தமிழ்ப் பழமொழிகள் 3/17

விக்கிமூலம் இலிருந்து

பி



பிகுவான சம்பந்தி இழுத்தாராம் இரண்டு இலை. 16245


பிகுவோடு சம்பந்தி கழற்றினாளாம் துணியை.

பிச்சன் வாழைத் தோட்டத்தில் புகுந்ததுபோல.

(தோட்டத்தில்.)

பிச்சை இட்டால் மோட்சம்.

பிச்சை இட்டுக் கெட்டவர்களும் இல்லை; பிள்ளை பெற்றுக் கெட்டவர்களும் இல்லை.

(உண்டோ?)

பிச்சை எடுக்கப் போனாலும் முகராசி வேண்டும். 16250


பிச்சை எடுக்குமாம் பெருமாள்; அத்தைப் பிடுங்குமாம் அனுமார்.

(எடுக்குமாம் கருடன்.)

பிச்சை எடுக்கிறதிலும் பிகுவா?

(வலிவா)

பிச்சை எடுத்தும் சத்துருவின் குடி கெடு.

பிச்சைக்கார நாய்க்குப் பட்டுப் பல்லக்கு.

பிச்சைக்கார நாரிக்கு வைப்புக்காரன் பெருமை; கூலிக்குச் செய்பவனுக்குக் கூத்தியாள் பெருமை. 16255


பிச்சைக்காரன் சோற்றில் சனீசுவரன் புகுந்தது போல.

பிச்சைக்காரன் சோற்றை எச்சில் நாய் பங்கு கேட்டதாம்.

பிச்சைக்காரன் பிச்சைக்குப் போனால் எங்கள் வீட்டுக்காரர் அதுக்குத்தான் போகிறார் என்றாளாம்.

பிச்சைக்காரன் மேலே பிரம்மாஸ்திரம் தொடுக்கிறதா?

பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாற் போல் 16260


பிச்சைக்காரனுக்கு ஏது கொட்டு முழக்கு?

பிச்சைக்காரனுக்கு ஒரு மாடாம்; அதைப் பிடித்துக்கட்ட ஓர் ஆளாம்.

பிச்சைக்காரனுக்குப் பயப்பட்டு அடுப்பு மூட்டாமல் இருக்கிறதா?

(விடுகிறதா?)

பிச்சைக்காரனுக்குப் பிச்சைக்காரன் பொறாமை அதிகம்.

பிச்சைக்காரனை அடித்தானாம்; அடுப்பங்கரையிலே பேண்டானாம். 16265


பிச்சைக்காரனை அடித்தானாம்; சோளியைப் போட்டு உடைத்தானாம்.

(செம்பைப் போட்டு, சோளி-பை.)

பிச்சைக்காரனைக் கடனுக்கு வேலை வாங்கினானாம்.

பிச்சைக்காரனைப் பேய் பிடித்ததாம்; உச்சி உருமத்தில்.

(உருமத்தில் ஜாமத்தில்.)

பிச்சைக்கு அஞ்சிக் குடிபோனாளாம்; பேனுக்கு அஞ்சித் தலையைச் சிரைத்தாளாம்.

பிச்சைக் குட்டிக்குத் துக்கம் என்ன? பெருச்சாளிக்கு வாட்டம் என்ன? 16270


பிச்சைக் குடிக்கு அச்சம் இல்லை.

பிச்சைக்குடி பெரிய குடி.

(பிச்சைக்குப் பெரிய குடி)

பிச்சைக் குடியிலே சனீசுவரன் புகுந்தது போல.

பிச்சைக்குப் பிச்சையும் கெட்டது; பின்னையும் ஒருகாசு நாமமும் கெட்டது.

பிச்சைக்குப் பெரிய குடி, 16275


பிச்சைக்கு மூத்தது கச்சவடம்.

(கச்சவடம் வியாபாரம்.)

பிச்சைக்கு வந்த ஆண்டி இல்லை என்றால் போவாளா?

பிச்சைக்கு வந்த பிராமணா, பெருங்காயச் செம்பைக் கண்டாயோ?

