பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிதேவன் மயக்கம் [பூலோகத்திலே புதுக் கருத்துக்கள் பரவிவிட்டன. வாம். பழைய நிகழ்ச்சிகளுக்கு நாம் கூறின முடிவுகள், தீர்ப்புகள் தவறு என்று புகார் கிளம்பிவிட்டது. ஆகவே, இனிப் பழைய தீர்ப்புகள் செல்லுபடியாகா என்று கூறிவிடு வார்கள் போலிருக்கிறது. இதை உத்தேசித்து, புனர் விசாரணைக் கோர்ட் நியமித்திருக்கிறேன். என்று ஆண்டவன் அறிவித்தார். நீதிதேவன், வழக்கு மன்றத்தைக் கூட்டினார். முதல் புனர் விசாரணையாக,இராவணனின் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கம்பர், பழைய கோர்ட் தீர்ப்பின்படி இராவணன் குற்றவாளிதான், இலங்கை அழிந்தது நியாயமே, இராவணன் இரக்கமற்ற அரக்கன், என்று நீதிதேவனிடம் சமர்ப்பிக்கிறார். இராவணன் தன் வழக்கைத் தானே நடத்த இசைகிறான். கோர்ட்டிலே, நீதி தேவன் தலைமை தாங்குகிறார். கம்பர், ஓலைச் சுவடிகளுடன், தயாராக இருக்கிறார். சாட்சிக் ளாகச் சூர்ப்பனகையும், கைகேயியும் ஆஜராகி யுள்ளனர். இராவணன், எப்போதும்போலவே கெம்பீரமாக வருகிறான். வழக்கு ஆரம்ப

மாகிறது.)

104