பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ர்: சாவுக்கே பயப்படலேன்னா நிஜத்தைச் சொல்ல ணுமானா, எனக்கு இலேசா பயமா இருந்தது, அவளைப்பார்த்து. அவள் தன் நிலைமையைச் சொல்லி, ஒரு உதவி செய்யச் சொன்னா. சொ : உன்னையா? ர: ஆமாம்மா! என்னைத்தான்! சொ: நீ என்னா உதவி செய்யறதாம். ர: கேளு, அந்த கூத்தையும். நாடகம் ஆடச் சொன்னா அந்தப் பெண்ணு. கொஞ்ச நேரம் காதல் சொ: என்னாது? காதல் நாடகமா? ர: (சிரித்துக்கொண்டு) ஆமாம்மா! அவளை நான் காத லிப்பதுபோல நடிக்கச் சொன்னா. சொ: இது என்னடா பைத்யக்கார வேலை. ர: பைத்தியமில்லை. அவ மாமன் அங்கே வருவான், இதைப் பார்ப்பான், உடனே, சே ! இவ இப்படிப்பட்ட நடத் தைக்காரியான்னு நினைச்சுக் காரி முழிஞ்சிட்டுப் போவான், கலியாணத்துலே இருந்து தப்பித்துக் கொள்ளலாம்னு, அந்தத் தந்திரம். அதுக்காகத்தான் என்னைக் கொஞ்சநேரம் காதலனாக இருக்கச் சொன்னா. சொ: பலே சாமர்த்தியக்காரிதான். ர: களவாடப்போன இடத்திலே இந்த உத்தியோகம் கிடைச்சுதா, சரின்னு ஒத்துக்கொண்டேன். அவ சொன்ன படியே, அந்தப் பய வந்தான். சொ: யாரு? அவ் மாமன், யாரோ ஜெமீன்தாரன். சொ: வந்து? ர: வந்து, ஆசாமி அப்படியே ஆவேசம் வந்தவன் மாதிரி ஆடினான்; பாவம், யாருக்குத்தான் ஆத்திரமா இருக்காது. தான் கலியாணம் செய்துகொள்ளணும்னு இருக்கற பெண், பாதி ராத்திரியிலே ஒரு கள்ள புருஷனோடே விளையாடறதைப் பார்த்தா மனசு பதறாதா? அவன் கண்டானா, இது தந்திரம்னு. புலி மாதிரி சீறினான். நானும் சும்மா இல்லை, நல்ல சண்டை, நல்ல அடி, நல்ல உதை இரண்டுபேருக்கும்.

1

77