பக்கம்:அண்ணல் அநுமன்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சொல்லின் செல்வன் 33

ஒர் அம்பு கொண்டு துளைக்கும்படி ஏவச் செய்வதேயாகும்!" என்றான் (83).

இந்த அறிவுரை யோசனையாலும் அது மனது சொல்லாற்றலை அறியலாம்; அவன் சொல்லின் செல்வன் என்பதையும் தெளியலாம்.

(6) வாலிவதை சுக்கிரீவன் ஆட்சி ஆகியவற்றிற்குப் பிறகுதான் அனைத்தும் செய்ய வேண்டுவன எனல் : இராம லக்குமணர்கள் கிட்கிந்தையிலிருக்கும்போது ஒருசமயம் சுக்கிரீவன் பிராட்டியின் திருவாபரணங்கள் அடங்கிய ஒரு முடிச்சைக் கொண்டுவந்து கொடுக்கின்றான். அந்த ஆபரணங்களைக் கண்ணுற்ற இராமன் மூர்ச்சையடை கின்றான். சுக்கிரீவன் தெளிவித்தபின் இராமன் கூறுவது : "அன்பனே, நீ தேற்றியதனால் துன்பத்தை ஒருவாறு தணித்துக்கொண்டேனேயன்றிப் பிழைக்கக் கடவேனோ? இப்பழிதீர மரணம் ஒன்றே வழி என்று கூறியவன், ஆனால், உனது குறையை நிறைவேற்றாமல் மரணத்தை அடையேன் என்று கூறுகின்றான்." இச்சமயத்தில் அநுமன் பேசிய பேச்சு உள்ளத்தை உருக்குவது; சொல்லின் செல்வன் என்பதை நிலைநாட்டுவதாக அமைகின்றது. மாருதி வணங்கிப் பேசுகின்றான். ‘அடியேன் இப்போது கூறவேண்டுவது ஒன்று உள்ளது. அதனை உணர்ந்து திருவுள்ளம் வைத்துக் கேட்பாயாக" " என்று தொடங்குகின்றான்.

“பெருமானே, பிராட்டி இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்குப் பலர் பல இடத்து ஏக காலத்தில் தேட வேண்டுமாதலால்,

" கொடுந்திறல் வாலியைக் கொன்று கோமகன் கடுங்கதி ரோன்மகன்

ஆக்கிக் கைவளர் நெடும்படை காட்டினால்

அன்றி நேடரிது.”16

14. கிட்கிந். கலன்காண் - 26. 15. கிட்கிந். கலன்காண் - 27, 16. கிட்கிந், கலன்காண் - 28…………..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணல்_அநுமன்.pdf/34&oldid=1509383" இலிருந்து மீள்விக்கப்பட்டது