பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


-டால் நல்ல பலனையளிக்கும். ஒருமைப்பாடு பற்றி பேசும் மத்திய அரசு இதை கவனத்தில் வைக்க வேண்டும்.

விவசாயிகள் அதைச் செய்ய வேண்டும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறி விட்டு அவர்களுக்குத் தேவையானதைத் தராவிட்டால் அது பசியைக் கிளறிவிட்டு விட்டு சோறு போடாமல் பட்டினி போடுவதற்கு ஒப்பாகும்.

வர்த்தக. பாங்குகள் விவசாயக் காரியங்களுக்காக கடன் வசதியளிக்க முன்வர வேண்டும். விவசாயக் காரியங்களுக்குக் கடன் கொடுக்கிறோம் என்று வர்த்தக பாங்கி ஒன்றின் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். முதலில் செங்கற்பட்டு மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறோம். ஐந்தாண்டுகளில் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய கடனாக எட்டரை விகித வட்டியின் பேரில் நிதியுதவி செய்யலாம் என்று அவர்கள் சொன்னார்கள். இதை நமது விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்களா?

குறைந்த வட்டிக்கு 15, அல்லது 20 ஆண்டுகள் தவணை கொடுத்தும் கடன் வசூலாவதில்லையே, வர்த்தக பாங்கியினருடைய நிபந்தனைக்கா உட்படப் போகிறார்கள்? என்றாலும் இவையெல்லாம் பரிசீலிக்கப்பட வேண்டிய விஷயம்.

எப்படியேனும் விவசாயிகளுக்குத் தேவையான கடன் - சிக்கலில்லாமல் கிடைக்க வேண்டுமென்பதற்காகச் சில திட்டங்களைத் தயாரித்து வருகிறோம். சர்க்கார் மட்டுமே அல்லாமல் வேறு நிதி உதவி நிறுவனங்களும் விவசாயக் காரியங்களுக்காக கடன் வழங்க வகை செய்து சில விதிகளைச் செய்ய இருக்கிறோம்.

உதவிகிடைத்தால் அயல் நாட்டுக்கும்
அரிசி அனுப்பலாம்

தமிழக விவசாயத்துக்கு அவசியமான நிதி உதவிகளை மத்திய அரசு அளித்திடுமானால் இன்னும் இரண்டு ஆண்டு-