைக் கொடுத்தவன்.

கற்பித்தவன் காப்பாற்றுவான்.

(உயிரை.)

கற்பித்தவனுக்குக் காக்கக் கடன். 7515

 கற்பித்தவனுக்குக் காக்க வல்லமை இல்லையா?

கற்பு இல்லா அழகு வாசனை இல்லாப் பூ.

கற்பு எனப்படுவது சொல் தவறாமை.

(திறம்பாமை.)

கற்ற இடத்திலா வித்தையைக் காட்டுகிறது?

கற்றது எல்லாம் வித்தை அல்ல; பெற்றது எல்லாம் பிள்ளை அல்ல. நட்டது எல்லாம் பயிர் அல்ல. 7520

(மரம் அல்ல.)


கற்றது கடுகளவு: கல்லாதது கடல் அளவு.

(கற்றது கை அளவு.)

கற்றது கை மண் அளவு: கல்லாதது உலகளவு.

கற்றது சொல்வான்; மற்று என்ன செய்வான்?

கற்றதைக் காய்ச்சியா குடிக்கப் போகிறாய்?

(பார்க்கிறாய்)

கற்றலிற் கேட்டலே நன்று. 7525

(பழமொழி தானுாறு.)


கற்றவர் கோபம் நீர்ப்பிளவு போல் மாறும்.

கற்றவன் உண்பான்; பெற்றவளும் உண்பாள்.

கற்றவனிடத்திலா வித்தையைக் காட்டுவது?

கற்றவனுக்கு எந்த வித்தையும் கால் நாழிகையில் வரும்.

(கற்றவனுக்கு வித்தை கால் நாழிகை.)

கற்றவனுக்கு மயிர் அத்தனை: கல்லாதவனுக்கு மலை அத்தனை. 7530


கற்றவனும் உண்பான்; பெற்றவனும் உண்பான்.

(பெற்றவளும்.)

கற்ற வித்தையைக் காய்ச்சிக் குடிக்கிறவன் போல.

கற்ற வித்தையைப் பெற்ற தாயிடம் காட்டுவதா?

(காட்டாதே.)

கற்றறி மூடன்.

(மோழை)

கற்றறிவு இல்லாத மாந்தர் கதிகெட்ட மடையர் ஆவார். 7585


கற்றாழை காய்ச்சியா குடிக்கப் பார்க்கிறாய்?

கற்றாழைச் சோறும் வெண்டைக்காய்க் குழம்பும் விளக்கெண்ணெய்த் தாளிதமும் சேர்ந்தாற் போல.

கற்றாழை சிறுத்தாலும் ஆனை அடி வைக்காது.

கற்றாழை நாற்றமும் பித்தளை வீச்சும் போகா.

கற்றது அறிந்தார் கண்டது அடக்கம். 7540


கற்றுக் கற்றுச் சொல்லியும் காரியத்தின்மேல் கண்.

கற்றுக் கற்றுப் பேசாதே;

(கத்திக் கத்திப் பேசாதே.)

கற்றுக் கொடுத்த சொல்லும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாள் நிற்கும்?

(நிலையா?)

கற்றும் கற்றறி மோழை; கண் இருந்தும் குருடு.

கற்றோர் அருமை கற்றோர் அறிவர். 7545

(பெற்றோர் அறிவர்.)


கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

(புகழ் உண்டு.)

கறக்க ஊறும் ஆவின் பால். கற்க ஊறும் மெய்ஞ்ஞானம்.

(கறக்கக் கறக்க ஊறும் பசுவின்பால், படிக்கப் படிக்க ஊறும் மெய்ஞ்ஞானம்.)

கறக்கிறது நாழிப் பால்; உதைக்கிறது பல்லுப் போக.

(உழக்குப் பால்.)

கறக்கிற பசுவையும் கைக் குழந்தையையும் கண்ணாரப் பார்க்க வேண்டும்.

கறக்கிற மாட்டைக் கள்ளன் கொண்டு போனால் வறட்டு மாடு மகாலட்சுமி ஆகும். 7550


கறந்த பால் கறந்த படியே பேசு.

கறந்த பால்போல் பேசுகிறான்.

 கறந்த பால் முலைக்கு ஏறுமா?

(காம்புக்கு ஏறுமா? முலைப் புகா.)

