பக்கம்:அஞ்சலி.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தரங்கிணி 51

வானில் தங்க ரதம் ஒன்று உருவாகி எழும்பியது. கொத்துக் கொத்தாய்ச் சடைபிடித்த பிடரி மயிர் அலை மோத, தலைகள் உதறிக்கொண்டு வெள்ளைக் குதிரைகள் தாமே தோன்றி ரதத்துடன் தம்மைப் பூட்டிக்கொண்டன. ரதம் நகர்ந்தது. சக்கரங்களினடியில் அகிற்புழுதி தோகை தோகையாய் எழும்பிற்று.

ஆனால் தரங்கிணி இன்னும் நிலை அசையாது அப்படியேதான் உட்கார்ந்திருந்தாள். அர்ச்சனைப் புஷ்பங்கள்போல் அவள் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தவண்ணமிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/61&oldid=1033408" இருந்து மீள்விக்கப்பட்டது