பக்கம்:அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

அகில உலக ஓடுகளப்போட்டி விதிமுறைகள்



அதனை அதிகாரிகள் அனுமதிக்கக்கூடாது. எந்தக் காரியம் செய்தாலும், அது இரும்புக் குண்டை தூக்கி எறிய உதவிகரமாக இருக்கும் என்றால், அதனை அனுமதிக்கவே கூடாது. கையில் காயம் ஏதேனும் இருந்தால், அதனை வெளிப்புறத்திற்குக் காட்டாமல் இருப்பதற்காக கட்டுப் போட்டிருந்தால், அதை அனுமதிக்கலாம். (ஆ) கையுறைகள் அணிந்து கொள்வது அனுமதிக்கப் படமாட்டாது. (இ) இரும்புக் குண்டைப் பற்றிப் பிடிக்கும் பொழுது, நன்றாகப் பிடி கிடைப்பதற்காக (Grip) பொருத்தமான பொருள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. (ஈ) முதுகெலும்புத் தண்டினைக் காயம் அல்லது ஏதேனும் அபாயம் நேராமல் காட்பாற்றிக் கொள்ள, தோலால் ஆன பெல்ட் அல்லது அதற்கிணையான வேறு ஏதாவது ஒன்றை அணிந்து கொண்டால், அதற்கு அனுமதி உண்டு. 14. ஒரு போட்டியாளர், இரும்புக் குண்டை இருந்து எறிகின்ற எறிவட்டத்திற்குள்ளே எந்தவிதமான பொருளையும் தெளிப்பதோ, அல்லது தனது காலணிகளுக்கு இடுவதோ கூடாது. அந்த செயல் அனுமதிக்கப்பட மாட்டாது. 15. ஒருவர் எறியை முடித்து விட்ட பிறகு, இரும்புக் குண்டைக் கொண்டு வந்து தான், மற்றவரிடம் கொடுக்க வேண்டும். அங்கிருந்து எறி வட்டத்தை நோக்கி யாரும் (அதிகாரிகள் உதவியாளர்கள்) திரும்ப எறியக்கூடாது.