பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொ: அட பாவமே! அவ என்ன ஆனா? அம்மா! இந்த அன்யாயத்தைப் பாரு. அவளே தான், எனக்கு இப்படி இப்படி நடக்க வேணும்னு சொன்னா. ஜமீன் தாரன் வருவான், நான் பயப்படுகிறமாதிரி பாசாங்கு செய்வேன், கெஞ்சிக் கூத்தாடுவேன், நீ எதையும் கவனிக்காதே, அவனுக்குச் சரியான உதை கொடுன்னு சொல்லிக்கொடுத்தா. கடைசியிலே, அவ, அவனுடன் சேர்ந்து கொண்டு விரட்டினா. அடிச்சி சொ: ஏன்? ர: ஏனோ ? ஆத்திரம் எனக்கு. இவளுக்காக, நான் காதல் வேஷம் போட்டுகிட்டது வீண் வேலை. அவனிடம் அனாவசிய மான சண்டை ; கடைசியிலே, அவ, நம்மையே திருப்பிக்கிட்டா; நல்லா திட்டிப்போட்டேன். [மறைந்திருந்த சேகர், இந்தச் சம்பாஷணையைக் கேட்டுத் தன்னையும் மறந்து) என்னையே ஆஹா! சுசீலா! நீ மாசற்றவள் ! உன்மீது வீணாகச் சந்தேகித்தேன். - {குரல் கேட்டு ரத்னம் அலற, சேகர் அவனருகே வந்து) சே: அப்பா! ரத்னம்! என் வயற்றிலே பால் வார்த்தாயே சுசீலா, என்னைக் காதலிக்கிறாள். அவளை வற்புறுத்துபவன், அவள் மாமன் ஜெமீன்தாரன். அந்தக் காமுகனிடமிருந்து தப்பித்துக்கொள்ளவே, அவள் அந்த ஏற்பாடு செய்தாள். அவன் வரவேண்டிய சமயத்தில் எதிர்பாராதவிதமாக நான் வர நேரிட்டது. அதனாலே விபரீதமாகிவிட்டது, அப்படியானா, ர : (ஆச்சரியத்துடன்) அவளுடைய மாமன், ஜெமீன்தாரன். 70 அல்லவா சே: இல்லை ! நான் டாக்டர் சேகர் ! ர: அட இழவே! விஷயம் எப்படியோ போய் எப்படியோ முடிந்துவிட்டது. சொ: அப்பா! இங்கே வாடாப்பா! பெண்ணுக மேலே. திடீல் திடீல்னு ஆண் பிள்ளைக சந்தேகப்படுவது பெரிய நோயாப் போச்சி. அந்தச் சாபக்கேட்டாலே, பெண்கள் படுகிற கஷ்டம். இருக்கே. சொல்லி முடியாதப்பா. வீணாச் சந்தேப்பட்டு, ஒரு பெரிய மனுஷர். தன் சொந்தப் பெண்ஜாதியைக் கொலை.

செய்ததை நான் கண்ணாலே பார்த்திருக்கிறேண்டாப்பா.

78