(பெருங்காயச் சிமிழை. என்றாளாம்.)

பிச்சைக்கு வந்தவன் ஆண்டார் இல்லை என்றால் போகிறான்.

பிச்சைக்கு வந்தவனைப் பெண்டாள அழைத்தது போல. 16280


பிச்சைக்கு வந்தவன் எல்லாம் பெண்ணுக்கு மாப்பிள்ளையா?

பிச்சைக்கு வந்தவன் பெண்ணுக்கு மாப்பிள்ளை ஆனான்.

பிச்சைச் சோற்றிலும் எச்சில் சோறா?

பிச்சைச் சோற்றிலும் குழந்தைச் சோறா?

பிச்சைச் சோற்றிலும் குழைந்த சோறு உண்ணலாமா? 16285

(குழந்தை.)


பிச்சைச் சோற்றுக்கு இச்சகம் பேசுகிறான்.

பிச்சைச் சோற்றுக்கு எச்சில் இல்லை.


பிச்சைச் சோற்றுக்குப் பஞ்சம் உண்டா?

பிச்சைச் சோற்றுக்குப் பேச்சும் இல்லை; ஏச்சும் இல்லை.

பிச்சைப் பாத்திரத்தில் கல் இட்டது போல. 16290


பிச்சைப் பாத்திரத்தில் சனீசுவரன் புகுந்தாற் போல.

பிச்சை புகினும் கற்கை நன்றே.

பிச்சை போட்டது போதும்; நாயைக் கட்டு,

பிச்சை வேண்டாம் தாயே; நாயைப் பிடி.

பிசினாரி தன்னை வசனிப்பது வீண், 16295


பிஞ்சிலே பழுத்தவன்.

(பழுத்தாற் போல்.)

பிஞ்சிலே முற்றிய பீர்க்காங்காய்.

பிஞ்சு வற்றினால் புளி ஆகாது.

பிட்சாதிபதியோ, லட்சாதிபதியோ?

பிட்டு எங்கே விக்கும்? தொண்டையிலே விக்கும். 16300


பிட்டுக் கூடை முண்டத்தில் பொறுக்கி எடுத்த முண்டம்.

(புட்டுக் கூடை.)

பிட்டுத் தின்று விக்கினாற் போல.

பிடரியைப் பிடித்துத் தள்ளப் பெண்ணுடைய சிற்றப்பன் என்று நுழைந்தானாம்.

பிடாரம் பெரிதென்று புற்றிலே கை வைக்கலாமா?

பிடாரன் கைப் பாம்பு போல. 16305


பிடாரனுக்கு அஞ்சிய பாம்பு எலிக்கு உறவு ஆச்சுதாம்,

(எலியை உறவு கொள்ளும்.)

பிடாரியாரே, கடா வந்தது.

பிடாரியைப் பெண்டு கொண்டாற் போல்.

பிடாரியைப் பெண்டு வைத்துக் கொண்டவன் பேயன்.

(பேயனானது போல்.)

பிடாரி வரம் கொடுத்தாலும் ஓச்சன் வரம் கொடுப்பது அரிது. 16310

(ஓச்சன்-பூசாரி.)


பிடி அழகி புகுந்தால் பெண் அழகி ஆவாள்.

(அழரி இட்டால்.)

பிடிக்கிற முலை அல்ல; குடிக்கிற முலை அல்ல.

பிடிக்குப்பிடி நமச்சிவாயம்.

(நமஸ்காரம், துறைசைப்பக்கத்தில் வழங்குவது.)


பிடிக்குப் பிடி நமஸ்காரம்.

(செங்கற்பட்டு வைஷ்ணவ வழக்கு.)

பிடித்த காரியம் கடித்த வாய் துடைத்தாற் போல் வரும். 16315


பிடித்த கிளையும் மிதித்த கொம்பும் முறிந்து போயின.

பிடித்த கொம்பு ஒடிந்து மிதித்த கொம்பும் முறிந்தாற் போல ஆனேன்.

(ஒடிந்து போக.)

