திருக்கோவையார்/ஒன்பதாம் அதிகாரம் - நடுங்க நாட்டம்

விக்கிமூலம் இலிருந்து

ஒன்பதாம் அதிகாரம்
9. நடுங்க நாட்டம்

1.
ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து
மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித்
தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து)
ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே. .. 72


கொளு
நுடங்கிடைப்பாங்கி நடுங்க நாடியது.