பக்கம்:அஞ்சலி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240 லா. ச. ராமாமிருதம்

“...........!”

என்னை என் அமைதியில் அழைத்தது யார்?

“...........”

“ஏகா!”

அவள் இமைகள் திறவாது தவித்தன. அவன் கையுள் அவள் விரல்கள் மூழ்கும் பிடியில் கொக்கிபோல் வளைந்து விறைத்தன. கன்னங்களில் ரத்தம் புழுங்கிற்று.

“கண்ணைத் திற!”

“என்னால் முழிக்க முடியவில்லை...”

“இல்லை ஏகா, கண்ணைத் திற; முடியும். உன் கண் நெருப்புப் படவில்லை. ஏகா, நீ கும்மட்டியில் விழுந்தும், மருந்துக்குக்கூட சூடு இல்லை. அதிசயத்தை என்னென்று சொல்ல?”

“நான் என்னுள் என் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறேன்.”

அவள் குரல் மாறிற்று த்வனியில் அதிகாரம்.

“கண்ணைத் திறவாமல், நீ என்னவோ பேசுவது எங்கிருந்தோ யாரோ பேசுவதுபோல் இருக்கிறது.”

“ஆம், என்னையே எனக்கு அழித்துவிட்ட தூய இருளில் நான் இழைந்துபோனேன். நான் எனக்கே அற்றுப்போன இக்கலவையின் பன்மணத்தில் நானும் ஒரு மணம்.”

சொல் அவள் வாயினின்று எழுகையிலேயே அவளிடமிருந்து ‘கம்’மென்று சந்தனம் கமழ்ந்தது.

“என்னடா சொல்றா? என்னவோ மாதிரி பேசறாளேடா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/250&oldid=1033528" இலிருந்து மீள்விக்கப்பட்டது