பக்கம்:அஞ்சலி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104 லா. ச. ராமாமிருதம்

“ஆமாம்—” பெருமூச்செறிந்தாள்—“தினம் தினம் போவேன். அவங்க வீட்டுப்புள்ளையெ எடுத்துக் கொஞ்சுவேன். அப்பா, என்ன செவப்பு தெரியுமா? தொட்டா கையோடே வளிஞ்சு வந்துாடற மாதிரி. அந்த நாளெல்லாம் போச்சு. அந்த அம்மாவும் அய்யரும் ஊர் மாத்திப் போனாங்க, எங்களுக்கும் ஒரு கை ஒடிஞ்சது. நல்லது பொல்லாது சொல்லிக்கிறத்துக்கும் கேட்டுக்கிறத்துக்கும் எங்களுக்கு அப்புறம் யாரு? அவங்களுக்கும் இங்கே விட்டுப் போனப்பறம் விளங்கல்லே. அய்யர் போன விடத்துலே திடீர்னு பூட்டாரு...”

“அது இல்லே விசயம் இந்த இடத்துலே; அப்படி நீ வைக்கல் பிடுங்கவோ கொழந்தையைக் கொஞ்சவோ போன இடத்தில் நின்னுட்டியா? நீ அப்படியே நின்னுட்டா அய்யர் வீட்டு அம்மா நடையிலே உன்னைக் குந்தவெச்சு இலையிலே சோறு வெக்கமாட்டாங்களா என்ன, அவங்க எல்லாம் சாப்பிட்ட அப்புறமாவது?”

“ஏன் துரோகம் பேசனும்? எத்தனையோ நாளைக்கு அவங்க வீட்டு சோறு நாங்க எல்லோரும் தின்னிருக்கோம். எங்களுக்கு பெசலா புளுங்கரிசி வடிச்சே போடுவாங்க.”

“சரிதான் ஆத்தா, எப்போ சொல்லு?”

“எல்லாம் தட்டினால் முட்டினால், வீட்டுலே விசேடம் வந்தால், வேளாவேளையிலேதான்...நான் பேசப் போனவிடத்துலே தங்கிட்டேன்னா இவுரு சாப்பாட்டை ஆக்கறது. யாரு?”

“ஆ, வந்தியா வழிக்கு! ஏன் உன் மருமவமாரு ரெண்டுபேரு இப்போ இருக்காங்களே, அந்த நாளுலெ மாமியார் இருந்தாங்க—

“இருந்துாட்டா வீட்டைக்கட்டி மேக்கறது யாரு?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/114&oldid=1033447" இலிருந்து மீள்விக்கப்பட்டது