பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சொ: யாரு அவ? தோ: ரொம்ப ஒழுங்காத்தான் இருக்கறா. ஆனா, எங்க எஜமானரு இருக்காரே, அவர் பக்கா, இந்த மாதிரி விஷயத்திலே. வந்திருக்திறவளும், ரொம்ப வெட்கப்படுகிற மாதிரியும் காட்டிக்கிறா. ஆனா அவதான் எங்க எஜமானருக்குக் காப்பி ஊத்திக் குடுக்கறா? சொ: அம்மா! ரொம்பக் கெட்டிக்காரிதான் போலிருக்கு. தோ அவரு, அதைக் காப்பின்னு நினைச்சா குடிச்சாரு! என்னமோ கதையிலே சொல்வாங்களே தேவாம்ருதம்னு, அதுன்னு நினைச்சிக்கிட்டுக் குடிச்சாரு. அது கிடக்குது. (தேவரைக் காட்டி) ஐயா சொன்னாரு? சொ: ஜூரம் இல்லை இப்போ. என்னா தோ: அட அதெ இல்லைம்மா! உன் விஷயமாக என்ன சொன்னாரு? சொ: நான் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேனே! அவரு உடம்பு சொஸ்தமானதும், மகராஜனாகப் போகட்டும் வீட்டுக்கு. நான், இங்கேயே இருந்து உனக்கு சமைச்சிப் போட்டுகிட்டு இருக்கிறேன். தோ: என்னாம்மா இது! உனக்குக் குழந்தை குட்டி..... சொ: (கண்களைத் துடைத்துக்கொண்டு ) ஒரே ஒரு மகன். எல்லாம் இவராட்டமேதான் இருப்பான். தோ: எங்கே இருக்கிறான்?

சொ: ரெபர்மடரி ஸ்கூலிலே. தோ: அப்படின்னா என்னா? (தேவர் திடுக்கிடுகிறார்] சொ: சிறு பிள்ளைக திருடினா, அதுகளைப் பிடிச்சி, மூணு வருஷம் ஐந்து வருஷம்னு தண்டிச்சி ஒரு பள்ளிக்கூடத்திலே மடக்கிப் போட்டு வைப்பாங்க. ரத்னம், அந்தப் பள்ளிக் கூடத்திலேதான் இருக்கிறான். [தேவர் முகத்தைக் கைகளால் மூடிக் கொள்கிறார்.

62

62