பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


மூழ்கிப் போகும் அளவுக்கு விவரம் தெரியாதவர்கள் இன்றையதினம் ஆட்சிக்கு வந்து விடவில்லை!

விவசாயிகள்
முற்போக்கானவர்

தமிழகத்தில் விவசாயிகள் முற்போக்கானவர்கள். நாம் கணக்கைப் போட்டு முடிப்பதற்குள் அவர்கள் கணக்கைப் போட்டு நமக்கு சொல்லுகிறார்கள். எத்தகைய நவீனவிவசாய முறையானாலும் அவற்றை ஏற்று செயல்படுத்திட அவர்கள் தயங்குவதில்லை. 'மாறிய நிலைக்கேற்ப வசதிகளைக் கொடுத்திடுக என்று நம்மை அவர்கள் கேட்டபடி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள நாம் தடைகள் எல்லாவற்றையும் மீறி முன்னேறிவிட்டோம் என்றும் தமிழ் நாடு உணவு உற்பத்தியில் உபரி மாநிலமென்றும் ஓர் நினைப்பு பரவியுள்ளது. இத்தகைய நினைப்பு ஏற்பட ஒருவகையில் நாமும் காரணம். எனினும் இது சரியல்ல. இது நீக்கப்படவேண்டும்.

நாம் முன்னேற்றப் பாதையில் செல்கிறோம். ஆனால் முன்னேறிவிடவில்லை, கடந்த ஆண்டு நாம் பெற்ற நல்ல விளைச்சல் தொடர்ந்து இருக்குமா என்பதை நாம் பொறுத்துப் பார்க்க வேண்டும். ஆக நமக்கு அவகாசம் அளித்து மத்திய அரசும் மற்றவர்களும் நம்மோடு துணைநிற்பார்களானால் விவசாயத்துறையில் சிறப்பான வெற்றிகளை நாம் தேடிட முடியும்.

தஞ்சை, திருச்சி, வடஆற்காடு, செங்கல்பட்டு, நெல்லையில் கணிசமான பகுதி ஆகியவற்றில் நெல்விளைச்சல் முழு அளவுக்கு நடைபெறுமானால் தமிழகத்தின் இதர மாவட்டங்களை பருத்தி, கரும்பு, நவதானியங்கள் ஆகியவற்றின். சாகுபடிக்கென ஒதுக்கிடலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக நிலைமை அவ்வாறில்லை ஒரு சில இடங்களில் ஒரு ஏக்கருக்-