பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


சொல்லியும் - அதையும் மீறி கிடைக்க வேண்டியது எனக்குக் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது.

பாடுபடுகிற உழவனுக்கு நிலம் சொந்தமானால் அவன் நிமிர்ந்து நடப்பான். அவன் நெஞ்சத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எனவே பண்படுத்திய பின் ஒப்படைக்கும் இத்திட்டத்தை வகுத்துச் செயலாற்றவிருக்கிறோம். இன்னும் 10, 15 ஆண்டுகளில் பி.ஏ. பட்டதாரி டிராக்டர் ஓட்டுவதையும் எம்.ஏ பட்டதாரி அறுவடை செய்வதையும் பார்க்கலாம்.

"நான் உழைக்கிறேன் அதிலிருந்து பலன் பெறுகிறேன்." என்று சொல்லத்தக்க விதத்தில் படித்த பட்டதாரிகளும் உழைப்பார்கள்.

படித்தவர்களும் விவசாயத்தில்
ஈடு படவேண்டும் !

நூற்றுக்கு நூறு பேர் படிக்க வேண்டும் - படித்தவர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் கிடைக்கின்றபலன் மிக அதிகமாக இருக்கும். படிப்பறியாத விவசாயி உரம் கேட்டால் அதிகாரிகளிடமிருந்து வருகின்ற பதில் வேறாக இருக்கும். போய் முத்துசாமியை அழைத்துவா என்பார்கள். அதையே ஒரு பி.ஏ. பட்டதாரி! கேட்டால் - கேட்கும் குரல் மட்டுமல்ல; கிடைக்கும் பலனும் வேறாக இருக்கும்.

படித்தவன் உழவேண்டும் - உழுபவன் படிக்கவேண்டும். படிப்பான்; அறிவுப்பசியைத் தீர்க்க - உழுவான் உற்பத்தியைப் பெருக்க என்ற நிலை ஏற்பட வேண்டும்.

நமக்கு நல்ல ஆறுகள் இல்லை என்றார்கள். உண்மை தான். பாலைவனமாக உள்ள இஸ்ரேல் நாட்டில் தண்ணீரையும் உரத்தையும் பயிர் செய்வோரையும் தாங்கிக் கொள்கிற அளவுக்கு நிலம் இருந்தால் போதுமென்று பயிர் செய்கிறார்கள்.