பிடித்த கொம்பும் விட்டேன்; மிதித்த கொம்பும் விட்டேன்,

பிடித்த கொம்பை விடாதே.

பிடித்ததன் கீழே அறுத்துக் கொண்டு போகிறது. 16320


பிடித்த துன்பத்தைக் கரைத்துக் குடிக்கலாம்,

பிடித்தவர்க்கு எல்லாம் பெண்டு.

(+ஆவாள்.)

பிடித்தால் கற்றை; விட்டால் கூளம்.

பிடித்தால் குரங்குப் பிடி பிடிக்க வேண்டும்; அடித்தால் பேயடி அடிக்க வேண்டும்.

பிடித்தால் சுமை; விட்டால் கூளம். 16325


பிடித்தால் பானை, விட்டால் ஓடு.

பிடித்தால் புளியங்கொம்பைப் பிடிக்க வேணும்.

(புளியாங்கிளையை.)

பிடித்தால் பெரிய கொம்பைப் பிடிக்க வேணும்.

பிடித்தாலும் பிடித்தாய், புளியங்கொம்பை.

பிடித்து ஒரு பிடியும், கிழித்து ஒரு கிழியும் கொடுத்தது உண்டா? 16330


பிடித்துத் தின்றதைக் கரைத்துக் குடிக்கலாம்.

பிடித்து வைத்தால் பிள்ளையார்; வழிந்து எறிந்தால் சாணி மொத்தை.

(சவட்டித் தேய்த்தால்.)

பிடி பிடியாய் நட்டால் பொதி பொதியாய் விளையுமா?

பிடி யானையைக் கொண்டு களிற்று யானையை வசப்படுத்துவது போல.

பிடியில் அழகு புகுந்தால் வபன் அழகு ஆவாள். 16335


பிடிவாதம் குடி நாசம்.

(குல நாசம்.)

பிடி விதை விளையும்; மடி விதை தீயும்.


பிண்டத்துக்குக் இருக்காது; தண்டத்துக்கு இருக்கும்,

(கிடைக்காது, தண்டத்துக்கு அகப்படும்.)

பிண்டத்துக்குக் கிடையாது; தண்டத்துக்கு அகப்படாது.

பிண்டம் பெருங்காயம்; அன்னம் விலவாதி லேகியம். 16340

(அன்னம் கஸ்தூரி.)


பிண்ணாக்குத் தராவிட்டால் செக்கிலே பேளுவேன்.

பிண்ணாக்குத் தின்பாரைச் சுண்ணாம்பு கேட்டால் வருமா?

பிணத்துக்கு அழுகிறாயா? குணத்துக்கு அழுகிறாயா?

பிணத்தை மூடி மணத்தைச் செய்.

பிணம் சுட்ட தடியும் கூடத்தான் போட்டுச் சுடுகிறது. 16345


பிணம் தின்கிற பூச்சி போல.

பிணம் தின்னிக் கழுகு.

பிணம் தூக்குவதில் தலைமாடு என்ன? கால்மாடு என்ன?

பிணம் பிடுங்கத் தின்றவன் வீட்டில் புத்தரிசி யாசகத்துக்குப் போனானாம்.

பிணம் போகிற இடத்துக்குத் துக்கமும் போகிறது. 16350


பிணை ஓட்டினாலும் நெல் கொரிக்கலாம்.

பிணைப்பட்ட நாயே குப்பையைச் சும.

(மலத்தை.)

பிணைப்பட்டாயோ? துணைப் பட்டாயோ?

பிணைப்பட்டால் குரு; துணைப்பட்டால் சா.

பிணைப்பட்டுக் கொள்ளாதே; பெரும்பாவத்தை உத்தரிப்பாய். 16355


பிணைப்பட்டுத் துணைப் போகாதே.

பிணையில் இட்ட மாட்டின் வாயைக் கட்ட முடியுமா?

பித்தம் கிறுகிறு என்கிறகு; மலம் கரைத்துக் குடி குடி என்கிறது.

பித்தம் பத்து விதம்.

