பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

87


அப்படிப்பட்ட நிலையில் "காஞ்சிபுரம் சேலை தெரியுமா? திருநெல்வேலி குண்டங்கி தெரியுமா ? புளியங்குடி வேட்டியின் நயம் தெரியுமா? கடையநல்லூர் சரக்கு நல்ல சரக்கு" என்று கூறினால் - அந்தப் பேச்சில் உயிர் இல்லாமல் போய் விடும்!

ஆகவே அவர்களும் கைத்தறியாடைகளை அணிந்து கொண்டு - உலகச் சந்தைகளில் மட்டுமல்ல - ஒவ்வொரு இடத்திலும், கைத்தறிக்குச் சந்தை ஏற்படுத்த வேண்டும்.

தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு மாலையணிவிப்போர் கைத்தறியாடைகளை அணிவித்தால் போதும் என்று கூறினோம். முதலில் அது கேலியாகக் கருதப்பட்டாலும், இன்றைய தினம் பல்வேறு கட்சிகளும் அந்த முறையைப் பின்பற்றுகின்றன. இதனால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பவில்லை; கைத்தறியாளர் பிரச்சினையை நினைவூட்டவே அந்தமுறை மேற்கொள்ளப்படுகிறது,

டில்லி சென்றிருந்தபோது கூட மற்றவர்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன, எனக்கு மட்டும் கைத்தறியாடைகள் அணிவிக்கப்பட்டன. ஏன் என்று கேட்டதற்கு 'உங்களுக்கு இந்த ஆடைகள் தானே பிடிக்கும்?'-என்றார்கள்.

ஆனால் இதனால் மட்டும் பிரச்சினைகள் தீராது. நமது மத்திய அரசு உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்தால் நிச்சயம் இதற்கொரு வழி பிறக்கும்.

மத்திய அரசுடன் வம்புக்கு நிற்க நான் விரும்பவில்லை. அதனால்தான் நம்ம மத்திய அரசு' என்று பாத்யதை கொண்டாடிக் கூறுகிறேன்.

மத்திய அரசின்
பொறுப்பு.

கோடிக் கணக்கான மக்கள் இந்தத் தொழிலால் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - உண்மையைச் சொன்னால் வதை பட்-