பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


வரி மூலம் மட்டும் பணத்தைத் திரட்டி மக்களின் குறைகளைத் தீர்த்துவிடமுடியும் என்று கருத முடியாது, வரி ஓரளவு தான் பயன்படும், மக்களின் வசதி வாய்ப்புகளும் பெருகவேண்டும். ஆகவே மத்திய அரசு பல தொழில்களில் போட்டிருக்கின்ற மூலதனத்துக்கான பலன் கிடைத்திட வழி செய்திட வேண்டும்;

மத்திய அரசு இரண்டாயிரம் கோடி ரூபாயில் பிலாய் ரூர்கேலா, சிந்திரி போன்ற தொழில்களில் தனது மூலதனத்தை முடக்கியுள்ளது. இந்த இரண்டாயிரம் கோடி ரூபாயும் எங்கிருந்து கிடைக்கும்? நீங்களும் நானும் வரியாகக் கொடுத்தது, அமெரிக்கா இங்கு கொடுத்தது, இப்படியெல்லாம் திரட்டப்பட்ட பணத்தை மூலதனமாக்கிப் போட்ட தொழில்களில் கிடைத்த லாபமென்ன?

கொடுத்த மக்கள் பலனைப்பெறவில்லை, கடன் கொடுத்த நாடுகளுக்கு வட்டியும் செலுத்தியபாடில்லை.

2000 கோடி ரூபாய் மூலதனம் போட்டு தொழில் பெற வேண்டிய அளவு பலன்களைப் பெற்றோமில்லை.

நீ செய்வதுதானே என்று கேட்பார்களானால் தமிழ் நாட்டிற்கு இருக்கும் தொழில்கள் என்ன? எப்படிப் பெறமுடியும் என்பதை உணரவேண்டும்.

பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையும் ஆவடி டாங்கித் தொழிற்சாலையும் திருச்சி கொதிகலன் தொழிற்சாலையும் துப்பாக்கித் தொழிற்சாலையும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை. நம்மிடம் இருப்பதெல்லாம் காஞ்சி சுடர் தீப்பெட்டித் தொழிற்சாலையும் மாலு செருப்புத் தொழிற்சாலையும் விருத்தாசலம் களிமண் பொம்மைத் தயாரிப்புத் தொழிற்சாலையும், தஞ்சயில் பனை ஓலையில் நேர்த்தியான பொம்மை செய்யும் நிலையமும், கோரைப்பாய் உற்பத்தி செய்யும் நிலையமும் இருக்கின்றன.

மிகப் பெரிய தொழிற்சாலைகள் யாவும் மத்திய அரசிடமே உள்ளன. உதகை பிலிம் தொழிற்சாலையும் நெய்வேலி பழுப்பு