பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீமான் வருகிறார். பத்திரத்தைக் கொடுத்து] சீ: திருப்திதானே! ஜெ: ஆஹா ! விலாசனி, தோட்டத்தைச் சுற்றிப்பார்க்க ஆசைப்படுகிறாள். [சீமானைப் பார்த்து கண் ஜடை. காட்டுகிறான். ஜெகவீரன்.] சீ: ஆஹா! அழைத்துக்கொண்டு போய்க்காட்டு, நமது தோட்டம் நாலு ஏகர் விஸ்தீரணம். [ஜெகவீரன் காமிராவைக் காட்டி] நமக்கு இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பது என்றால் ரொம்பப் பிரியம். [விலாசனியும் ஜெகவீரனும் போகின்றனர்.] காட்சி 33 இடம் :- சீமான் மாளிகைத் தோட்டம். இருப்போர்:-ஜெகவீரன், விலாசனி. [தோட்டத்தில் மரத்தடியில் ஒரு சோகமாக நிற்கிறாள்.] விலாசனி ! வி : இன்னமுமா விலாசனி! என்னை விலாசனி என்று கூப்பிடும்போது எனக்கு எவ்வளவு வேதனை உண்டாகிறது தெரியுமா? விலாசனி ஜெ: இன்னம் இரண்டு மணி நேரம் ; பிறகு விலாசனி மறைவாள். இரு! நான் சில காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டு வருகிறேன். [ஜெகவீரன் போகிறான். வேறோர் பக்கமிருந்து 67 சொர்ணம். தேவரை தொலைவிலே இழுத்துக்கொண்டு வருகிறாள்.

விலாசனியைக் கண்டதும் பதைபதைத்து]

67