பக்கம்:அகநானூறு, வேங்கடசாமி நாட்டார்.djvu/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91]

களிற்றியானை நிரை

௧௯௩/193


91. பாலை

[பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.]


விளங்குபகல் உதவிய பல்கதிர் ஞாயிறு
வளங்கெழு மாமலை பயங்கெடத் தெறுதலின்
அருவி யான்ற பெருவரை மருங்கில்
சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயங் காணாது
ரு) பாசி தின்ற பைங்கண் யானை -

ஓய்பசிப் பிடியொ டொருதிறன் ஒடுங்க
வேய்கண் ணுடைந்த வெயிலவிர் நனந்தலை
அரும்பொருள் வேட்கையின் அகன்றன ராயினும்
பெரும்பே ரன்பினர் தோழி இருங்கேழ்
க0) இரலை சேக்கும் பரலுயர் பதுக்கைக்

கடுங்கண் மழவர் களவுழ வெழுந்த
நெடுங்கால் ஆசினி ஒடுங்காட் டும்பர்
விசிபிணி முழவின் குட்டுவன் காப்பப்
பசியென வறியாப் பணைபயில் இருக்கைத்
கரு) தடமருப் பெருமை தாமரை முனையின்

முடமுதிர் பலவின் கொழுநிழல் வதியும்
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கிநின் மாணலம் மறந்தே.


--மாமூலனார்.


(சொ - ள்.) க-௯. தோழி-, விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு - உலகம் விளங்கற்குக் காரணமாகிய பகலினைத் தந்த பல கதிர்களையுடைய ஞாயிறு, வளம் கெழு மாமலை பயம் கெடத் தெறுதலின் - வளம் வாய்ந்த பெரிய மலையின் பயன் கெட்டொழியக் காய்தலின், அருவி ஆன்ற பெருவரை மருங்கின் - அருவி இல்லையான பெரிய பக்க மலையினிடத்து, சூர்ச்சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது - தெய்வத்தினையுடைய சுனையைத் துழாவி நீராகிய பயனைக் காணாது, பாசி தின்ற பைங்கண் யானை - பாசியினைத் தின்ற பசிய கண்ணினை யுடைய ஆண் யானை, ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க - அயர்வினைத் தரும் பசியினை யுடைய பெண் யானையினுடன் ஒரு பக்கத்தே ஒடுங்கிக் கிடக்க, வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை - மூங்கில்கள் கணுக்கள் பிளந்த வெயில் விளங்கும் அகன்ற பாலை நிலத்தே, அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் - அரிய பொருள் விருப்பால் நம் தலைவர் நம்மைப் பிரிந்து சென்றாராயினும், பெரும் பேரன்பினர் . மிகப் பெரிய அன்பின ராகலின்,

௯-கஅ. இரு கேழ் இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை -கரிய நிறமுடைய ஆண்மான்கள் தங்கும் பரலையுடைய உயர்ந்த கற்குவியலில், கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த - வன்கண்மையினை யுடைய மழவர்கள் களவாகிய உழவிற்கு எழும் இடமாகிய, நெடுங்

13