கறந்த பாலும் எச்சில்; பிறந்த பிள்ளையும் எச்சில்.

கறந்த பாலைக் காக்கையும் தொடாது. 7555


கறந்த பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காச வியாதி தானே வரும்.

(காச நோய்.)

கறந்த மேனியாய்ப் பேசுகிறது.

கறவை உள்ளான் விருந்துக்கு அஞ்சான்.

கறவை மாடு கண்ணுக்குச் சமானம்.

கறிக்கு அலைந்தவன் பீர்க்குப் போடு. 7560


கறிக்கு இல்லாத வாழைக்காய் கட்டித் தொங்குகிறதாம்.

கறிக்கு இல்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்கிற்றாம்.

(தொங்கவோ? பந்தலில் தோரணம் கட்டினானாம்.)

கறிக்கு உழக்கு நெய் வார்த்தாலும் கண்ணாரக் கண்டதைச் சொல்.

கறிக்குக் கலநெய் வார்த்தாலும் கணக்கோடே வார்க்க வேண்டும்.

கறிக்குக் கறி நெய் விட்டாலும் கணக்குக் கணக்காய் இருக்க வேணும். 7565


கறி மீனுக்காகக் குளத்தை வெட்டி விடுவதா?

கறியிலே உயர்த்தி கத்தரிக்காய்; உறவிலே உயர்த்தி சின்னாயி.

கறியிலே கத்தரிக்காய்; உறவிலே சிற்றம்மை.

கறி வேப்பிலை கண்போல்.

(கறி வேப்பிலை கன்று போல்.)

கறுத்தது எல்லாம் தண்ணீர்: வெளுத்தது எல்லாம் பால். 7570


கறுத்த பார்ப்பானையும் வெளுத்த பறையனையும் நம்பாதே.

கறுத்த மூஞ்சியும் வெளுத்த சோறும்.

கறுப்பாய் இருந்தாலும் சந்திரன் சந்திரன்தான்.

(கறை இருந்தாலும்.)

கறுப்பிலும் குறிப்பு அழகு.

கறுப்புக்கு நகை பூட்டிக் கண்ணாலே பார் 7575

கறுப்புக்கு நகை போட்டுக் காதவழி நின்று பார்; சிவப்புக்கு நகை போட்டுச் செருப்பால் அடி.

கறுப்பு நாய் வெள்ளை நாய் ஆகுமா?

கறுப்புப் பார்ப்பானையும் சிவப்புப் பறையனையும் நம்பக் கூடாது.

(வெளுத்த பறையனையும்.)

கறுப்பும் வெள்ளையும் கண்ணுக்குத் தெரியாவா?

கறுப்பு மாடு கால் மாடு. 7580


கறுப்பு வெளுப்பு ஆகாது; கசப்பு இனிப்பு ஆகாது.

கறுப்பே ஓர் அழகு; காந்தலே ஒரு ருசி.

கறுப்பைக் கண்டு சிரிக்காதே.

கறுமுறு காந்தப்படலம் வாசிக்கிறார் கவிராயர்.

கறையான் புற்றில் அரவம் குடிகொண்டது போல. 7585

(பாம்பு புகுந்தது போல.)


கறையான் புற்று எடுக்கப் பாம்பு குடி புகுகிறது போல.

கறையான் புற்றுப் பாம்புக்கு உதவாது.

கறையானும் வாய் ஈரம் கொண்டு பிழைப்பது போல.

கன்மத்தினால் சாதியன்றிச் சன்மத்தினால் இல்லை.

(சாதியா?)

கன்மத்தினால் வந்தது தன்மத்தினால் போக வேண்டும். 7590


கன்யாகுமரி முதல் கருக்கரை வரை.

கன்றின் கீழேயும் கடன்காரன் கீழேயும் நிற்காதே.

கன்றும் ஆடும் களத்தில் படுத்தால் வைக்கோலும் இல்லை; செத்தையும் இல்லை.

கன்று இருக்கக் காசு அத்தனை பால் கறவாப் பசு, கன்று செத்த பிறகு கலப்பால் கறக்குமா?

கன்று இருக்கச்சே கரண்டிப் பால் இல்லை; கன்று செத்த பிறகா கலப் பால் கறக்கும்? 7595


கன்று இருக்கையில் கறவாத பசு கன்று செத்த பிறகு கறக்குமா?