பித்தருக்குத் தம் குணமே செம்மையான பெற்றி. 16360

(நூலினும் செவ்வை. தண்டலையார் சதகம்.)


பித்தளை சோதித்தாலும் பொன்குணம் வருமா?

(துலக்கினாலும்.)

பித்தளை நாற்றம் போகாது.

(அறியாது.)

பித்தளை மணி அற்ற வருக்குப் பொன்மணி என்று பெயர்.


பித்தனுக்குப் புத்தி சொன்னால் கேட்பானா?

பித்தியுடைய பாகற்காய் சட்டியோட தீயுது. 16365


பித்தும் பிடித்தாற் போலப் பிடித்ததைப் பிடிக்கிறது.

பிதாவைப் போல் இருப்பான் புத்திரன்.

பிந்திகா மார்ஜால நியாயம்.

பிய்த்து விட்டாலும் பேச்சு; பிடுங்கி விட்டாலும் போச்சு.

பிய்ந்த சீலையும் பேச்சுக் கற்ற வாயும் சும்மா இரா. 16370


பிய்ப்பானேன்? தைப்பானேன்?

(கடிப்பானேன்.)

பிரகசரண ஊழல்.

பிரகசரணம் பெப்பே.

பிரசங்க வைராக்கியம்.

பிரசவ வைராக்கியம், புராண வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம். 16375


பிரதோஷ வேளையில் பேய்கூடச் சாப்பிடாது.

பிரம்மசாரி எள்ளுக் கணக்குப் பார்த்ததுபோல.

பிரம்மசாரி ஓடம்கவிழ்த்ததுபோல.

பிரம்மச்சாரி குடித்தனம்.

பிரம்ம செளசம். 16380

(தாமதம்.)


பிரம்ம தேவன் நினைத்தால் ஆயுசுக்குப் பஞ்சமா?

பிரம்ம தேவன் போட்ட புள்ளிக்கு இரண்டாமா?

பிரம்ம வித்தையோ?

பிரம்மா நினைத்தால் ஆயுசுக்கு என்ன குறை?

(பஞ்சம்.)

பிராணன் போகும் போது மென்னியைப் பிடித்த மாதிரி. 16385


பிராணன் போனாலும் மானம் போகிறதா?

பிராமணப் பிள்ளை நண்டு பிடித்தது போல.

பிராமணனுக்கு இடம் கொடாதே.

(இடம்-இடப்பக்கம் விடாதே, பிரதட்சினையாக போகவேண்டும் என்பது கருத்து.)

பிராமணா உன் வாக்குப்பலித்தது

பிராமணா, பிராமணா, உன் கால் வீங்குகிறதே; எல்லாம் உன் தாலி அறுக்கத்தான். 16390


பிராமணா போஜனப்ரியா.

(பஹுஜனப்ரியா.)

பிராமணார்த்தக்காரனுக்கு நெய்விலை எதற்கு?

பிராமணார்த்தம் சாப்பிட்டுப் பங்கு மனையை விற்றானாம்.

பிரிந்த அன்றைத் தேடித் திரும்பும் பசுவைப்போல.

(வ௫ம்.)

பிரியம் இல்லாத கூடு, பிண்டக்கூடு 16395


பிரியம் இல்லாத சோறு, பிண்டச் சோறு.

பிரியம் இல்லாத பெண்டாட்டியிலும் பேய் நன்று.

பிரியைக் கட்டி இழுப்பேன்.

பிழுக்கை வாரியும் பால்கொள்வர்.

(சுந்தரர் தேவாரம்.)

பிழைக்கப் போன இடத்திலே பிழை மோசம் வந்தது போல. 16400


பிழைக்க மாட்டாத பொட்டை, என் பெண்ணை ஏண்டா தொட்டாய்?

பிழைக்கிற பிள்ளை ஆனால் உள்ளூரிலே பிழைக்காதா?

பிழைக்கிற பிள்ளை ஆனால் பிறந்தபோதே செத்துப் போலிருக்கும்.

பிழைக்கிற பிள்ளை குரைக் கழிச்சல் கழியுமா?

