பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


அரசியல் சட்டம்
திருத்தப்பட வேண்டும்.

அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான தக்க தருணம் வந்திருக்கிறது.

"சட்டத்தைத் திருத்துவது என்பதுபற்றி யாரும் எந்தவித நடுக்கமும் கொள்ளத் தேவையில்லை.

அரசியல் சட்டத்தை அலசி ஆராய்ந்து விமர்சித்துத் திருத்துவதற்கு சட்டத்தின் மூலம் வாய்ப்பளிக்க வேண்டும். என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரே சொல்லியிருக்கிறார்.

திருத்தப்பட வேண்டுமென்று வற்புறுத்துவதற்குக் காரணமே அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்!

அன்னிய ஆக்கிரமிப்பிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கும் - உள் நாட்டிலே ஒற்றுமை உண்டாக்குவதற்குமான அதிகாரங்களை மட்டும் மத்திய அரசு தன்பொறுப்பில் வைத்திருந்தால்போதும். மாநில அரசுகளின் வரவு விவகாரத்தில் மத்திய அரசு தலையிடத் தேவையில்லை.

பொதுவாக இன்றையதினம் அரசாங்க நிர்வாக இயந்திரம் சரிவர இயங்கவில்லை.

இருப்பினும் பொது மக்களின் ஊக்கமும் ஆக்கமும் இருந்தால் அரசாங்க நிர்வாக இயந்திரம் சரிவரச் செயல்பட முடியும் - அதைச் செம்மைப் படுத்த முடியும்.

மக்கள் சக்தியால் தான் நிருவாக இயந்திரத்தைச் சரிவர இயக்க முடியும்.

வெள்ளைக்காரன் தான் இந்த நிர்வாக இயந்திரத்தையே கொடுத்துவிட்டுப் போனதாக சிலருக்கு நினைப்பு இருக்கிறது.