பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108


கல்யாணம் மணப்பந்தல் போடவேண்டும் என்றால் அவனே முன் வந்து போடுவான்.

'விவசாயக் கூலி பசியோடு போராடுகிறான்' என்று நில உடமையாளர்கள் எழுதி வைத்துப் படித்துப் படித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆத்திரத்திற்குச் சாத்திரமில்லை: பசி வந்திடப் பத்தும் பறந்து போம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆகவே உழவர்களைப் பசியின்றிச் செய்து விட்டுப் பாருங்கள், உற்பத்தி பெருகும்.

டில்லியிடம்
போராடுவேன்

உரத்தின் அளவு அதிகமாக - பெருமளவு தரப்பட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறோம். உழவர்களுக்காக மத்திய அரசாங்கத்திடம் நான் போராடுவேன்.

அவர்களும் அரசு நானும் அரசைச் சார்ந்தவன் என்ற அரச பரம்பரை எண்ணத்தில் இதைச் சொல்லவில்லை. உரத்தின் விலையைக் குறைப்பதால் மிகுந்த நன்மை ஏற்படுமென்று தெரிவித்திருக்கிறேன்.

'பாதைகள் இல்லாமல் திண்டாடுகிறோம்' என்றார்கள். நிலம் பயிரானாலும் பாதை நன்றாக இருந்தால்தான் உற்பத்தியானதை வேறிடங்களுக்குக் கொண்டு செல்லமுடியும். சில நில உடமையாளர்கள் பாதைக்கு விடப்பட்ட நிலத்தையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்கிறார்கள் - அதிகாரிகளும் இதை விட்டுவிடுவதற்குக் காரணம்; பாதையிலே நெல் போட்டால் விளையாது நிலத்தோடு சேர்ந்து விவசாயமானாலும் லாபம் கிடைக்குமென்று விட்டுவிட்டார்கள் என்று கருதுகிறேன்.

பாதைகளை அமைக்க, அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.