பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


இருப்பதால் தான் வீராணம் ஏரியிலிருந்தே தண்ணீர் கொண்டு வர இருக்கிறோம்.

தஞ்சை மாவட்டமும் சிதம்பரமும் வீராணத்திலிருந்து. நீர் எடுப்பதன் மூலம் பாதிக்கப்படும் என்றார்கள். சிதம்பரம் பகுதியிலேயுள்ள பெரிய மிராசுதார்கள் எல்லாம் சென்னையில் என்னுடன் கலந்து பேசினர் --என்ஜினியர்களுடனும் பேசியதற்குப் பிறகு அவர்கள் திருப்தியோடு தான் சென்றிருக்கிறார்கள்.

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கிறோம் என்றால் வீராணத்துக்கு என்று தண்ணீர் கிடையாது. வீராணம் ஒரு பாத்திரம் போன்றதே தவிர அதிலே ஊற்றல்ல! அதிலே தண்ணீர் விட்டுத் தேவைப்படும்போது எடுத்துக் கொள்கிறோம். சென்னைக்குக் குழாய்கள் மூலம் எடுத்து சென்னை மக்களுக்குப் பயன் தரச் செய்ய விரும்புகிறோம்.

சென்னை மக்களுக்கு என்றால் அவர்கள் வேறு என்று எண்ணம் எழக்கூடாது. சொல்லப்போனால் சென்னையில் இப்போது தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் தங்குகிறார்கன். அண்ணன் இங்கே இருந்தால் தம்பி அங்கே இருக்கிறான். சென்னையின் மூன்றில் இரண்டு பங்கு தஞ்சாவூர்க்காரர்கள் தான் இருக்கிறார்கள்.

நான் காவேரித் தண்ணீரை இப்போது தான் குடித்தேன்... இங்கு வரும்போது மட்டும் குடிக்கிறேன். ஆனால் மன்னை தாராயணசாமி அவர்கள் குடிக்கும் தண்ணீரில் முக்கால் பகுதி சென்னைத் தண்ணீராகத்தானே இருக்கிறது.

விவசாயத்துக்குத் துளியும் பாதகமில்லாமல்; தஞ்சை சிதம்பரத்திற்குப் பாதகம் ஏற்படாமல் வீராணம் ஏரித் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.