பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45-

"தமிழில் கற்பிக்கலாமா?” என்னுங் கேள்வியும், " முடியுமா?’ என்னும் எதிர்ப்பும், பார்க்கலாம்” என்னும் சந்தேகமும், தமிழ்மொழிப் பயிற்சி பெறு பவர்கள் என்ன ஆவார்கள் ? இதுவரைப் பெற்ற வர்கள் என்ன ஆனார்கள்?’ என்று இந்தநாட்டிலே தான் பேசப்படுகிறது.
இதற்குக் காரணம் அந்நிய ஆட்சியில் இந்த நாடு இருந்தது. அ ப் போது தமிழ் நாட்டங் கொண்டவர்களைப் பார்க்க முடியாது. நாட்டங் கொண்டிருந்தவர்களும் புலவர் என்னும் பட்டத் தோடு சரி.
இப்போது நிலை அப்படியல்ல. தமிழ்மொழி மீது நாளுக்குநாள் அக்கறை ஏற்பட்டுவருகிறது. இது தேவைதானு என்று பேசப்பட்ட காலத்தில் நான் படித்தவன். தமிழை எங்கே பார்க்கலாம் என்று தேடித் தேடிப் பார்த்தால் அங்காடியில் பார்க்கலாம். அதை விட்டுவிட்டு ஆவலோடு வீட்டுக்குப்போல்ை பார்க்கலாம். வீட்டிலே போய்த் தமிழில் பேசில்ை பெற்றேர்கள், இதற்குத்தான் இவ்வளவு பணங் கொடுத்துப் படிக்க வைத்தேனு ?” என்று சொல் வார்கள்.

“ என்னுடைய வீட்டில் என் சி ன் ன ம் மா ஆங்கிலத்தில் பேசு ’ என்று சொல்வார்கள். " பேசில்ை உனக்குப் புரியுமா ?” என்று கேட் டால், புரிகிறதோ இல்லையோ, பேசு” என்பார்கள்.

பேசில்ை அண்டை வீட்டுக்காரர்களை அழைத்து வந்து காட்டிப் பெருமைபட்டுக் கொள்வார்கள்.