பக்கம்:அஞ்சலி.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஏகா 239

மூச்சுப்பட்ட சாக்கில்—

இல்லை, மூச்சுக்கூடப் படாமலே

கட்டிடம் அடியோடு (அடிவயிற்றில் சில் சுறீல்’) கவிழ்ந்தமாதிரி—

கும்மட்டியுள் உற்று நோக்கினாள். கணகணப்பில் முகம் செந்திட்டிட்டது. கும்மட்டியிலிருந்து தீ நாக்குகள் எழுந்து நாய் நாக்குகள்போல் தாவித் தாவி அவள் முகத்தை நக்க முயன்றன. அவைகளுள் ஒரு கொழுந்து மற்றவையினும் சிற்றதாலோ, வேகமும் வெற்றியும் கொண்டதாலோ, குருவிபோல் தோளில் தொத்திக் கொண்டது.

அவள் போதை இன்னும் தெளியவில்லை. தன் தோள் மேல் குந்திய தழல்பந்தை வியப்புடன் நோக்கினாள். ‘கிர்’ ரென்று அவள் உச்சிக்கேறி, அங்கிருந்து பின் மண்டைக்குச் சறுகி, ப்ரபையாய்ச் சுழித்து விரிந்து மலர்ந்தது.

“வே—வே—வேதா!”

அம்மா போட்ட கத்தலில் கூடம் கிடுகிடுத்தது. காலடியில் பூமி அதிர்ந்தது. அந்த அதிர்ச்சிதான் அவளைச் சுயஉணர்விற்குத் தெளிவித்தது. திடீரென ஆயிரம் ஆலய மணிகள் செவியில் அலறின. கோபுரம் ஒன்று சினத்துச் சாய்ந்து உள் கேவி, அவள்மேல் சரிந்து, அதன் தங்கக் கலசம் மாத்திரம். உள்பெருக்கின் அலைச் சிகரம் உடைந்த நுரைச்சரிவில், மல்லாந்த பம்பரம் போன்று சுழன்று தலையாடித் திளைத்தது. மூடிய இமையில், வாயிலுள் வாயில் எண்ணற்ற வாயில்கள் திறந்துகொண்டே,உள் கடந்துகொண்டே சென்றன.

கும்மட்டிமேல் தடாலென முகம் குப்புற விழுந்துவிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/249&oldid=1033527" இலிருந்து மீள்விக்கப்பட்டது