நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்/ஆதரவற்றவருக்கு ஆறுதல் அளித்தல்

விக்கிமூலம் இலிருந்து

120. ஆதரவற்றவருக்கு ஆறுதல் அளித்தல்

ஹிஜ்ரீ ஐந்தாவது வருடத்தில் பெருமானார் அவர்கள், ஸைனப் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள்.

இந்தத் திருமணத்தை ஏன் செய்து கொண்டார்கள் என்றால், ஸைத் என்பவர் முன்னர் அடிமையாயிருந்து பின்னர், பெருமானார் அவர்களால் விடுதலை பெற்று, அவர்களுடைய உண்மைத் தொண்டராகவே வாழ்ந்தார். அவருக்குப் பெருமானார், தங்களுடைய மாமி மகளான ஸைனபைக் குறைஷிகளின் ஆட்சேபணைகளுக்கு மாறாக, இஸ்லாமிய சகோதரத்துவத்தை அனுசரித்துத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

அந்தப் பெண்மணியும் பெருமானார் அவர்களின் கட்டளைக்கு இணங்கி, ஸைதை மணம் புரிந்து கொண்டார்.

ஆனால் ஸைத்-ஸைனப் இருவரின் இல்வாழ்க்கையானது ஒற்றுமை இல்லாமல் போகவே, இருவரும் விவாகரத்துச் செய்து கொண்டனர்.

ஆதரவற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்மணி குறைஷிகளின் பழிச் சொற்களால், மனச் சோர்வுற்றிருந்தார். மேலும், பெருமானார் அவர்களின் நெருங்கிய உறவாகவும் இருந்தார். அவருக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டே, பெருமானார் அவர்கள், அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள்.