பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மாரி: வாங்கம்மா அவரு கொரங்கு வேறே வந்திருக்கு, குத்திவிட. சு: யாரு! மா:ஜெமீன்தாருதான். சு: சரி, சேகர், வருகிறேன். சே: போகிறாயா? நானும்...... சு: நீங்கள் கொஞ்ச நேரம் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருங்கள். சே: சரி, போய்வா. ஒரு இரவு முழுவதும் விளையாடினால் கூட இந்தப் பிள்ளைகளுக்குச் சலிப்பு ஏது? மா : நான் வந்து கூப்பிடுகிறவரை, ஐயாவுக்குந்தான் சலிப்பு இல்லை. [மாரியும் சுசீலாவும் போகின்றனர்.] காட்சி 12 டம் :- தேவர் மாளிகை. இருப்போர்:-தேவர், ஜெகவீரர். [சுசீலா உள்ளே நுழைந்ததும் ஜெகவீரர் பேசுகிறார்.] ஜெ: (கேலியா ) சுசீலா தேவியாரா? சு:(மரியாதையுடன்) நமஸ்காரம். ஜெ: (கேலியாக) ஆசீர்வாதம்! உட்காரேன் இப்படி (ஒரு நாற்காலியைக் காட்டுகிறார்.] தலைவலி. மாடிக்குப் போகிறேன். ஜெ: விளையாடியது டாக்டரிடம், வருவது தலைவலியா, வேடிக்கைதான்,

தே: அம்மா சுசீலா! இதோ பார். நான் உனக்கு இனியும் விவரமாகக் கூறிக்கொண்டிருக்கப் போவதில்லை. தெரிகிறதா. ஏதோ நானும் தாயில்லாதவளாயிற்றே என்று பொறுத்துக் கொண்டு வருகிறேன். இனி என்னால் முடியாது. நாளைக்கு உனக்கு நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்து விட்டேன்.

18