பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


ரூபாய்க்கு ஒரு - படி அரிசி போடுவதற்கு சர்க்கார்‌ பல்‌வேறு சங்கடங்களைத்‌ தாங்கிக்‌ கொள்வதற்குக்‌ காரணம்‌ - அரிசி விலை குறையுமானால்‌ மற்ற பொருள்களின் விலைவாசியும் குறையும்‌ என்று நம்புகிறேன்‌.

மற்ற பண்டங்களின்‌ விலைகளும்‌ ஏழை மக்களின்‌ வாழ்க்கைக்‌ கேற்ற வண்ணம்‌ கட்டுக்குள்‌ அடங்கும்‌. - இது சமூகம்‌ முழுவதற்கும்‌ பலனளிக்கும்‌!

அப்படி ரூபாய்க்குப்‌ படி அரிசி என்று போடுவதால் சர்க்காருக்கு ஏற்படும்‌ நஷ்டம்‌ 8, 9 கோடியிலிருந்து 10 கோடிவரை ஆகலாம்‌ என்று அதிகாரிகள்‌ புள்ளி விவரம் தருகிறாா்கள்.

விவரம் தெரியாதவர்களல்ல
நாங்கள்‌

சங்கடங்களையெல்லாம்‌ தாங்கிக்‌ கொண்டாகிலும்‌ மக்களுக்குள்ள கஷ்டங்களைப்‌ போக்கவேண்டும்‌ - அவர்களுக்கு உணவளிக்கவேண்டு மென்றுதான்‌ தாங்கள்‌ விரும்புகிறோம்‌.

நீந்தக்‌ கற்றுக்‌ கொள்வதென்றால்‌ தண்ணீரில்‌ தான்‌ முடியும்‌! நீந்தக்‌ கற்றுக்கொள்கிறேன்‌ என்று வெற்றுத்‌ தரையில்‌ விழுந்து முயற்சி செய்தால்‌ எப்படி முடியும்‌?

நீந்தக்கற்றுக்‌ கொள்ள தண்ணீரில்‌ இறங்கித்தான்‌ ஆக வேண்டும்‌! இதனால்‌ சிரமங்கள்‌ ஏற்படத்தான்‌ செய்யும்‌ - மூச்சுத்‌ திணறும்‌ - மூக்கிலும்‌ வாயிலும்‌ தண்ணீர்‌ புகுந்து விடும்‌! சுழலில்‌. சிக்கிக்கொள்ளாமலும்‌ இருக்கவேண்டும்‌ என்ற பாதுகாப்போடும்தான்‌ இடுப்பிலே கயிற்றைக்‌ கட்டிக்‌ கொண்டு கரையிலே ஒரு ஆளையும்‌ நிறுத்திவைத்து விட்டுத்‌ தான் தண்ணீரிலே இறங்கியிருக்கிறோம்‌ - இத்தனை சங்கடங்களையும் ஏற்றுக்‌ கொண்டதால்தான் நீந்தக் கற்றுக் கொள்ள முடியும் !