பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


முன்பு காச நோய் வந்தவர்களை வீட்டிலிருப்பவர்கள் பார்த்தால் அழுவார்கள். இன்னும் எத்தனை மாதம் எத்தனை வாரம் எத்தனை நாள் உயிர் வாழ்வாரோ என்று அஞ்சுவார்கள். அந்த பயத்தைப் போக்கி இருக்கிறோம்.

இன்னும் மருத்துவர்களே கண்டு பயப்படும் நோயாக புற்று நோய் இருந்து வருகிறது. அதுவுங்கூட ஆரம்ப காலத்திலேயே வந்தால் குணப்படுத்தி விடலாம் என்று கூறுகிறார்கள். மருத்துவ வித்தகர்கள் முறையாக ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த மருத்துவமளை அதிகாரிகள் தொழிலாளர்களின் நலிவு நீங்கும் வகையில் அன்போடு பணிபுரிந்து வெற்றி பெற வேண்டும்.

ஆற்றல்
நம்மிடம் உண்டு

வெற்றிமேல் வெற்றியைக் குவித்துள்ளது சில நிறுவனம். தரம்மிக்க பொருள்களை உள்நாட்டுத் தேவைக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுமளவுக்கு சில தொழில் நிறுவனம் உற்பத்தி செய்தளிக்கிறது. இதிலிருந்து தக்க வசதிகள் அளிக்கப்பட்டால் உலகம் எதிர்நோக்கும் காரியங்களைச் செய்து முடிக்கும் ஆற்றல் நம்மிடமுண்டு என்பதை இது காட்டுவதோடு, தொழில் முன்னேற்றத்தில் நமக்கு ஒளிமிகுந்த எதிர்காலம் உண்டு என்பதையும் காட்டுவதாக உள்ளது.

ராணுவத்திலே, அரசியலிலே வளர்ந்த இதர நாடுகளின் வரிசையில் நாம் இல்லாதிருக்கலாம். ஆனால் தொழில்களுக்குத் தேவையான அறிவிலோ ஆற்றலிலோ நாம் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

ஆயினும் பொதுத்துறைத் தொழில்கள் ஏன் முன்னேற்றம் காண்பதில்லை என்ற கேள்வி என்னுள் எழுகிறது. அவற்-