பிழைக்கிற பிள்ளை பிறக்கும் போதே தெரியாதா? 16405


பிழைக்கிற பிள்ளையைக் காலைக் கிளப்பிப் பார்த்தால் தெரியாதா?

பிழைத்த பிழைப்புக்குப் பெண்டாட்டி இரண்டு.

பிழைப்பு இல்லாத நாசுவன் பூனையைப் பிடித்துச் சிரைத்தானாம்.

பிழைப்பு இல்லாத நாவிதன் பெண்டாட்டி தலையைச் சிரைத்தானாம்.

பிழை பொறுத்தார் என்று போகிறவர் குட்டுகிறதா? 16410


பிள்ளை அருமை பெற்றவருக்குத் தெரியும்.

(தாயுமானவர் பாடல்.)

பிள்ளை அருமை மலடி அறிவாளா?

பிள்ளை ஆசைக்கு மலச்சீலையை மோந்து பார்த்தாற் போல.

பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கி,

பிள்ளை இருக்கப் பிடித்து விழுங்கினாள், கொள்ளா கொள்ளி வயிறே. 16415


பிள்ளை இல்லாச் சொத்துப் பாழ் போகிறதா?

(கொள்ளைக் போகிறதா?)


பிள்ளை இல்லாச் சோறு புழு.

பிள்ளை இல்லாத பாக்கியம் பெற்றிருந்து என்ன சிலாக்கியம்?

பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடினானாம்.

பிள்ளை இல்லாதவன் வீட்டுக் கூரை கூடப் பொருந்தாதே. 16420


பிள்ளை எடுத்துப் பிழைக்கிறதை விடப் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.

(பிழைப்பது மேல்.)

பிள்ளை என்றால் எல்லாருக்கும் பிள்ளை.

பிள்ளை என்றால் பேயும் இரங்கும்.

பிள்ளைக்கா பிழுக்கைக்கா இடம்கொடுக்கப் போகாது.

பிள்ளைக்காரன் பிள்ளைக்கு அழுகிறான்; பணிச்சவன் காசுக்கு அழுகிறான். 16425

(பணிச்சவன் பிணத்தைத் தூக்கி செல்பவன்.)


பிள்ளைக்காரி குசுவிட்டாய் பிள்ளைமேல் சாக்கு.

பிள்ளைக்கு அலைந்து மலநாயைக் கட்டிக் கொண்டது போல.

பிள்ளைக்கு இளக்காரம் கொடுத்தாலும் புழுக்கைக்கு இளக்காரம் கொடுக்கக்கூடாது.

பிள்ளைக்குப் பால் இல்லாத தாய்க்குப் பிள்ளைச் சுறாமீனை சமைத்துக் கொடு.

பிள்ளைக்குப் பிள்ளைதான் பெறமுடியாது; மலத்துக்கு மலம் விடிக்க முடியாதா? 16430


பிள்ளைக்கும் பிள்ளையாயிருந்து பெட்டைப் பிள்ளையை வேலை ஆக்கினான்.

பிள்ளைக்கும் புழுக்கைக்கும் இடம் கொடாதே.

பிள்ளைக்கு வாத்தியார்; பெண்ணுக்கு மாமியார்.

பிள்ளைக்கு விளையாட்டு; சுண்டெலிக்குப் பிராண சங்கடம்.

பிள்ளைகள் கல்யாணம், கொள்ளை கிடைக்காதா? 16435


பிள்ளை குலம் அழித்தால் பெற்றோர்கள் என்ன செய்வார்கள்?

பிள்ளைச் சீர் கொள்ளக் கிடைக்குமா?

(கிடையாது.)

பிள்ளைத் தாய்ச்சி நோயைச் சவலைப் பிள்ளை அறியுமா?

பிள்ளைதான் உயர்த்தி; மலம் கூடவா உயர்த்தி?

பிள்ளை திறத்தைப் பேள விட்டுப் பார். 16440


பிள்ளை நல்லதுதான்; பொழுது போனால் கண் தெரியாது.