கன்று உள்ளபோதே காணோம்; செத்த பிறகா கொட்டப் போகிறது?

கன்றுக் குட்டி களம் படுக்குமா?

கன்றுக்குட்டி கிட்டவும் கடன்காரன் கிட்டவும் இருக்கக் கூடாது.

கன்றுக் குட்டி பயம் அறியாது. 7600

கன்றுக்குட்டி மன்றைத் தின்று மன்று மன்றாய்ப் பேன்றது.

கன்றுக் குட்டியை அவிழ்க்கச் சொன்னார்களா? கட்டுத் தறியைப் பிடுங்கச் சொன்னார்களா?

(பிரிக்க.)

கன்றுக்குப் புல் பிடுங்கியது போலவும் தென்னைக்குக் களை எடுத்தது போலவும்.

கன்றுகளாய்க் கூடிக் களம் பறிக்கப் போனால் வைக்கோல் ஆகுமா?

(செத்தை ஆகுமா?)

கன்று கூடிக் களம் அடித்தால் வைக்கோலும் ஆகாது; கற்றையும் ஆகாது. 7605

(செத்தையும் ஆகாது, களை பறிக்க )


கன்று கெட்டால் காணலாம் தாய் அருகே.

கன்று செத்தது கமலம்; மாடு செத்தது நிமிளம்

கன்று செத்துக் கைமேலே கறக்கலாமா?

கன்றும் தாயும் காடு ஏறி மேய்ந்தால் கன்று ஒரு பக்கம், தாய் ஒரு பக்கம்.

கன்று தின்னப் போரும் பசங்கள் தின்னப் பந்தியும். 7610


கன்றும் பசுவும் காடு ஏறி மேய்ந்தால் கன்று கன்று வழியே; பசு பசு வழியே.

(கன்று வார்க்கும் பசு வயிற்றுக்கு.)

கன்றை இழந்த பசுவைப் போல. கன்றைக் கண்டு ஓடிவரும் பசுவைப் போல.

(நாடி வரும்.)

கன்றைத் தேடிப் பசு தவிக்கிறது போல.

கன்றைப் பார்த்துப் பசுவைக் கொள். 7615


கன்றைப் பிரிந்த பசுவைப் போல.

கன்றை விட்டுக் கட்டுத்தறியைப் பிடித்தது போல.

கன்றை விட்டுக் கல்யாணம் போவதா?

கன்றை விட்டு மாட்டை முட்ட விடுகிறது.

கன்னக் கோலை மறைத்துக் கொண்டு கைச் செபமணியைச் செபிக்கிறது போல. 7620


கன்னத்தில் அடித்தாலும் கதறி அழச் சீவன் இல்லை.

கன்னவாசல் கரிப் பானை போல்.

 கன்னா பின்னா என்று பிதற்றுகிறான்.

கன்னான் கொண்டது. கடை கொண்டது.

கன்னான் நடமாடக் குயவன் குடிபோவான். 7625


கன்னானுக்கும் குயவனுக்கும் ஜன்மப் பகை

கன்னானுக்கு முன்னே கழுதை பரதேசம் போனாற் போல.

கன்னி அறிவாளோ காம ரசம்?

கன்னி இருக்கும் பொழுது காளை மணை ஏறக் கூடாது.

(மணம் பேசலாமா? கன்னி இருக்க.)

கன்னிக் காற்றுக் கடலும் வற்றும். 7630


கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்.

கன்னிச் சேற்றைக் காய விடாதே; கண்ட மாட்டைக் கட்டி உழு.

(கன்னி-புரட்டாசி. புரட்டாசியில் வெயில் கொடூரம், மழையும் உண்டு. வயலில் சேறாக உழுதாலும் உடனுக்குடன் காய ஆரம்பிக்கும். அம் மாதங்கள் வெயில் மழை இரண்டும் தாங்கிக் கடினமான வேலை செய்ய எருமைக் கடாவே தகுதி. அதைக் கட்டித்தான் ஏர் ஒட்டுவார்கள்.)

கன்னி நிலவிலே கட்டி ஓட்டடா கடா மாட்டை.

கன்னிப் பூ மலரவில்லை.

