பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110


யாரையும்
கெடுக்க மாட்டேன்

ஒருவரைக் கெடுத்து இன்னொருவரை வாழ வைக்க நானென்ன அவ்வளவு பைத்தியக்காரனா? யாரையும் கெடுக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கில்லை. ஒருவரின் தேவைக்குப் போக மீதமுள்ளதை மற்றவர்களுக்குத் தந்துதவும் திட்டம் தான் இது!

கருத்தரங்கிலே எடுத்துரைக்கப்படுகிற கருத்துக்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம்.

விவசாயச் செலவு இப்போதிருப்பதைவிடக் குறைய வேண்டும். தேவையான உரமோ, பணமோ தேவையான நேரத்தில் கொடுக்கப்பட வேண்டும். இவை இயற்கையாக எந்த விவசாயியிடத்திலும் எழக்கூடிய கருத்துக்களே.

இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு தக்க பரிகாரம் காணப்படுமென்று உறுதி கூறுகிறேன். இதை எக்காலத்தில் - எந்த அளவில் வேண்டுமென்பதைத் தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை எனக்கு வழங்குங்கள். விவசாயிகள் விசாரப் படாதிருக்கும்படியாக அவர்கள் உற்சாகத்துடன் இருக்கும்படிச் செய்வதற்கு நானும் என்னைச் சார்ந்த நண்பர்களும் தயாராக இருக்கிறோம்.

நெல்லின் விலையை உயர்த்தி உதவவேண்டுமென்று கூறப்பட்டது. உதவி என்பது பல உருவிலும் கிடைத்திடலாம். நெல் விலையை உயர்த்துவதொன்றே உதவியாகி விடாது--விவசாயிகள் விவசாயத்துக்காக வாங்கி உபயோகிக்கும் பண்டங்களின் விலை குறையச் செய்வதால் அந்த உதவியை அளித்திட முடியும். அதை எப்படிச் செய்வதென்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. அதை நடை முறையில் கொண்டுவர அனைவரது ஒத்துழைப்பும் தேவை.