பிள்ளை நோவுக்குக் கள்ளம் இல்லை.

(பிள்ளைப் பிணிக்கு.)

பிள்ளைப் பாசம் பெற்றோரை விடாது.

பிள்ளைப் பேறு பார்த்ததும் போதும்; என் அகமுடையானைக் கட்டி அணைத்ததும் போதும்.

பிள்ளைப் பைத்தியம் பெரும் பெத்தியக். 16445


பிள்ளைப் போதும் மழைப் போதும் யாருக்குத் தெரியும்?

பிள்ளை படிக்கப் போய் பயறு பசறு ஆச்சு,

பிள்ளை படைத்தவனுக்கும் மாடு படைத்தவனுக்கும் வெட்கம் இல்லை.

பிள்ளை பதினாறு பெறுவாள் என்று எழுதியிருந்தாலும் புருஷன் இல்லாமல் எப்படிப் பெறுவாள்?

பிள்ளை பாதி, புராணம் பாதி. 16450

(பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் லரலாறு பெரும்பகுதி.)


பிள்ளை பிறக்கும்; பூமி பிறக்காது.

பிள்ளைப் பிறக்கிறதற்கு முன்னே தின்று பார்; மருமகள் வருவதற்கு முன்னே பூட்டிப் பார்.

(மக்கள், மகள், கட்டிப்பார், போட்டுப் பார்)

பிள்ளை பிறந்த ஊ௫க்குப் புடைவை வேணுமா?

பிள்ளை புழுக்கை; பேர் முத்துமாணிக்கம்.

பிள்ளை பெற்றபின் அன்றோ பேரிட வேண்டும்? 16455


பிள்ளை பெற்றவளோ? நெல் எடுத்த குழியோ?

பிள்ளை பெற்றவளைப் பார்த்துப் பெருமூச்சு எறிந்து பயன் என்ன?

(ஆவது என்ன?)

பிள்ளை பெற்றவளைப் பார்த்து மலடி பெருமூச்சு விட்டு அழுதது போல.

பிள்ளை பெற்றாயோ, பிறப்பை எடுத்தாயோ?

பிள்ளை பெற்றுக் கெட்டவனும் இல்லை; பிச்சை எடுத்து வாழ்ந்தவனும் இல்லை. 16460

(பெற்றுத் தாழ்ந்தவனும்.)


பிள்ளை பெற்றுப் பிணக்குப் பார்; கல்யாணம் முடித்துக் கணக்குப் பார்.

பிள்ளை பெற்றுப் பேர் இட வேண்டும்.

பிள்ளை பெறப் பெற ஆசை; பணம் சேரச் சேர ஆசை.


பிள்ளை மலபாதை செய்ததென்று துடையை அறுக்கிறதா?

(மடியில் பேண்டுவிட்டால்.)

பிள்ளையாண்டான் கெட்டிக்காரன்; பொழுது போனால் கண் தெரியாது. 16465


பிள்ளையாய்ப் பிறந்து சோடையாய்ப் போனேனே!

பிள்ளையார் அப்பா, பெரியப்பா, பிழைக்கும் வழியைச் சொல்லப்பா.

பிள்ளையார் குட்டுக் குட்டி ஆயிற்று.

பிள்ளையார் கோயில் பெருச்சாளி போல.

பிள்ளையார் கோயிலில் திருடன் இருப்பான். 16470

(கள்ளன்.)


பிள்ளையார் கோயிலைப் பெருக்கலாம்; மெழுகலாம்; அமேத்தியம் விடித்தால் கண் போய் விடும்.

(பேள மட்டும் கூடாது.)

பிள்ளையார் சதுர்த்திக்கும் மீராசாயபுவுக்கும் என்ன சம்பத்தம்?

பிள்ளையார் சுழி போட்டாயிற்று.

பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்தது.

பிள்ளையார் பிறகே திருடன் இருக்கிறான்; சொன்னால் கோளாம். 16475


பிவளையார் வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்க விடமாட்டான்.

பிள்ளையார் வேஷம்.

(-கர்ப்பிணி.)

