பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ந: [காதிலே வைத்துப் பார்க்கிறார். பூட்டிவிட மறு படியும் பார்க்கிறார்.) ஏன் ஓடலியா? சீ : ஓடுதே! (மறுபடி பார்த்து ) சாவி கொடுக்கலையா? ஓடுதே! டேய்! ஓடிப்போய் அம்மாவைக் கேள், சாவி கொடுத் தாங்களா இல்லையான்னு. வே: சின்ன அம்மாவையா, பெரிய அம்மாவையா? சீ: பெரிய அம்மாதானே சாவி கொடுக்கற வழக்கம். கொடுத்தாங்களான்னு சின்ன அம்மாவைப் போய்க் கேள். (கோவிந்தனைப் பார்த்து] சரி ! கோவிந்தா. என்ன சேதி, சொல்லி அழு. கோ: அதாங்க, வயல் வறண்டு போச்சிங்க. இந்த வருஷம் ஏதாச்சும் தள்ளிக் கொடுத்தாத்தான் நான் தலைதூக்க முடியும்... சீ : நீ பெரிய அயோக்யன்னு எனக்குத் தெரியுமே! பஞ்சப் வயல் காஞ்சா எனக்கென்ன ?. பாட்டு பாடவந்துட்டயோ. விளைஞ்சா எனக்கென்ன. (நண்பனைப் பார்த்து] கேளய்யா, அவன் சொல்ற கதையே. வயிறு எறியுது! பய எப்பவும் இதே சேதிதான்.ஒருநாளாவது நிம்மதியான பேச்சு கிடையாது. ந: (கோவிந்தனைப் பார்த்து)ஏம்பா, அவரைக் கஷ்டப் படுத்தறே. கோ: (நண்பனைப் பார்த்து) என்னாங்க, நீங்கதான் சொல்லுங்களேன். மழை அடியோடு ஏறக்கட்டிடுத்தே, நான் என்னாச் செய்யறதுங்க. ந : ஆமாம்! மழைதான் இல்லாமே போச்சு. சீ: மழை இல்லாவிட்டா என்னா? கிணறு எங்கே போச்சு. காலா காலத்திலே வயலுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்யவேணாம்னு யாரப்பா இவன் கையைப் பிடிச்சிக்கிட்டாங்க. கோவிந்தா ! இதோ பாரு! ஒரு ரூபாகூடத் தள்ளிக்கொடுக்க முடியாது. நமக்கு இந்த வருஷம் செலவுமேலே செலவு. இருக் கறதைக் கொடுத்துவிட்டு, மிச்சத்துக்கு ஒரு அண்டிமாண்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் போ.

59

59