பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84


செய்த காரியங்கள் கொஞ்சம். செய்து முடிக்கவேண்டிய காரியங்கள் ஏராளமாக உள்ளது. அந்த வடிவத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு நாம் மலைத்துத் திகைத்துவிடலாகாது-நம்பிக்கையோடு இயன்றவரை காரியம் செய்வோம்.

தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்றம் பெற வேண்டுமென்ற என் நல்லெண்ணத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிக்கல் உள்ளது
நூல்!

இந்தக் கைத்தறித் தொழிலில் தொடர்பும் அக்கறையும் (அமைச்சர்) பொறுப்பேற்றுக் கொண்ட இந்த நேரத்தில் மட்டுமல்ல! அதற்கு முன்பிருந்தே எனக்கு இருக்கிறது. இதற்குரிய ஒரு காரணம் - நான் பிறந்து - வளர்ந்து - வாழ்கிற காஞ்சிபுரம் - நெசவாளர்கள் நிறைந்து வாழ்கிற பகுதியாகும்! காஞ்சிபுரம் என்பது நெசவாளர்கள் நிரம்பிய பேட்டைகளும், கடை வீதிகளும் அதை நம்பி வாழும் மக்களும் நிரம்பியதுதான்!

பல ஆண்டுக் காலமாக அவர்களது கஷ்டங்களை நேரடியாக உணர்கிற காரணத்தால் அந்தத் தொழிலில் தொடர்ந்து நான் அக்கறை காட்டுவது இயற்கை. நெசவாளர்களது கஷ்டங்கள் நாளுக்குநாள் வளர்ந்து கொண்டிருக்கின்றன - என்றும் அதற்கான சரியான பரிகாரங்கள் கிடைக்கவில்லை என்றும் இங்கே கூறினார்கள். நூல் - எப்போதும் சிக்கலுக்கு ஆளாவது. தான்! நூலுடன் தொடர்பு கொண்ட நெசவாளா் வாழ்க்கையும் சிக்கல்கொண்டதுதான். பக்குவமாக அந்தச் சிக்கலை நீக்குவதுதான் மிக முக்கியமான தேவையாகும். மற்ற ஆலைத் தொழிலுக்குக் கிடைக்காத வாய்ப்பும் வசதியும் - விஞ்ஞான கருவிகளின் உதவியும் கிடைக்காதபோதும் கூட - நேர்த்தியான மெச்சத்தக்க துணிகளை கைத்தறியாளர்கள் தயாரித்து வருகிறார்கள்!