பிள்ளையாருக்குக் கல்யாணம் நடக்கிறபோது.

பிள்ளையாருக்குப் பெண் கொள்வது போல.

(பெண் பார்த்தது.)

பிள்ளையாரைக் கண்டால் தேங்காயைக் காணோம்; தேங்காயைக் கண்டால் பிள்ளையாரைக் காணோம். 16480


பிள்ளையாரைச் சாக்கிட்டுப் பூதம் விழுங்கிற்றாம்.

பிள்ளையாரைச் சாக்கு வைத்துப் பூசாரி போட்டாற்போல.

பிள்ளையாரைப் பிடித்த சனி அரசமரத்தைப் பிடித்தது போல.

பிள்ளையின் அழகைப் பேளவிட்டுப் பார்த்தால் உள்ள அழகும் ஓட ஓடக் கழிகிறது.

பிள்ளையின் திறமையைப் பேளவிட்டுப் பார்த்தானாம். 16485


பிள்ளையின் நிறமையை வேலை விட்டுப் பார்.

பிள்ளையின் பாலைப் பீச்சிக் குடிக்கிறதா?

பிள்ளையின் மடியிலே பெற்றவன் உயிர் விட்டால் பெருங்கதி உண்டு.

பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை.

பிள்ளையும் மலமும் பிடித்ததை விடா. 16490


பிள்ளையும் பிழுக்கையும் சரி.

பிள்ளையை அடித்து வளர்க்க வேணும்? முருங்கையை ஒடித்து வளர்க்க வேணும்.

பிள்ளையைக் காட்டிப் பூதம் விழுங்குகிறது.

பிள்ளையைப் பெற்றபின்தான் பெயர் இடவேண்டும்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுகிறதா? 16495


பிள்ளையை விட்டுத் திருடுவது போல.

பிள்ளை வரம் கேட்கப் போய்ப் புருஷனையே பறி கொடுத்தது போல

பிள்ளை வருத்தம் பெற்றவளுக்குத் தெரியும்; மற்றவளுக்குத் தெரியுமா?

(தாயுமானவர்.)

பிள்ளை வீட்டுக்காரர் சம்மதித்தால் பாதி விவாகம் முடிந்தது போல,

பிறக்காத பிள்ளைக்கு நடக்காத தொட்டில். 16500

(கிடக்காக)


பிறக்கிற பிள்ளையை நம்பி இருக்கிற பிள்ளையைக் கொன்றது போல.

பிறக்கிறபொழுதே முடமானால் இட்டுப் படைத்தால் தீருமா?

(தெய்வத்துக்குப் படைத்தால்; பேய்க்குப் படைத்தால்.)

பிறக்கும்போது தம்பி; பெருத்தால் தாயாதி.

பிறக்கும்போது யார் என்ன கொண்டு வந்தார்?

(தண்டலை யார் சதகம்.)

பிறத்தியார் புடைவையில் தூரம் ஆவது என்றால் கொண்டாட்டம். 16505


பிறத்தியார் வளர்த்த பிள்ளை பேய்ப் பிள்ளை.

பிறத்தியாருக்கு வாத்தியார்.

பிறத்தியானுக்கு வெட்டுகிற குழி தனக்கு.

பிறந்த அன்றே இறக்க வேண்டும்.

பிறந்து இடத்து வண்மையை உடன்பிறந்தானிடத்தில் சொல்கிறதா? 16510


பிறந்த ஊருக்குச் சேலை வேண்டாம்; பெண்டு இருந்த ஊருக்குத் தாலி வேண்டாம்.

பிறந்த ஊருக்குப் புடைவை வேணுமா?

பிறந்தகத்துக்குச் செய்த காரியமும் பிணத்துக்குச் செய்த அலங்காரமும் வீண்.

பிறந்தகத்துப் பெருமையை அக்காளிடம் சொல்வது போல.

பிறந்தகத்துப் பெருமையை உடன் பிறந்தானோடு சொன்னாளாம். 16515

(பிறந்தகத்து வரிசையை.)


