நான் கண்ட நாடகக் கலைஞர்கள்/ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார்

விக்கிமூலம் இலிருந்து

ஸ்ரீமான் வி. வி. ஸ்ரீனிவாச ஐயங்கார்

'இவராவது நாடகத்தில் நடித்ததாவது' என்று இதை வாசிக்கும் எனது நூறு நண்பர்களில் 99 பேர் ஆச்சரியப்படுவார்கள். ஆயினும் இவர் சுகுணவிலாச சபையில் இரண்டொருமுறை நடித்திருக்கிறார். அவர் முதன்முதல் நடித்தது எனது சமூக நாடகமாகிய 'பொன் விலங்கு’ என்பதில் தான் நான் ராமச்சந்திரன் வேடம் பூண்டபோது எனது மைத்துனனுகிய வேடம் தரிக்கும்படி செய்தேன். அதில் இவரை தேர்ச்சி பெறச் செய்வது எனக்கு மிக்க கடினமான காரியமாயிருந்தது. சிறந்த கல்விமானுகிய இவருக்கு ஞாபகசக்தி மாத்திரம் கொஞ்சம் குறைவு. அதற்காக பன்முறை இவரை ஒத்திகையில் கஷ்டத்துக்குள்ளாக்கினேன். நாடக தினத்தில் சுமாராய்தான் நடித்தார். ஆயினும் இவருக்காக வலதுபுறம் சைட் படுதா அருகில் ஒரு புராம்டரும் இடதுபுற சைட் படுதா அருகில் மற்றொரு புராம்டரும் ஏற்பாடு செய்தேன். நடிகருக்கு இருக்கவேண்டிய முக்கிய குணமாகிய தன்னை மறந்து தான் மேற்கொண்ட பாத்திரமாக நினைத்திருக்க வேண்டிய குணம் இவரிடம் மிகவும் குறைவு. ஆயினும் ஒரு விதத்தில் சபை நடத்திய நாடகங்களுக்கு நடிப்புக் கலையிலும் சங்கீதக் கலையிலும் தன் ஆயுள் உள்ளவரை மிகவும் உதவி புரிந்துவந்தார். என் வழக்கம் ஒரு நாடகத்தின் கடைசி ஒத்திகைகளில் இவரை அழைத்து உட்காரச் செய்து நடிகர் களுக்கு அவர்கள் குற்றங்களை எடுத்துக்காட்டி உற்சாகப்படுத் தும்படி வேண்டுவது. இப்படி செய்யும்போது இவருடைய criticism எனக்கு மிகவும் உபயோகப்பட்டது. இவர் criticism கொடுப்பதில் நிபுணர். இவருடைய வழக்கம் என்னவென்றால் எந்த நடிகரும் எவ்வளவு நன்றாய் நடித்தாலும் 'இதைவிட நீ மிகவும் நன்றாய் நடிக்கக்கூடும்; முயற்சி செய்து நடி’ என்று உற்சாகப் படுத்துவதாகும் என் பாகத்தில் நான் எவ்வளவு நன்றாய் நடித்தாலும் "ஜஷ்டை! சம்பந்தம் நீ இதைவிட நன்றாய் நடிக்கக்கூடும். சோம்பேறியாய் இராதே. இன்னும் முயன்று பார்” என்று சொல்வார்! அவருடைய மனதுகுக் சரியாய் திருப்திகரம் ஆகும்வரையில் நான் மாறி மாறி நடித்துக் காட்டவேண்டும். இதற்கு ஒரு உதாரணம் கொடுக்கிறேன். ஷேக்ஸ்பியர் எழுதிய உலகெங்கும் புகழ்பெற்ற ஹாம்லெட் (Hamlet) என்னும் நாடகத்தின் மொழி பெயர்ப்பாகிய அமலாதித்யன் என்னும் என் தமிழ் நாடகத்தில் ஒரு காட்சியில் "வெளிச்சம், வெளிச்சம்" என்னும் ஒரு வரியை ஒத்திகையில் நடத்தியபோது இவரையும் இவரைப்போல் நல்ல critic ஆகிய எனது நண்பர் வாமன்பை (Vaman Bai) அவர்களையும் ஹாலில் உட்காரச்செய்து பார்க்கசெய்தபோது அதில் மேடையில் இருக்கும் ஒவ்வொருவருடை முக பாவமும் இப்படி இப்படி இருக்க வேண்டுமென்று மேற்சொன்ன இருவர்களையும் கவனிக்கச் செய்தேன். இதை 11 முறை நடித்துக் காட்டிய பிறகுதான் ஸ்ரீனிவாச ஐயங்காரும் வாமன்பையும் ஒப்புக்கொண்டார்கள்.

நாடகத்தில் இருக்கவேண்டிய சங்கீதத்தைப் பற்றியும் இவரது உதவியை நாடியிருக்கிறேன், ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு சங்கீத ஞானம் மிகவும் குறைவு. பைரவி ராகத்திற்கும் சஹானா ராகத்திற்கும் வித்தியாசத்தைக்கூற இவர் அறியார். அப்படி இருந்தும் நாடகத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சரியான பாவத்தில் பாடல்கள் அமைந்திருக்கிறதா என்பதில் இவர் புத்திகூர்மையுள்ளவர். இதற்கு ஒரு உதாரணமாக எனது புத்தா அவதாரம் என்னும் நாடகத்தில் சங்கீதத்தைப் பற்றி இவர் உதவி செய்ததை கூறுவேன். அந்த நாடகத்திலேயே நாலைந்து பாட்டுகள் ஏற்படுத்தியிருந்தேன். இவருடைய criticism என்பதை நான் நாடியபோது ஒவ்வொரு பாட்டையும் பலவித ராகங்களில் என்னைப் பாடும்படி தொந்தரவு செய்து, அவர் மனதிற்கு திருப்தியாகிரவரையில் என்னை விடமாட்டார்.

இவர் ஆங்கிலத்தில் பதினொன்று ஓரங்க நாடகங்களை எங்கள் தசரா வருடாந்திர கொண்டாட்டங்களுக்கு எழுதிக் கொடுத்தார். அவைகளில் பத்தை நான் தமிழில் மொழி பெயர்த்து அச்சிட்டிருக்கிறேன். அன்றியும் தமிழ் நாடகமாக 'கீதோதயம்' என்பதை எழுதி அச்சிட்டிருக்கிறார், அது ஒருமுறைதான் எங்கள் சபையில் நடத்தப்பட்டது. அதன் நுட்பங்கள் சம்ஸ்கிருத பாஷையை நன்றாய் அறிந்தவர் களுக்குத்தான் தெரியும். ஆகவே அது பிரபலமாக போகாத தது ஆச்சரியமன்று. மேற்சொன்ன விதங்களில் ஐயங்கார் அவர்கள் சுகுணவிலாச சபைக்கு புரிந்த உதவிகளை விட மிகவும் பெரிய உதவிகளை செய்தது. அவர் எங்கள சபைக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் சபை காரியங்களை எனது தமையனார் ப. ஆறுமுக முதலியாருடன் காரியதரிசியாயிருந்து உழைத்ததேயாம்.அக்காலத்தை சடையின் பொற்காலம் எனக்கூறி இவர் விர்த்தாந்தத்தை முடிக்கிறேன்.