பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

தால் தொழில் கெடுமா? இல்லை தொழில் நிறுத்தம் தான் ஏற்படுமா?

நலிந்த தொழிலாளி
மாண்டால்...?

நன்றாக ஓடிய பந்தயக் குதிரை கொஞ்சம் நொண்டியானால் கூட சுட்டு விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதுபோல தொழிலாளர் நலிவடைந்தால் அவர்களை விரட்டிவிடக்கூடாது.

சுடப்பட்ட குதிரை இறந்த பின்பு அதன் குட்டிகளை அடுத்தவர் யாராவது வாங்கி வளர்த்துக் கொள்வார். ஆனால் நலிவடைந்த தொழிலாளி மாள நேர்ந்தால் அவன் குடும்பத்தை யார் காப்பாற்றுவது.?

அமெரிக்காவிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இயந்திரம் தருவிக்கலாம். ஆனால் மனித இயந்திரங்களைத் தருவிக்க முடியாது. அந்த இயந்திரத்தையும் மனித இயந்திரம் தான் செய்கிறது. நூற்றில் ஒரு பங்காவது பாட்டாளி நலனில் அக்கறை காட்ட வேண்டும்.

தொழிலாளர் கோரிக்கைகளில் ஏதேனும் ஒன்றையாவது முதலாளி நிறைவேற்ற வேண்டும். அதற்குப் பதில்—கோரிக்கைகளைக் கவனிக்காமல் முடியாது போ என்றால் உழைப்'பாளர்கள் எல்லாமே வேண்டுமென்று தான் சொல்வார்கள்

நீதி இருக்குமிடத்தில்
நானிருப்பேன்

அந்த வேளையில் என்னிடம் வந்தால் நீதி எங்கே இருக்கிறதோ அங்கே நானிருப்பேன். அப்படி நான் நீதி எங்கேயிருக்கிறது என்று ஆராய்ந்து பார்ப்பதற்குள் பலர் வீட்டு அடுப்படியில் பூனைகள் தூங்கிக் கொண்டிருக்கும்.