பிறந்தகத்துத் துக்கம் கொல்லையிலே.

பிறந்தது எல்லாம் பிள்ளையா?

பிறந்த நாளும் திருவாதிரையும்.

(அடிபடுதல்.)

பிறந்த நாளும் புதன் கிழமையும்.

பிறந்த பிள்ளை பிடி சோற்றுக்கு அழுகிறது; பிறக்கப் போகிற பிள்ளைக்குத் தண்டை சதங்கை தேடுகிறார்கள். 16520


பிறந்த பிறப்போ பெருங் கணக்கு.

பிறந்தவன் இறப்பதே நிஜம்.

(உறுதி.)

பிறந்த வீட்டுச் செல்லி.

பிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தானிடம் சொல்லிக் கொண்டாளாம்.

பிறந்தன இறக்கும்; தோன்றின மறையும். 16525


பிறந்தால் தம்பி; வளர்ந்தால் பங்காளி.

பிறந்தால் வெள்ளைக்காரனாகப் பிறக்க வேணும்; இல்லா விட்டால் அவன் வீட்டு நாயாய்ப் பிறக்க வேணும்.

பிறந்தும் பிறந்தும் பேதைப் பிறப்பு.

பிறப்பும் சிறப்பும் ஒருவர் பங்கு அல்ல. 16530


பிறப்பு உரிமை வேறு, சிறப்பு உரிமை வேறு.

பிறர் குற்றம் அறியப் பிடரியிலே கண்.

பிறர் பொருளை இச்சிப்பான் தன் பொருளை இழப்பான்.

பிறர் மனைத் துரும்பு கொள்ளான், பிராமணன் தண்டு கொண்டான்,

பிறவாத குழந்தைக்கு நடவாத தொட்டில் இட்டாளாம். 16535

(பிறவாப் பிள்ளைக்கு.)


பிறவிக்குணத்துக்கு மட்டை வைத்துக் கட்டினாலும் தீராது.

(மாறாது.)

பிறவிக்குணத்தைச் செருப்பால் அடித்தாலும் போகாது.

பிறவிக்குணம் பொங்கல் இட்டாலும் போகாது.

பிறவிக்குருடன் காது நன்றாகக் கேட்கும்.

பிறவிக் குருடனுக்குக் கண் கிடைத்தது போல. 16540


பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண் கொடுத்தாற் போல.

பிறவிக் குருடனுக்குப் பண நோட்டம் தெரியுமா?

பிறவிச் செவிடனுக்குப் பேசத்திறம் உண்டா?

பிறவிச் செல்வம் பின்னுக்குக் கேடு.

பிறை வடக்கே சாய்ந்தால் வரப்பெல்லாம் நெல்; தெற்கே சாய்ந்தால் தெற்கெல்லாம் பாழ். 16545


பின் இருக்கிறது புரட்டாசிக் காய்ச்சல்.

பின் இருந்து உண்டு குடைகிறான்.

பின் இன்னா பேதையார் நட்பு.

(பழமொழி நானூறு.)

பின் குடுமி புறங்கால் தட்ட ஓடுகிறான்.

பின்புத்திக்காரன் பிராமணன். 16550


பின்னல் இல்லாத தலை இல்லை; சன்னல் இல்லாத வீடு இல்லை.

பின்னால் இருந்து கூண்டு முடைகிறான்.

பின்னால் வரும் பலாக்காயினும் முன்னால் வரும் களாக்காய் நலம்

பின்னே ஆனால் எறியும்; முன்னால் ஆனால் முட்டும்.

(பின்னே ஆனால் உதைக்கும்.)

பின்னே என்பதும் நாளைக்கு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம். 16555


பின்னை என்பதும் பேசாதிருப்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.

பிக்ஷாதிபதி, லக்ஷாதிபதி.

(பக்ஷாதிபதியோ, லக்ஷாதிபதியோ?)
"https://ta.wikisource.org/w/index.php?title=தமிழ்ப்_பழமொழிகள்_3/17&oldid=1397563" இலிருந்து மீள்விக்கப்பட்டது