பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57


தமிழ் நாட்டில் சேரர்களும் சோழ மன்னர்களும்-பாண்டிய மன்னர்களும் ஆண்ட காலத்திலேயும் -- வட நாட்டில் வேறு மன்னர்களின் அரசுகள் இருந்த நிலைமையையும் பார்க்கும்போதும் அன்றைக்கே நம்முடைய நாட்டில் மிகச் சிறந்த முறையில் அரசு நிர்வாக இயந்திரம் செயல்பட்டு வந்தது தெரியும் !

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நல்ல அரசு இயந்திரம் நம் நாட்டில் இருந்திருக்கிறது.

தமிழர்கள் நீண்ட நெடுங்காலமாகவே அரசு நிர்வாகத்தை மிகுந்த திறம்பட இயக்கி வந்திருக்கிறார்கள் என்பதற்காகச் செப்பேடுகளும் கல்வெட்டு ஆதாரங்களும் இருக்கின்றன !

ஆனால் இடையில் அவற்றைச் சரிவரப் பயன்படுத்தத் தவறியதால் அரசு நிர்வாக இயத்திரத்தை துருப்பிடிக்க விட்டு விட்டாேம்; அப்படித் துருப்பிடித்துவிட்ட நிர்வாக இயந்திரம் சரிப்படுத்தப்பட வேண்டும்.

வணிகர்களும் --- வழக்கறிஞர்களும் --- மருத்துவர்களும் பிற பட்டதாரிகளும் அரசியலுக்கு வரவேண்டுமென்பது எனது நீண்ட நாளைய விருப்பமாகும். பொது வாழ்வில் இப்படிப்பட்டவர்கள் ஈடுபடாமல் யார் எப்படிப் போனாலென்ன என்று இருந்துவிடக் கூடாது.

மத்திய அரசிடமிருக்கும் அதிகாரங்கள் எல்லாம் மாநில அரசுகளுக்கு நியாயத்தின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

அப்படி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும்! வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது பல்வேறு அரசுகள் அதிகாரக் குவிப்பினால்தான் அழிந்தன என்பது புலனாகும்.

குப்தப் பேரரசு முகலாயப் பேரரசுகளெல்லாம் அதிகாரக் குவியலின் காரணமாகத்தான் சரிந்து போயின. அந்த நிலை