பக்கம்:அண்ணலாரும் அறிவியலும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

கடந்த 1989 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள் வாஷிங்டனுக்கு அருகில் உள்ள பால்டிமோர் நகரில் நான் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன் அப்போது அவர் ஒரு கருத்தை மிகஆணித்தரமாக வலியுறுத்திக் கூறினார். “பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் ஆன்மீக அடிப்படையில் மட்டுமே காணுகின்ற மனப்போக்குதான் இன்றுவரை எங்கும் காணப்படுகிறது. திருமறையாம் திருக்குர்ஆனையும் இதே போக்கில் அணுகுகின்ற மனப்பான்மையே இருந்து வருகிறது. இதன் மூலம் அகவாழ்வின் ஒரு புறத்தைத் தான் முஸ்லிம்கள் காணுகின்றனர். ஆனால், மற்றொரு பக்கமாக அமைந்துள்ள புறவாழ்வின் திறம்பாடுகளை அறிகின்ற போக்கு இன்னும் முனைப்புடன் உருவாக வில்லையோ எனக் கருதுகின்றேன். ஏனெனில் இஸ்லாத்தின் உயர்வையும் காலத்தை வென்று நிற்கும் அதன் வெற்றியையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு அணுகும் போதுதான் முழுமையாக அறிந்துணர முடிகிறது. சுருங்கச் சொன்னால், என் கண்ணோட்டத்தில் இஸ்லாம் ஓர் ஒப்பற்ற அறிவியல் மார்க்கம். அதன் உன்னதத்தை அறிவியல் கண்டுபிடிப்புகளின் முடிவுகளே எண்பித்துள்ளன. எண்பித்தும் வருகின்றன. நாளையும் நிரூபிப்பதாய் அமையும். இஸ்லாத்திற்கு உண்மையான விளக்கத்தை இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் மட்டுமே விளக்கியுரைக்க முடியும்” என்று அழுத்தந்திருத்தமாகக் கூறியபோது திருமறையின் திறத்தை விஞ்ஞான உலகம் எம்முறையில் அணுக முயலகிறது என்பதை என்னால் நன்கு உணர முடிந்தது.

அண்ணலார் போட்ட அறிவியல் அடிப்படை

இன்றைய வானளாவிய விஞ்ஞான வளர்ச்சிக்கான அடிப்படை விதையை, ஏற்ற சூழலை உலகில் ஏற்படுத்திய