திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை

விக்கிமூலம் இலிருந்து

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை[தொகு]

ஆசிரியர்: தெரியவில்லை[தொகு]

நூல்[தொகு]

காப்பு


திருக்கோவை யாதி வராகர்தங் கோவை சிறந்தவைந்து

தருக்கோவை வாழ்வித்த சக்கரக் கோவைத் தமிழ்மணக்கு

மருக்கோவை யாங்கரந் தைக்கோவை சாற்றும் வருக்கமீந்தீ

ருருக்கோவைப் புள்ளர சைப்பணிந்த தேதுணிந் தோதுவனே. ()

உயிர் வருக்கம்-12 பாடல்கள்[தொகு]

கைக்கிளை

காட்சி

பாடல்:01 (அரவிந்த)[தொகு]

ரவிந்த முங்குமி ழுங்கருங் காவியு மாம்பலுந்தேன்

விரவுந் தளவமுங் கோங்கமுந் தாங்கிவெண் சங்கமுஞ்சக்

கரமுந் தரித்தவ ராதி வராகர் கரந்தைவெற்பில்

வரவந் தாவாவிம் மலர்க்காவிற் கற்பக வல்லியொன்றே. (01)

பதவுரை
கருத்துரை
விசேடவுரை


ஐயம்

பாடல்: 02 (ஆலோன்)[தொகு]

லோன் விழுங்குமும் மண்டல மோகும்ப னாலயமோ ()
வேலோன் பொருத வியலிட மோகன்று மேய்த்தசெங்கண் ()
மாலோன் கரந்தையி லாதி வராகர் மலரணையின் ()
பாலோ விவர்பொற் பதத்தூளி தாங்கிப் பயனுறவே. (02)


துணிவு

பாடல்: 03 (இருங்காவி)[தொகு]

ருங்கா வியங்கண் கயல்போ லிமைக்கு மெழுத்துரைக்கும் ()
பெருங்கா மவல்லி பிணையலும் வாடும் பெயர்த்துநடை ()
தருங்கான் மலருந் துழாய்மால் வராகர்சந் தாடவிக்குள் ()
வருங்கா மவல்லியிம் மாதரை யாளு மலர்விழியே. (03)

பாடல்: 04 (ஈட்டிய)[தொகு]

(குறிப்பறிதல்)

ட்டிய நோயுமந் நோய்தீர் மருந்து மிருந்தவத்தாற் ()

காட்டிய கற்பனை காரிகை யார்கடைக் கண்ணிலுண்டாஞ் ()

சூட்டிய பச்சைத் துளவோன் வராகன் சுரும்புவரை ()

கோட்டிய கும்ப முலைப்பாவை பார்வைக் குறிப்புநன்றே. (04)

பாடல்: 05 (உரைக்குங்)[தொகு]

(இடம்பெற்றுத் தழாஅல்)

உரைக்குங் கிளிகள் கருங்குயில் கூவுங்கள் ளுண்டுசுரும் ()

பிரைக்கும் பனிமலர் வாசங்கள் வீசுஞ்சந் தீர்த்தரைத்துக் ()

கரைக்கும் பொருநைத் துறையார் வராகர் கரந்தையன்னார் ()

வரைக்குங் குமமுலை விம்முநெஞ் சேயிடம் வாய்த்ததின்றே. (05)


(முன்னைலையாக்கல்)

பாடல் 06 (ஊர்பெற்ற)[தொகு]

ஊர்பெற்ற பாவைய ராயம்பெற் றீர்பந் தொடுகழங்குண் ()

டேர்பெற்ற வாவியும் பூஞ்சோ லையுமுண் டெழுதரிய ()

கார்பெற்ற மேனித் திருமால் வராகர் கரந்தையன்னீர் ()

நீர்பெற்ற தியாவர்பெற் றார்விளை யாட்டின்றி நிற்பதென்னே. (06)


(வறிது நகை தோற்றல்)

பாடல் 07 (எல்வந்)[தொகு]

எல்வந் தரும்பு மணிமேக வண்ணத்தி லிந்திரவான் ()

வில்வந் தரும்ப வருவார் வராகர்பொன் மேருவெற்பில் ()

வல்வந் தரும்பு மணிமுலை யாள்வத னாம்புயத்தி ()

லல்வந் தரும்பு நிலாப்போ னகைவந் தரும்பியதே. (07)


(முறுவல் குறிப்புணர்தல்)

பாடல் 08 (ஏர்முத்)[தொகு]

ஏர்முத் தமிழ்தங்கு மெங்க ணுமேபண் டிடைச்சியர்வாய்ச் ()

சீர்முத் தமுதஞ்செ யாதி வராகர் சிலம்பிலிரு ()

பேர்முத்த மும்பெறச் செய்வாய் பவளம் பிறங்குநகை ()

கூர்முத்த வாணகை கோடிபொன் னேவிலை கூறிடினே. (08)



(இரந்து பின்னிற்றல்)

பாடல் 09 (ஐந்தாரு)[தொகு]

ஐந்தாரு வேந்துனு மம்புயத் தோனு மமரர்களும் ()

பைந்தார் கொடுபணி யாதி வராகர் பழனவயற் ()

செந்தா மரையன மேயும தேவல் செயவறியேன் ()

வந்தாள வென்று விலையோலை வாங்கு மனந்துணிந்தே. (09)


(மெய்தொட்டுப் பயிறல்)

பாடல் 10 (ஒண்போத)[தொகு]

ஒண்போ தலருந்தி யாதி வராக ருயர்வரையின் ()

பண்போ திசைகள் பயில்வண்டு காளிடை பார்த்துமின்னார் ()

கண்போல் விளங்கியுங் காவியந் தேறியுங் கண்மலருந் ()

தண்போது சென்று பரிசாரஞ் செய்தல் தகாதுமக்கே. (60)


(பொய் பாராட்டல்)

பாடல் 11 (ஓலக்கடற்)[தொகு]

ஓலக் கடற்பள்ளி கொண்டோன் வராகனெட் டோடையொக்கு ()

நீலக் கருங்குழ னேரிழை யீருங்க ணீள்விழிகள் ()

போலக் கவின்பெற வேண்டியன் றோவண்டு போற்கயலுஞ் ()

சீலப் புவனத்தி லெப்போது மாதவஞ் செய்குவதே. (09)


(உள்ளக்கருத்தை வள்ளல் அறிதல்)

பாடல் 12 (ஔவியந்)[தொகு]

ஔவியந் தீர்ப்பவ ராதி வராக ரணிவரையார் ()

நௌவியங் கண்ணி லமுதளித் தார்வெண் ணகையளித்தார் ()

திவ்விய கொங்கை திறந்துமுத் தாரந் திருத்தினரா ()

றுவ்வியன் காவி லிசையுங்கொல் லோதுணிந் தோர்மனமே. (60)


பார்க்க[தொகு]

திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-கவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-சவ்வருக்கம்
திருக்கரந்தை ஆதிவராகப் பெருமாள் வருக்கக்கோவை-ஞவ்வருக்கம்