பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ: உங்கள் குடும்பத்திலே உள்ள ஊழலை. தே: சொர்ணம்! அளவுமீறிப் போகிறாயே. சொ: நானல்ல! அளவுமீறிப் போய்விட்டது, உங்கள் குடும்ப ஊழல். தே: இது என்ன உளறல், ஊழலா? சொ: உன் மனைவியின் யோக்யதையை. (கூறிவிட்டு, மிரள மிரள விழிக்கிறாள், ஆத்திரத் துடன். கண்களிலே நீர் கொப்பளிக்கிறது. தேவருக்கும் அந்தச் சொல்லைக் கேட்டதும் ஆத்திரம் பொங்குகிறது.] தே: பவானி மீதா பழி சுமத்துகிறாய்? சொ: பவானி ! பவானியும் ஒரு சொர்ணம்தான்! {அதிகக் கோபமடைந்த தேவர், அருகே நின்றிருந்த சொர்ணத்தை எட்டி உதைக்கிறார்.) தே: கழுதே ! கொன்றுவிடுவேன், பவானியை ! நாயே! சொ: (தைரியமாக) வேதனைப்படு! ஆனால் பொய்யல்ல நான் பேசுவது. (துள்ளி எழுந்திருக்கிறார் தேவர். சொர்ணத்தின் தலை மயிரைப் பிடித்திழுத்துக் குலுக்கி.) தே: புறப்படு! ருஜு காட்டு! நாயே! உத்தமி பவானி யையா கேவலமாகப் பேசுகிறாய்? சொ: வா! (இருவரும் ஆவேசம் பிடித்தவர்கள் போலக் கிளம்பு கின்றனர். தேவரால் சரியாக நடக்கமுடியவில்லை. காலைத் தேய்த்துத் தேய்த்து நடக்கவேண்டி இருக் கிறது. ஆத்திரம் அவருக்குப் புது சக்தி அளித் திருக்கிறது. சொர்ணம், தேவரின் கரத்தைப் பிடித்திழுக்கிறாள். இருவரும் செல்கின்றனர்.].

65

65