நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீமான் அனந்த நாராயண ஐயர்

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீமான் அனந்த நாராயண ஐயர்

இவர் பிராம்மணர். இவரும் இவரது சகோதரர்களும் இன்னும் சில பிராம்மணர்களும் சேர்ந்து ஆரியகான சபா என்னும் ஒரு சபையை ஏற்படுத்தினார்கள். முக்கியமாக புராண கதைகளையே நாடகமாக ஆடினார்கள். அனந்த நாராயண ஐயர் கொஞ்சம் குள்ளமானவர். கொஞ்சம் ஸ்தூலமாகவும் இருப்பார். ஆயினும் ஸ்திரீ வேடங்களில் நடிப்பதில் கீர்த்தி பெற்றார். நான் பன்முறை இவர்கள் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். இவரிடத்தில் ஒரு சிறிய குறை என்னவென்றால் பேசும்போது சில சந்தர்ப்பங்களில் உபன்யாசம் செய்வதுபோல் தாராளமாக பேசிவிடுவார். உதாரணமாக வள்ளி நாடகத்தில் வள்ளியாக நடித்தபோது மலைவளம், நீர் வளம், நிலவளம் இவைகளைப் பற்றி உபன்யாசம் செய்வதுபோல் 5 நிமிஷம் பேசினார். பிறகு ஒரு முறை அவரை நான் சந்தித்தபோது இது அவ்வளவு உசிதமல்ல என்று எடுத்துக்காட்ட அதை ஒப்புக்கொண்டு அவ் வழக்கத்தை விட்டு விட்டார்.