கன்னியாகுமரிக் கடலறியார்; சுசீந்திரம் தேரறியார். 7635

(விருந்தினர்களைக் கவனிப்பதனால்.)


கன்னியும் துக்கமும் தனிவழிப் போகா.

கன்னி வளரக் காடு எரிய.

கன ஆசை, கன நஷ்டம்.

கன எலி வளை எடாது.

கன எலி விளையாடாது. 7640


கனக மாரி பொழிந்தது போல.

கனத்த உடைமைக்கு அனர்த்தம் இல்லை.

கனத்தால் இனம் ஆகும்; மனத்தால் ஜனம் ஆகும்.

கனத்திற்கு நற்குணம் சுமைதாங்கி.

கனத்தைக் கனம் அறியும்; கருவாட்டுப் பொடியை நாய் அறியும். 7645

________________

தமிழ்ப் பழமொழிகள் 89 கனத்தைக் கனம் காக்கும்; கருவாட்டுச் சட்டியைப் பூனை காக்கும். (பார்க்கும்.) கனத்தைக் கனம் காக்கும்; கருவாட்டை ஈ காக்கும். (கருவாட்டுப் பாளையைப் பூனை காக்கும்.) கனத்தைக் கனம் காக்கும்; கறிச் சட்டியை நாய் காக்கும். கனத்தைக் கனம் தேடும்; கருவாட்டுத் தலையை நாய் தேடும். யாழ்ப்பாண வழக்கு.) கனதாராளம்; மனசு குறுகல், கனபாடிகள் வீட்டுக் கட்டுத்தறியும் வேதம் சொல்லும், கன நேசம் கண்ணைக் கெடுக்கும். கனம் கனத்தைப் பார்க்கும்; கருவாட்டுப் பானையைப் பூனை பார்க்கும். கனம் செய்தால் இஷ்டம்; கன ஈனத்தால் நஷ்டம். கன மழை பெய்தாலும் கருங்கல் கரையுமா? கனமழை பெய்து காடு தளிர்த்தது போல. கனமூடன் கைப் பொருள் இழப்பான். கனவில் உண்ட சோறு பசி தீர்க்குமா? 7660 7655 (கண்ட சோறு.) கனவில் கண்ட கத்தரிக்காய் கறிக்கு ஆகுமா? கனவில் கண்ட பணம் கைச் செலவுக்கு உதவுமா? 7660 (கடன் தீர்க்க,) கனவில் கண்ட பணம் கடனைத் தீர்க்குமா? கனவில் கண்ட பொருள் கானில் கண்ட புல். (கானலில் கண்ட புனல்,) கனவில் கண்ட பொருள் கைக்கு எட்டுமா? கனவில் கண்டவனுக்குப் பெண் கொடுத்த கதை (பெண் போன.) கனவிலும் காக்கைக்கு மலம் தின்கிறதே நினைப்பு. 7665 கனவோ, நனவோ என்று ஐயுற்றான். கனா முந்துறாத வினை இல்லை, (பழமொழி நானூறு.} கனி இருக்கக் காய் கவர்வது போல். (தேவாரம்) கனிந்த பழம் தானே விழும்.

கனிந்த பழம் நீர் தின்றீர்; காயை உலுக்கி விட்டீர். 7670


கனிந்த பொங்கலில் கரும்புச் சாறும் கலந்ததாம்.

கனிந்த மரத்தில் கல்லடி கில்லடி.

கனியாத கனியை அடித்துப் பழமாக.

கனியிலே முள் ஏறினது போல.

கனியை விட்டுக் காயைத் தின்கிறதா? 7675


கஜ கரணம்.

கஜ கரணம் கோ கரணம் போட்டுப் பார்க்கிறான்.

கஜ கர்ப்பம்.

கஜப் புளுகு.

கஷ்டம் தெரியாமல் நெல்லுக் குத்தலாமா? 7680


கஷ்டத்திற்கு நஷ்டம் அதிகம்.

கஷ்டத்தின் அந்தியத்தில் சுகம்.

கஷ்டப் படலாம்; துக்கப்படல் ஆகாது.

கஷ்டப் படாவிட்டால் லாபம் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_2/3&oldid=1160258" இலிருந்து மீள்விக்கப்பட்டது