பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103


தேவையில்லை. வேளாண்மை மக்களே உதவிட முன்வருவார்கள். தொழில் முயற்சிகளில் பங்குதாரர்களாகச் சேர்ந்து ஊக்குவிப்பார்கள். இதற்குத் துணை செய்யும் வகையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வேளாண்மை மக்கள் மீது வரி எதுவும் விதிக்காது விடவேண்டும். ஏனெனில் கிராமப் புறங்களில் விவசாயிகளின் கைகளில் காசு புழங்கத் துவங்கியுள்ளது. பணத்தின் ஓசை கேட்கத் துவங்கியுள்ளது.

இப்பொருட் காட்சியைத் தொடர்ந்து உலக வேளாண்மை பொருட் காட்சியை நடத்திட வேண்டும்.தொழிலும், வேளாண்மையும் கைகோர்த்து முன்னேறச் செய்வோம் அதற்கு உலக வேளாண்மைப் பொருட் காட்சியை நடத்துவது உதவும். ஏனைய நாட்டவரெல்லாம் கையாண்ட முறைகளென்ன? எப்படி முன்னேறி வேளாண்மைத் துறையில் வெற்றிகளை ஈட்டினார்கள் என்பதையெல்லாம் நம்மவர்கள் உணர்ந்திடச் செய்வோம்.


இதேபோல நீண்ட கடற்கரையைக் கொண்டது இந்நாடு. டில்லியில் இருப்பவர்கள் கடலைக் காண ஆயிரம் மைல் பயணம் சென்றால்தான் முடியும். இங்கே அப்படியல்ல. எப்பக்கம் சென்றாலும் கடல் அலை உங்கள் கால்களைக் கழுவும். இத்தகைய கடல் வளமுண்டு. எனவே மீன்பிடித் தொழிலும் அபிவிருத்தியடையச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால் உலகில் பல நாடுகளுக்கு மீன் பதப்படுத்தி அனுப்பும் வாய்ப்பு நமக்கு உண்டு.

இங்கே முன்னாள் அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் இருக்கிருக்கிறார். சேலம் இரும்பைப்பற்றி அவரும் சொல்லுவார், ஆனால் வருத்தத்தோடு சொல்லுவார். நாங்கள் இந்த சேலம் இரும்பைக் குறித்து ஆராய்ந்து அனுப்பினோம். சேலத்துக்கு, ஒரு உருக்காலையை அவர்கள் ஏன் வழங்க மறுக்கிறார்கள் என்பதுபற்றி கருத்தைக் கூறும்படி நான் கேட்கமாட்டேன் ஏனெனில் அது அரசியல், அவருக்கானதல்ல, தொழில் உற்-