41
வேளாண்மைத் துறையில் முழுமையான வளர்ச்சியை நாம் பெற வேண்டும். விவசாயத்தில் ஈடுபட்டு இருப்போரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான், வாங்கும் சக்தி அதிகரிக்கும். அப்பொழுதுதான், அதிக அளவில் தொழிற்சாலைகள் உருவாக முடியும். அனைவரும் பொருட்களை வாங்கும் அளவில், தொழிற்சாலைகளில் நவீன முறைகளைப் புகுத்திப் பொருள்களின் விலைகளைக் குறைக்கவேண்டும்.
வகைப்பாடு : பொருளாதாரம்—தொழில் வளர்ச்சி
(4-5-67 அன்று மேட்டூர்ப் பிளாஸ்டிக் தொழிற்சாலைத் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை.)
11. நிலை இதுவே
கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்று கோரினீர்கள். தமிழக அரசுக்குக் கிடைக்கும் ஒரு சில பெரிய வருவாய்களில் அதுவும் ஒன்றாகும். அந்த வரி இல்லையென்றால், மாநில அரசு இயங்க முடியாது.
நான் திரைப்படத் தொழிலை நசுக்க மாட்டேன். அந்தத் தொழிலுக்கு இப்போது செய்ய எண்ணி இருக்கும் நல்ல காரியங்களைக் கொஞ்சம் தள்ளிப்
6–F