பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தே: எனக்குச் சபலம் பிறந்தது, மயங்கினேன். அவ்வளவு சம்பத்துடன் அவன் உன்னை வைத்திருக்கும்போது, உனக்கு எப்படியடி துரோக சிந்தனை ஏற்பட்டது? சொ: (பதைபதைத்து) ஈஸ்வரா! என்னை நீங்களுமா நிந்திக்கவேண்டும்? உங்களால் நான் இந்தக் கதியானேன்! நடுநசியில் மாளிகையிலிருந்து விரட்டப்படுகிறேன். அதைப்பற்றிக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தவில்லை... நான் தே: ஏன் பொருட்படுத்தப் போகிறாய்? அவன் போனால் இவன் என்று தீர்மானித்து விட்டாய். அவ்வளவு தானே உனக்கு. [சொர்ணம் தலையில் அடித்துக்கொண்டு ] சொ: தெய்வமே! தெய்வமே! சொ : போகாதீர். தே [ தேவர் வேகமாகப் போகிறார் சொர்ணம் பின் தொடர்கிறாள்] என் கதி என்ன் ? ஐயோ ! என்னைக் கைவிடாதீர். சொர்ணம் என் கோபத்தை அதிகப்படுத்தாதே. அழகான நிலவு! நீயோ எனக்குப் பால்ய சிநேகம் ! மேலும் ஒருவனுடைய வைப்பாக இருப்பவள். அந்த நிலையில் ஏதோ உன்னிடம் சரசமாடும் சபலம் பிறந்தது. போராத வேளை, அவன் பார்த்துவிட்டான். அதற்கு நான் என்ன செய்வது? நானும்தான் அடிபட்டேன். நடக்கக்கூட முடியவில்லை. ! சொ: என்னைக் காப்பாற்ற முடியாது ! அவ்வளவு தானே. தே: என் மனைவி யார் தெரியுமா? சொ : தெரியும். அழகி. பார்த்திருக்கிறேன் பவானியை. தே: அந்த ஜெமீன் வீட்டுப் பெண்ணை மணந்துகொண்ட நான், உன்னோடு குடித்தனம் செய்தால், உலகம் என்ன சொல்லும்? மேலும் உன்னோடு நான் குடித்தனம் செய்தால் மிட்டாதாரன் என்னைச் சும்மா விடமாட்டான். சொ: பயம், போலி கெளரவம்! பழைய வியாதிதான்! தே: சொர்ணம் ! நீ பெரிய வாயாடியாகிவிட்டாய் இப்போது. சொ: உங்களைப்போன்ற வஞ்சகர்கள் வதைத்ததால்! அன்பரே! என்னைக் கைவிடாதீர்! மயக்கமொழி பேசி என் மனதைக் கெடுத்துவிட்டு, என்னை மண்ணில் புரளும்படி விட்டு

48

48