பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தோ: அவங்க அப்பன் ஜெமீன் வீடு, அவன் ஜெயிலிலே. ஒழுங்காத்தான் இருக்குது. சரிம்மா நான் போயிட்டு வாரேன். அங்கே பாட்டுக் கச்சேரி நடந்துகொண்டிருக்கும். சொ: ஏண்ணா! சமயல் செய்தாச்சி! இவருக்கும் கஞ்சி கொடுத்தாச்சி. எனக்கு பாட்டு கேட்கறதுன்னா ரொம்பப் பிரியம். நானும் வரட்டுமா? தோ: வாயேன்! தோட்டத்துப் பார்க்கலாம். வா. பக்கமா இருந்து (இருவரும் போகின்றனர்] காட்சி 29 இடம் :- சீமான் மாளிகை. இருப்போர் :-ஜெகவீரன், விலாசனி,சீமான், நண்பர் இருவர். [விலாசனி பாடுகிறாள். நண்பர்கள் தாம்பூலம் போட்டுக்கொள்ளுகின்றனர். ஜெகவீரன், சிகரெட் பிடிக்கிறான், சீமான், ஆனந்த பரவச மாகி இருக்கிறார். பாட்டு முடிகிறது. விலாசனி முகத்தில் ஒழுகும் வியர்வையைத் துடைத்துக் கொள்கிறாள்.] காட்சி 30 இடம்:-சீமான். மாளிகைத் தோட்டம். இருப்போர்:-தோட்டக்காரன், சொர்ணம். [சொர்ணம், ஒரு ஜன்னல் வழியாகப் பார்க்கிறாள். கச்சேரி செய்பவளை திகைத்துப் தோட்டக்காரனை அழைத்து.) சொ: பாடுகிறவ பேர் என்ன சொன்னார்கள்? தோ என்னமோ விலாசனியாம். 63

போய்,

63