பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காட்சி 28 இடம் :- தோட்டக்காரன் வீடு. இருப்போர்:- தேவர், சொர்ணம், தோட்டக்காரன். [தேவர் கொஞ்சம் தெளிவுடன் இருக்கிறார். சொர்ணம் வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள். தோட்டக்காரன் பொட்டலத்துடன் வந்து சேருகிறான். சொர்ணத் திடம் பொட்டலத்தைக் கொடுத்து.] ஒரு தோ: சாப்பிடம்மா! சாப்பிடு! அரமனை பலகாரம் அருமையா இருக்கும். [சொர்ணம் பொட்டலத்தைப் பிரித்து, பலகாரத் தைத் தோட்டகாரனுக்குத் தர, அவன் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டே.] நான் அங்கேயே சாப்பிட்டுவிட்டுதான் வந்தேன். நீ சாப்பிடு. இதெல்லாம் நமக்கு எப்போதுமா கிடைக்கும்? சாப்பிடு. சொ: அரமனையிலே, விருந்து பலமா? தோ: பலத்துக்கு என்ன குறைவு? எங்க எஜமானரு இந்த வருஷம் கலர் வியாபாரத்திலே மட்டும் ஆறு லட்சம் அடிச்சாரு லாபம். சொ: அம்மாடி! ஆறு லட்சமா? தோ: ஆமாம்! ஆனை வாகன உற்சவம், இந்த வருஷம் அவருதானே நடத்தினாரு. ஐஞ்சி ரூவா வர்ணப்பெட்டி எழுவது ரூபாய்க்கு வித்தாரில்லே, ரொம்ப சாமத்தியக்காரரு. சொ: அப்படியா? தோ இவரு சொல்றாரே. [தேவரைக் காட்டி.) யாராரோ ஜெமீன்தாருங்கன்னு. அவங்க எல்லாம், நம்ம எஜமானருகிட்ட ஒண்ணும் செய்திக்க முடியாது. 1. LOT! ரொம்பப் பேரு அவருக்கிட்ட கடன் வாங்கினவங்கத்தான். இப்ப, அரமனையிலே ஒரு ஜெமீன் தாரன்தான் கடக்கறான். பாட்டுக் கச்சேரிக்குக்கூட ஒருத்தியைக் கூடவே கூட்டிகிட்டு வந்திருக்கிறான்.

61.

61