பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மி: நடுநிசி! நடுநிசியாக இருந்தால் என்னடி உனக்கு. இந்த நடுநிசியிலும், வழியிலே எவனாவது கிடைப்பான், போ. [சொர்ணத்தைத் துரத்துகிறார். அவள் தள்ளாடித் தோட்டத்தைவிட்டுச் செல்கிறாள். தேவர் தெளிவடைகிறார். அவரை மிட்டாதாரர் மறு படியும் தாக்க, தேவர், மிட்டாதாரர் காலில் வீழ்ந்து] தே: துரோகம் செய்துவிட்டேன்; நான் துரோகி, துரோகி, மன்னிக்கவேண்டும்....... மி: மன்னிக்க வேண்டும்! உன்னை! விருந்துக்கு வந்த இடத்தில் விபசாரியை விபசாரத்துக்கு இழுத்த உன்னை? அடே! கருணாகரா! என்னிடம் பேசாதே! நில்லாதே; எழுந்து நட! தேவரும் தள்ளாடி நடந்து போகிறார்] இடம் :- பாதை காட்சி 21 இருப்போர் -தேவர், சொர்ணம். [தள்ளாடிச் செல்லும் சொர்ணம் பாதையில் ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். வந்து சேருகிறார்.] தேவரும் சொ துரையே! அந்தச் சிறையிலிருந்து வெளிவந்து விட்டேன். நான் பட்ட இம்சையைக்கூட மறந்து விடுகிறேன்;. என்னால் தங்களுக்கு இந்தக் கஷ்டம் வந்ததே. தே: வாழ்க்கையிலே மறக்கமுடியாத அவமானத்தை அடைந்தேன். தீராத பகை மூண்டுவிட்டது எனக்கும் மிட்டா தாரருக்கும். சொ: எல்லாம் என்னால்...... இந்தப் பாதகியால். தே: ஆமாம். (வெறுப்புடன் கூறுகிறார்) சொ : (திகைக்கிறாள், தேவர் பேச்சுக் கேட்டு) என்ன? என்னாலா? உங்கள் வாயால் அப்படிச் சொல்லாதீர். நான் எவ் வளவோ தடுத்தேன், பொறிபறக்கப் பேசினேன், நீங்கள் தானே அழுது நின்றீர்.

47

47