பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


யாது என்று சொல்லி விட்டால் -- தமிழக அரசு அதனை நிறைவேற்றத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் அன்னியச் செலாவணி-வெளிநாட்டுக் கடன், ரூபாய் மதிப்புக் குறைப்பு இவைகளை மத்திய அரசு கண்டிப்பாக காரணமாகக் காட்டக்கூடாது.

சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஜப்பானிலிருந்து வந்த நிபுணர்கள் என்னை ஒரு மாதத்திலேயே நான்கு ஐந்து, முறை சந்தித்துவிட்டார்கள் - இதற்குத் தேவைப்படுவது எழுபது கோடி ரூபாய் உள்நாட்டுப் பணம்.

இதை நான் ஐந்தாறு தொழில் நிறுவனங்கள் - பாங்குகளிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளமுடியும். அதற்கு மத்திய அரசின் அனுமதி தேவை.

வற்புறுத்தத் தவறியவர்
வருத்தம் அடைதல் நியாயமா ?

நேற்றைய தினம் ஆளுங்கட்சியாக இருந்து - இன்றைய தினம் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்கள் எழுச்சி நாளுக்காக வருத்தப்படுகிறார்கள். அவர்கள் ஆளுங்கட்சியாக இருந்த காலத்தில் இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் மனுப்போட்டுக் கொண்டிருந்தார்களே தவிர வற்புறுத்தத் தவறி விட்டார்கள். வற்புறுத்தியிருந்தால் மத்திய அரசு இந்நேரம் உணர்ந்திருக்கும். (இன்றைக்கு அந்த வேலையை நமக்குத் தந்திருக்கிறார்கள்,

எல்லாக்கட்சிகளும் பங்கேற்பதைப் பார்த்த பிறகும் "ஒரு ஆட்சியை நடத்துகிறவர்கள் இப்படி எழுச்சி நாள் நடத்தலாமா?" எனக் காங்கிரசார் கேட்கிறார்கள்.

பல்லக்கிலே போகின்றான் ஒருவன்-பாதையிலே குழந்தை ஒன்றை ஓநாய் கடித்துக் கொண்டிருக்கிறது. உடனே அவன் பல்லக்கை விட்டு இறங்கி குழந்தையைக் காப்பாற்ற முயற்சி செய்தால் "ஐயோ பல்லக்கில் செல்லும் உனக்கு ஏன்